Wednesday, June 22, 2016

பாசக - மோடி, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை எப்படி விரயம் செய்கிறது பாருங்கள்

சர்வ தேச யோக தினமாம் நேற்று அந்த தினத்தை ஒட்டி நாடு முழுதும் அந்த ஒற்றை நாளில் கோடான கோடி மக்கள் இந்தியாவில் யோகா செய்வதாக வெளி நாடுகளுக்கு கணக்கு காட்ட எண்ணி. பெரு நகரங்கள் மற்றும் மாவட்ட தலை நகர்கள் வரை பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி நெடுநாள் பயிற்சி கொடுத்து நேற்று மைதானங்கள் முழுதும் அரங்காக அமைத்து கூட்டம் கூட்டமாக கூடி படம் எடுத்து வெளி நாடுகள் பர்க்கும் படி வெளியிட்டுள்ளார்கள் பாசகவினர்கள்.

இதில் அரியானாவில் நடந்த கூட்டத்தில் மட்டும் 30,000 மக்கள் பங்கு கொண்டதாக தினமலரில் செய்தி வெளியாக இருக்கிறது. ஆக இரு மனிதனுக்கு ஒரு யோக விரிப்பு என்றால் அங்கே குறைந்தது 30,000 விரிப்புகள் பயன் படுத்து இருக்க வேண்டும்.

ஒரு விரிப்பு சுமார் 200 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட 60 கோடி வெறும் விரிப்புகளுக்கு மட்டும், மேலும் மோடியை தவிர மற்ற அனைவரும் சீருடை அணிந்து இருப்பதையும் படங்களில் நம்மால் காண முடியும். இரு உடை 500 ரூபாய்க்கள் என்று வைத்துக்கொண்டால் கூட 15 கோடி ஆகுகின்றது.

இந்த 30,000 மக்களும் வெறும் மாணவர்கள் இல்லை வேலை பார்ப்பவர்களும் கூட 80% என்று வைத்துக்கொண்டால் கூட 24,000 ஆவர்.

அனேகமாக மோடியுடன் யோகம் செய்யப்போகும் மனிதர்கள் கட்டாயம் சாலையில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அது பாசக தூக்கிப்பிடிக்கும் வர்க நிலைகளுக்கு நேர் எதிரானது. ஆக ஒன்று அரசு உயரதிகாரிகளாக இருக்க வேண்டும் அல்லது அதாணி குழுமத்தின் உயர் சம்பளம் வாங்கும் அதிகாரியாக இருக்க வேண்டும்.

 நேற்றோ திங்கள் கிழமை வேலை நாள், இந்த 24,000 பேருக்கு எவ்வளவு ஒரு நாளைய சம்பளம் இருக்கும், தலைக்கு மாதம் 30,000 என்று குறைந்த பட்ச்சம் வைத்துக்கொண்டால் கூட ஒருவருக்கு 1000 ஒரு நாளைக்கு ஆகும் ஆக 30 கோடி.

இத்தனை மக்களுக்கும் என்ன அந்த இடத்திற்கு சொந்த செலவிலா கூட்டிக்கொண்டு வந்து இருப்பார்கள், பாதுகாப்பு காரணங்கள் காட்டி சிறப்பு வாகனங்களில் வந்து இருப்பார்கள். ஒருவர் அரசு வாகங்களில் பயணிக்க இப்போது குறைந்தது 5 ரூபாய் ஆகுகின்றது. இதுவோ சர்வதேச யோக தினமாச்சே, படம் எடுப்பவர்களோ, படத்தை பார்ப்பவர்களோ வெளிநாட்டு காரர்கள். அவர்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்றால் பென்சு நிறுவனமோ அல்லது அவர்களுக்கு ஈடான நிறுவனத்தின் வண்டியில் வந்து இறங்கியதாக காட்டினால் தான் வெளி நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்றது பாசகவின் துவக நிலை தொண்டருக்கு கூட தெரியும். ஆக குறைந்தது இரு வரை கூட்டி வரும் செலவு அனேகமாக 250 ரூபாய் என்று குறைந்த பட்சமாக வைத்துக்கொண்டாலும் 7.5 கோடி என்று வருகின்றது.

