Sunday, July 26, 2009

தமிழர்களின் மானம் காத்த மலையாளிகள்.

மேசர் இரவி மற்றும் செல்வமணியின் தயாரிப்பான இரண்டு படங்கள். ஒன்று தமிழ் படைப்பான குற்றபத்ரிக்கை மற்றும் மலையாள படைப்பான மேசர் இரவி இயக்கிய மிசன் 90 நாட்கள் படமும்.

இரண்டு படங்களின் நோக்கமும் ஒன்றே தான் இருப்பினும், கதையும் அதன் பின்னனியும் ஆராயும் படமாக இரண்டும் அமைவதே இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை.

தமிழில் வந்த குற்றபதிரிக்கை படமானது தமிழர்களின் நோக்கத்திற்கு கலங்கம் கற்பிக்கும் விதமாக படமாக்க பட்டிரிப்பது உண்மை. இதன் அடுத்த வடிவம் குப்பி என்னறு சொன்னால் அது மிகையாகாது.

இரண்டு படங்களின் நோக்கமும் இந்திய மண்ணில் நடந்த படுகொலைக்கு காரணம் தேட முற்படுவதே என்று அமைந்தாலும். ஒரே மண்ணை சேர்ந்தவர்கள் அனுகும் முறையை விட மிகவும் மரியாதையாக மலைடயாள படம் அமைந்து இருப்பது என்னவோ உண்மை.

இதற்கு முன்னால் மலையாள படமான மிசன் 60 நாட்கள் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை தான். அதனால் குற்றபத்திரிக்கை படத்தில் சொன்னவைகள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொண்டதாக நிகைக்க வேண்டாம்.

கதையை எழுதும் ஆசிரியருக்கு தெரியும் கதையை எப்படி நகற்ற வேண்டு என்று. அதுவும் கதையை பற்றி மற்ற யாவருக்கும் ஏதும் தெரியவில்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் பார்ப்பவர்களின் காதுகளில் பூ சுற்றுவது ஒன்றும் பெரிதான காரியம் இல்லை.

இருப்பினும் சமுதாய நலன் கருதி எடுக்கும் படங்களிலும் சரி, கதை மற்றும் கற்பனைகளிலும் சரி. நீதி கடைபிடித்து சொல்ல பட்டால் அதில் சிக்கல்கள் ஏதுமே இல்லை தான்.

இந்த கடைமையில் இருந்து தவறுவர்களை தண்டிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சாதாரண குடிமகனில் இருந்து நீதிபதிகள் வரையிலும் உண்டு என்றால் அது மிகையாகாது.

சரி படத்தின் கதைக்கு வருவோம். இரண்டு படங்களிலும், கதையின் காரணத்தை சொல்ல முற்பட்டாலும் கதையின் காரணத்தை முழுமையாக தமிழிலோ அல்லது மலையாளத்திலோ சொல்ல விடாமல் தடுத்த பெருமை இந்திய திரைப்பட தன்னிகை குழுவை முற்றிலும் சாரும் என்றால் அது மிகையாகாது.

இதில் எங்கே மலையாள படம் தமிழ் படத்தை விஞ்சியது என்று நீங்கள் கேட்பது காதில் ஒலிக்காமல் இல்லை.

செல்வமணியை பொருத்த வரை வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்தவரும் அவரது மனைவியும் குற்றவாளிககாக ஆக்கபடுகின்றனர், அல்லது கருத்தாக்கம் செய்யப்படுகின்றனர்.

ஆனால் மலையாள படத்தில் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை இந்திய பாதுகாப்பு படையினரது தலைமை அதிகாரி தைரியம் மிக்க இளைஞர்கள் மற்றும் புத்திசாலிகளும் கூட என்று வசனத்தில் சொல்லும் காட்சிகளில் நன்றி மிக்கவர்கள் என்று சொன்ன நீங்கள் வாழ்க.

ஏதோ ஒரு தனி மனித வாழ்கயின் சுங்களுக்ம் துக்கங்க்களும் தான் ஈழத்தமிழர்களது வாழ்க்கை என்று உலகம் சொல்லிக்கொண்டு திரியும் தருவாயில். உண்மை அப்படி இல்லை என்று பொது மக்களுக்கு முதல் மற்ற அனைத்து மக்களுக்கும் விளக்கும் விதமாக நடந்து கொண்ட மலையாள நண்பர்களுக்கு நன்றி.

2 comments:

')) said...

உங்களின் பார்வை சரியாகத்தான் இருக்க்கிறது. ஆனால் எழுத்துப் பிழைகளை தவிர்க்கலாமே. pls visit my www.kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

')) said...

நண்பர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ் இப்போது தான் கற்றுக்கொண்டு இருக்கின்றே. இன்னமும் அதிக கவனம் கொள்கிறேன்...