Thursday, May 12, 2016

மோடி மற்றும் பாசக பார்வையில் தமிழகம் முழுதும் பிச்சை எடுத்து திரியும் காட்டுமிராண்டி மாநிலம் போலும்

இன்றைக்கு வேதாரண்ய கூட்டதில் பேசிய மோடி இந்த வரிகளை உதிர்த்துள்ளார்

"தமிழக மக்களுக்குத் தடையில்லா மின்சாரம், சுகாதாரமான குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. மக்களுக்குத் தேவையான வீடு, மருத்துவமனை, கல்வி நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளும் உறுதிப்படுத்தப்படவில்லை."

தமிழக பாசக நிர்வாகிகள் ஏதோ ஒரு பராரி காட்டை கொண்டு மோடிக்கு காட்டி இது தான் தமிழ் நாடு என்று சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

இந்த வாசகங்களை பார்க்கும் போது கண் தெரியாத குருடர்கள் யானையை தடவி பார்த்து முரம், தூண், தொம்பை, கயிறு என்று சொன்னதாக சொல்லும் கதை தான் கவனதிற்கு வருகிறது.

தமிழகம் காமராசர் காலம் தொட்டு கல்வி சேவைகளையும் சாலை வசதிகளையும் அபரிவிதமாக கொண்ட மாநிலம்.

அது மட்டும் இல்லை சமுதாய முன்னேற்றத்தில் முன்னோடியாக உள்ள மாநிலம் வேறு.

என்ன காங்கிரசு ஆட்சி காலத்தில் இந்தி எதிர்ப்பை காரணம் காட்டியும் புதிய தொழில்களை கொடுக்காமல் ஏமாற்றியதால் வந்த பொருளாதார மந்தம் கூட போன பாசக ஆட்சியின் போதும் அதற்கு அடுத்த கால கட்டங்களில் வட மாநிலங்களில் உள்ளது போல் தொழில் வளங்கள் பெருகியதை மோடிக்கு ஒருவரும் சொல்லவில்லை போலும்.

ஒரு வேளை மத கலவரமும் இன தாக்குதல்களும் இல்லாததால் அப்படி நினைகிறார் போலும் மோடி.

கல்வி, தொழில், உணவு உற்பத்தி என்று தன்னிரையு அடைந்த மாநிலத்தை இதைவிட ஒருவரும் கேவலப்படுத்த முடியாது.

என்ன தான் பாசக கட்சி ஆட்சி அதிகாரத்தில் தமிழகத்தில் இல்லை என்றாலும் அவர்களும் தமிழர்களே என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள். தனது மாநிலத்தை காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்று அடுத்த மாநிலத்தவர் வந்து சொல்வதை பார்த்து மகிழும் இந்த ஈன பிறவிகளை பாருங்கள்........


கேரளத்தில் இப்படி ஒரு செய்தியை பேசியதற்கு மோடியை போடு போடு என்று போட்டு தாக்குகிறார்கள், ஆனால் தமிழர்களோ சொல்லுங்க இன்னமும் சொல்லுங்கோ என்று இருக்கிறார்கள்.

ஐயோ பாவம் தமிழர்களுக்கு என்ன ஆனது அடுத்தவன் நம்மை காட்டுமிராண்டிகள் என்று சொல்வதை எப்படி இன்னமும் பொருத்துக்கொண்டு இருக்கிறார்களோ.............

 நம்மை எல்லாம் காட்டுமிராண்டி என்று சொல்லும் இந்த மேதாவிகளை தேர்ந்து எடுங்கள் மக்களே. இருப்பதை எல்லாம் பிடுங்கிக்கொண்டு ஏறுதழுவலுக்கு அலையவிடுவதை போல் அலையவிடுவார்கள் இந்த கட்சியினர்கள்...........

மானம் கெட்ட தமிழக பாசகவினர்கள்........... இது எல்லாம் ஒரு பிழைப்பா இதற்கு வைகோ சொன்ன அந்த வசனம் தான் ஞாபத்திற்கு வருகிறது.......... போங்கடா போய் வேறு எதாவது வேலை இருந்தால் பாருங்கள்.......

இதுல பட்டம் படிச்சவங்க நாகரீகம் தெரிந்தவர்கள் என்ற பீத்தல் வேற............அட கொடுமையே........

அப்படியே நமது பெற்றோர்களுக்கு பிள்ளைகளை வளர்க்க தெரியவில்லை, குளிக்க தெரியவில்லை, பல் துலக்க தெரியவில்லை என்று மோடியை விட்டு சொல்ல சொல்லுங்கட மனங்கெட்ட பாசக நிர்வாகிகளே............ அவரரும் அரிதாதம் பூசி கைய கால ஆட்டி கதளி ஆடுவார் அரங்குகளில்.........

0 comments: