Monday, May 30, 2016

வன்னியர்மணி என்ற அன்புமணியின் குழந்தை தனமான பேட்டி

தேர்தலுக்கு பின் ஊடகங்களின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் வன்னியர்மணி தன்னை திருத்திக்கொண்டு பேட்டியை ஆரம்பித்ததை பார்க்கும் போது அடடா என்று தான் இருந்தது. அது வெறும் கண்துடைப்பு என்று நேரம் போக போக அழகாக தெரிந்தது.

நீங்கள் ஏன் வெற்றி பெறவில்லை, அதிமுகாவும் திமுகாவும் தான் காரணம் என்று சொல்கிறார்.

தலைமை பற்றி விளக்கி சொல்லும் அத்தனை நூல்களிலும் சொல்லும் முதல் தகுதி தோல்விக்கு பொருப்பேற்றுக்கொள்வது தலைமை என்றது தான் முதல் தகுதி.

ஆனால் வன்னியர்மணி தோல்விக்கு தாங்கள் எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்றது மட்டும் இல்லை இவ்வளவு நடந்ததுக்கும் பிறகு நாங்கள் வெற்றி பெற்று தான் இருக்கிறோம் என்று சொல்வது மிகை  நம்பிக்கை என்றது இல்லை குழந்தை தனமானது என்றது கூட தெரியாத  ஒரு தலைவர்.

இவர் தமிழகத்தை இல்லை இந்தியாவை வழி நடத்தக்கூடியவர் என்று அவர்களது சாதி இயக்கம் முழங்கிக்கொண்டு இருப்பதும் குழந்தை தனமே.

இந்த பேட்டியை பார்க்கும் அதே வேளையில் திருமாவளவனின் பேட்டியையும் பார்க்க நேர்ந்தது.

தோல்விக்கு பிறகு ஒரு தலைவன் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசினார் முடிவு வரை.

மக்களை எங்களது சிந்தாந்தத்துக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் மேலும் மாற்று அரசியலை உள்ளூர்காரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை எப்படி மற்றவர்களின் மீது தங்களது கருத்துகளை திணித்தார்கள் என்று அழகாக சொன்னர் திருமா.

26 ஆண்டுகால அரசியல் அனுபவம் என்று பீற்றிக்கொள்ளும் வன்னியர்மணிக்கு இருப்பது சாதி வெறி தவிர வேறு ஒன்றும் இல்லை.

கேட்டால் மீண்டும் பழையவைகளுக்குள் செல்ல விரும்பவில்லை என்று சுருக்கமாக நழுவுகிறார்.

வன்னியர் இயக்கத்தின் சாதி வெறிக்கு காடுவெட்டி குருவின் பேச்சை கேளுங்கள் விளக்குவார். ஈழத்தில் என்ன இன சுத்திகரிப்பு நடந்ததோ அதே சுத்திகரிப்பை வன்னியர் இயக்கம் சத்தம் இல்லாமல் செய்துக்கொண்டு இருக்கிறது.

வன்னியர்மணி மேடையில் இன்றைக்கு காட்டும் அடக்கத்தை தேர்தல் நேரங்களில் காட்டாமல் போனது ஏன் வன்னியர் கட்சிதான் ஆட்சிக்கு வரபோகிறது பிறகு எப்படி பேசினால் என்ன என்று நினைத்தார் போலும்.

முன்னால் முதல்வர், இன்னால் முதல்வர், முன்னால் துணை முதல்வர் என்ன நாடகம் வன்னியர்மணி.......

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், உலகத்தில் வன்னியர்கள் மட்டும் இல்லை மற்றவர்களும் சேர்ந்தது தான் உலகம். நாகரீகம் அடைந்த உலகில்  இருக்கும் வித்தியாசத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் உலகம்.

வன்முறைகளை கைவிட்டு மக்களாட்சி முறைக்கு திரும்புங்கள். மாநில கட்சிகள் உங்களை கூட்டணியில் சேர்க்காமல் அனாதையாக விட்டால் என்ன, கணக்குகளை எப்படியாவது துவங்க வேண்டும் என்று தவிக்கும் தேசிய கட்சிகள் கட்டாயம் கூட்டணிக்கு அழைக்கும்.

வாய் எல்லாம் பல் தெரிய ஒரு மாலையை அவர்களுக்கு செலுத்திவிட்டு மாற்றம் முன்னேற்றம் என்று அவர்களோடு சேர்ந்து முழக்கம் இடுங்கள்.

வன்னியர் இயக்கம் மறுபடியும் முகாம் முகாமாக வந்து கூட்டத்தை கூட்டி மக்கள் தொலைக்காட்சியில் காட்டி பெருமை பேசிக்கொள்ளலாம்...........

குழந்தை பருவத்தில் இருந்து கொஞ்மாவது வளருங்கள் வன்னியர்மணி, இன்னமும் கையில் உள்ள மிட்டாயை பிடுங்கப்பட்ட குழந்தையாகவே அழுதால் எப்படி. போட்டுக்கொள்ளும் வேடத்திற்கு தகுந்தார் போலாவது நடிக்கவாது கற்றுங்கொள்ளுங்கள் வன்னியர்மணி.

0 comments: