Tuesday, June 16, 2015

அப்போ மேடைக்கு மேடை YG மகேந்திரன் திட்டுவது K பாலசந்தரை தானா

பொதுவாக இவரது நாடகங்களில் எங்காயாவது ஒரு இடத்திலாவது சினிமாவுக்கு கதை எழுதுவேன்/கிறேன் வசனம் வரும். அப்படி வரும் சந்தர்பங்களில் கதை சொல்வதாக/எழுதுவதாக சொன்னவர் ஒரு கதையை சொல்வார். கதையின் முன் பாதியை சொன்னதும் பின் பாதியை என்ன என்று நான் சொல்கிறேன் என்று மகேந்திரன் கழுவி கழுவி ஊற்றுவார்.

அது மட்டும் இல்லாமல் கொஞ்சமும் சபை நாகரீகம் இல்லாமல் ஒருமையிலும் அவனே இவனே என்றும் ஏகத்துக்கும் விளாசுவார். என்னடா மனிதன் யாரை இப்படி எல்லாம் போட்டு தாக்குகிறார் என்று தோன்றும்.

அதிகம் யோசிக்காமல் யாராவது திக/திமுக வாகத்தான் இருக்கும் என்று இவ்வளவு நாள் நம்பி இருந்தேன் அரங்கேற்றம் படம் பார்க்கும் வரை.

பிறகு இவர் கழுவி கழுவி ஊற்றியது பாலச்சந்தரை என்று தெளிவாக புரிகின்றது. இப்போ ஏன் சார் அப்படியா என்று கேட்டால் வடிவேல் பாணியில் நான் சொன்னது எல்லாம் உண்மைன்னு அப்படியே நப்பிட்டீங்க ஐயோ ஐயோ என்று சொல்லி சிரிப்பார் பாருங்கள்..........

0 comments: