Sunday, May 22, 2016

மாற்று அணியினர் இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளபட காரணம் என்ன

ஆட்சியில் உள்ள குறைபாடுகளையும் இனி மீட்டு எடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதை தவிர்த்துவிட்டு தனிப்பட்ட முறையில் தலைவர்களையும் கட்சியையும் பேசியது முதல் காரணம்.

இரண்டாவதாக இவர்களை நம்பித்தான் திராவிட கட்சிகள் இது வரை ஆட்சியை பிடித்தது என்று நம்பியதோடு மட்டும் நில்லாது அதை மேடைதோரும் வன்மையான மொழிகளில் விளித்ததும் ஆகும்.

மாற்றம் முன்னேற்றம் என்று மூச்சுக்கு முன்னூரு தடவை சொன்னாலும் சாதி அரசியலையே முன்னெடுத்து சென்றதும் தான் இந்த படு தோல்விக்கான காரணங்கள்.

பாசக மறுபடியும் மத அரசியலை செய்ய நினைத்தது ஆனால் பாவம் இப்படி ஒன்று இரண்டு என்று இருந்த இடத்தையும் இழக்கும் என்று எதிர் பார்த்து இருக்காது.

தமிழில் இல்லாத நீதி நூல்களா இல்லை தமிழில் சொல்லாத நல்வாழ்வு கருத்துக்களா இந்து மதத்தில் சொல்லி இருக்கிறார்கள். நிலைமை அப்படி இருக்க என்னவோ தமிழகத்து மக்களுக்கு வாழவே தெரியாமல் வாழ்வது போலவும், இவர்கள் வந்து தான் வாழவே கற்றுக்கொடுக்க போவதும் போல மாயையை காட்டியது மக்களின் மனதில் எரிச்சலை தூண்டி இருக்க வேண்டும்.

சல்லிகட்டில் தொடங்கி எழுவர் விடுதலை வரை எல்லா காரியங்களிலும் பாசக கள்ள ஆட்டம் ஆடியதை நன்றாக மக்கள் புரிந்துக்கொண்டுவிட்டார்கள் போலும்.

தந்தி, புதிய தலைமுறை, இன்னும் இருக்கும் அத்தனை விவாத மேடைகளிலும் பாசகவும் சரி மாற்று அணியினரும் சரி பேசிய பேச்சுக்களை ஒருவரும் இரசிக்கவில்லை என்று தெளிவாக தெரிகின்றது.

இதே  மேடைகளில் நாஞ்சில் சம்பத் அதிமுகவின் மானத்தை வாங்கினார் இருந்தாலும் மக்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும் என்றும் காட்டுகிறது.

பகுடி செய்யும் இணைய புலிகள் அடங்க இன்னமும் வெகுகாலம் பிடிக்கும் நல்ல தீனி போட்டுள்ளார்கள் இந்த மாற்று அணியினர்.

திராவிட கட்சிகள் இனியாவது இந்த மாதிரியான உதிரி கட்சிகளை சோறூட்டி பாராட்டி வளர்க்காமல் இருக்கிறதா என்று பார்ப்போம்.

மறுபடியும் விவாத மேடைக்கு அழைத்து தோல்விக்கு உண்டான காரணிகளை அலசுவார்கள் அப்போதாவது அவையடக்கதுடன் பேசுகிறார்களா என்று பார்ப்போம்.

வைகோவை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. அவர் செய்த வேலைக்கு அவருக்கு கூலி கிடைத்து இருக்கும் ஆனால் அவரை நம்பிய இவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம். 

1 comments:

')) said...

//அவர் செய்த வேலைக்கு அவருக்கு கூலி கிடைத்து இருக்கும்//

அது போதாதா !!!!!!!!!