யோகம் செய்ய வந்தவர்கள் வந்தும் யோகம் துவங்கி முடித்துவிட்டு செல்பவர்கள் இல்லை, வந்து களைப்பு தெரியாமல் இருக்க காலை சிற்றுண்டி, மற்றும் கிளம்பும் முன் உணவு என்று கொடுத்துதான் அனுப்பி இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் இந்த 3 மணி நேர தயாரிப்பில் வெளி நாட்டு மக்கள் பார்க்கும் காட்சிகளில் யோகம் செய்பவர்கள் எல்லாம் களைத்து போய் அல்லவா காட்சியளிப்பார்கள்.

அதனால் ஒருவருக்கு 250+250 என்று உயர் தர சைவ உணவு சரவணபவன் விலைக்கு வைத்தால் கூட 15 கோடி பணம் வருகின்றது.

வந்த அத்துனை மக்களும் சுத்தமான குடி நீர்ரும் மேலும் களைப்பு தீர்க்கும் பானங்களும் கொடுத்து இருக்க வேண்டும். அவைகளும் அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்கும் நீர் மொந்தைகளாக இருந்தால் தான் இந்தியாவிற்கு மதிப்பு. ஒரு மொந்தை அமெரிக்க நிறுவனங்களால் விற்க்கப்படுவது குறைந்தது 35 ரூபாய்கள், ஒருவருக்கு வந்ததும் குடிக்க, பிறகு யோகத்து முன் பின் உணவுக்கு என்று வைத்துக்கொண்டால் கூட 4 மொந்தைகளாவது தேவை. ஆக 4.2 கோடியாவது செலவாகி இருக்க வேண்டும்.

இந்த யோகம் செய்யும் நிகழ்ச்சியில் மக்கள் வேர்க்க விருவிருக்க இருந்தால் பார்ப்பவர்கள் யோகம் செய்வது கடினம் என்று நினைத்து விளம்பரத்தை நம்பாமல் போய்விடுவார்கள் ஆக அத்தனை மக்களின் களைப்பு தீர்க்க ஒரு சின்ன அறைக்கு 1.5 டன் குளிரூட்டும் இயந்தரம் தேவை. இந்த வெட்ட வெளிக்கு இது போல் 10 மடங்கு இருந்தால் தான் கொஞ்சமாவது குளிர் உறைக்கும் ஆக  ஒருவருக்கு 1500 டன் குளிரூட்டும் சாதணம் தேவை.

குறைந்தது 4 மணி நேரமாவது இந்த சாதணம் ஓடியாக் வேண்டும், இயந்தர வாடகை, கொண்டு வர, போக, மின்சாரம் என்று வைத்துக்கொண்டால் கூட குறைந்தது ஒரு 30 கோடியாவது அகி இருக்கும்.

யார் யாரை எல்லாம் கூட்டி வருவது என்ற கணக்கு எடுக்க, பாசக அனுதாபிகளாக பார்த்து பிடிக்க என்ற செலவு ஒரு 30 கோடி ஆகி இருக்கும்.

இந்த மக்கள் அனைவருக்கும் புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டைக்கு தலைக்கு 100 முதல் 200 வரை செலவாக இருக்கும் ஆக மொத்தம் 6 கோடி ஆகி இருக்கும்.

