Thursday, June 11, 2015

"குடிமகன்'கள் கார் ஓட்டுவதைத் தடுக்க அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பம் - ஒரு வேளை இந்த நுட்பம் இந்தியாவிற்கு வந்தால்

அம்பானி அல்லது அதானிக்கு இந்த பூட்டு  தயாரிக்கும் வேலையை ஒட்டு மொத்தமாக கொடுப்பார்கள்.

முதலில் சோதனை முறை என்று சொல்லி சைகிளில் மாட்டி பரிசோதிப்போம் என்று சொல்வார்கள். தினமலரில் அன்றாடம் இந்த ஊரில் காவலர்கள் வெற்றிகரமாக இத்தனை குடிகாரர்களை பிடித்தார்கள் என்று செய்தியும் படமும் வெளியிடும்.

பிறகு உயர்தரம் அல்லாத இருசக்கர வாகனங்களுக்கு மாட்டி ஆண்கள் பெண்கள் என்று வேலைக்கு செல்லும் மக்களை துன்புருத்து காவலர்கள் கல்லா கட்டுவார்கள். அதிலே ஒழுங்கா கேக்கிறத கொடுத்தா வீடு போவ இல்ல பணத்தோட நிக்காம செய்தி சிறைன்னு நார அடிச்சிடுவோன் என்று மிரட்டுவார்கள்.

இந்த வரையிலே இந்த முதலாளிகள் போட்ட முதலை விட பெருமடங்கு இலாபம் வந்துவிடும் அதனால் ஆட்சியாளருக்கு எப்போது வேலை கம்மியாக இருக்கிறதோ அன்று மக்களின் நலன் கருதி வரும் மாத முதல் தேதியில் இருந்து இந்த சாதணத்தை சைக்கிள் மற்றும் உயர் தரம் அல்லாத இருசக்கிர வாகனங்களில் பொருத்துதல் கட்டாயம் என்று அறிக்கை விடுவார்கள்.

சரி எங்களை எல்லாம் வாங்கி பொருத்தனும் சொன்னீங்களே உயர் தர இரு சக்கர வாகனம் மற்றும் கார் வகையராக்களுக்கு என்று கேட்டால் அவைகள் எல்லாம் பாதுகாப்பு மிக்கவை இந்த பாதுகாப்பு அவைகளுக்கு தேவை எல்லை என்று சொல்வார்கள்.

இல்ல வேண்டும் என்று யாராவது போராடி ஆணை வாங்கினால், குமாரசாமி கால்குலேட்டர் மாதிரி டன் கணக்கில் அந்த சாதணம் மீதே கொட்டினாலும் அழக்காக திறக்கும். அது மட்டும் இல்லாது அந்த சாதணத்தை நீதிமன்றம் கொண்டு சென்றால் 20%க்கும் கீழாகவே எப்பவும் கணக்கு காட்டும் அவர்களுக்கு மட்டும்.

மற்றபடி சைக்கிளில் சென்றவர்கள் எல்லாம் வருட கணக்கில் சிறையில் இருப்பார்கள். அப்படி இருப்பது தான் ஞாயம் என்று பிபிசி நிறுவனம் ஒரு செய்தி ஆவணப்படம் தயாரித்து வெளியிடும். அதில் எங்காவது கார்களை பற்றியோ அல்லது உயர் தர இரு சக்கர வாகனங்களுக்கு எதிராக வாக்கு மூலங்கள் வந்தால் இந்தியாவில் இந்த படத்தை வெளியிட கூடாது என்று ஆணை பிறப்பிக்கும் இந்திய அரசு.