இப்படி சர்வதேச யோக தினத்தில் கலந்து கொண்டார்கள் என்ற சான்றிதழும் நினைவு பரிசையும் கட்டாயம் வழங்கி இருப்பார்கள். ஒருவருக்கு குறைந்தது 500 என்று வைத்துக்கொண்டால் கூட 15 கோடி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி இரு பாசகவின் பிரச்சார கூட்டம் இதில் வந்தவர்களை எப்படி வெறுமனே என்று அனுப்புவது ஆக பாசகவின் விளக்க புத்தகம் முதல் யோகத்தின் பக்கவிளைவுகள் வரை கத்துக்குட்டிகள் வரை எழுதிய இந்தி மற்றும் சமசுகிரித புத்தகங்களை வினியோகம் ஆகி இருக்கும் அது ஒரு 15 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

ஆக குறைந்த பட்ச கணக்கா பார்த்தோமானால்

1) விரிப்பு 15 கோடி
2) வேலை பார்க்காமல் யோகம் பார்க்க கொடுத்த சம்பளம் 30 கோடி
3) போக்குவரத்து செலவு 7.5 கோடி
4) உயர்தர உணவு செலவு 15 கோடி
5) குடி நீர் மற்றும் களைப்பாரும் பானம் 4.2 கோடி
6) குளிரூட்டு செலவு 30 கோடி
7) பாசக அனுதாபிகளை கண்டுபிடிக்க ஆன செலவு 30 கோடி
8) புகைபடத்துடன் அடையாள அட்டை செலவு 6 கோடி
9) சான்றிதழ் மற்றும் பரிசு செலவு 15 கோடி
10) பாசக பிரச்சார நூல்கள் செலவு 15 கோடி

ஆக மொத்த குறைந்த பட்ச செலவு  167.7, ஏன் 170 கோடி என்று வைத்துக்கொள்வோம். இது ஒரு இடத்தில் நடந்த செலவு .

பிரதமர் இல்லாத இடத்தில் இதைவிட ஒரு 20 கோடி குறைவாக ஆகி இருக்கும் 150 கோடி என்று வைத்துக்கொள்வோம்.

இந்தியாவில் 29 மாநிலம் மற்றும் 7 தனி மாநிலம்.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள், உத்திரபிரதேசத்தி 72 மாவட்டங்கள், ஆக ஒரு சராசரியாக எடுத்தால் ஒரு மா நிலத்தில் 35 மாவட்டங்கள் என்று வைத்துகொண்டால் கூட மொத்தல் இந்தியா முழுவதும் 1050 மா நிலங்கள். ஆக மொத்தம் 150*1050 = 157500 கோடி செலவானதாக வருகின்றது.

இந்த பணம் அதாணியின் வீட்டில் இருந்து வந்தது இல்லை, வரிகட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சாதாரண மனிதனின் வரிப்பணம்.

பாசகவின் பிரச்சாரத்திற்கு ஏன் இந்த 1,58,000 கோடி மக்களின் வரிப்பணம் செலவு செய்ய வேண்டும் அதுவும் இந்த ஒரு நாள் கூத்திற்கு. இது இந்தியாவில் ஆன செலவு மட்டும்.

இது போக வெளி நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகத்தில் செய்த செலவை இந்த கணக்கில் சேர்க்கவில்லை.அதையும் சேர்த்தால் இந்த செலவு இரு மடங்காக வரும்.

இப்படி பாசகவின் பிரச்சாரத்திற்காக சாதாரண மக்களின் வரிப்பணம் எவ்வளவு தான் செய்வார்கள் இந்த மோடியும் அவர்களது கூட்டமும். யார் இதை எல்லாம் கேள்வி கேட்பது.

ஒரு வேளை விசயகாந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் ஒற்றை காலிலே ஒரு உதைவிட்டு கேள்வி கேட்டு இருப்பார், பாவம் அவருக்கு அந்த வாய்ய்பு இல்லை என்ன செய்ய..........

இந்த ஒன்றே கண்ணை கட்டுதே இன்னும் மிச்சம் இருக்கும் காலம் எல்லாம் எப்படி போகபோகுதோ...........அனுபவிங்க மக்கா அனுபவிங்க........


0 comments: