Wednesday, June 10, 2015

தைரியம் இருக்குதா பாசக அரசுக்கு, முதுகு எலும்பு இருந்தால் செய்யட்டும் பார்க்கலாம்.

எப்ப செய்திகளை படித்தாலும் முகம் சுளிக்காமல் இருக்க முடிவதில்லை இந்த இந்துமயம் செய்திகள் உணவில் விழுந்த கல் போல் இடறிக்கொண்டே இருக்கிறது.

இதிலே பாக்கிட்தானத்துக்கு போ, கடல்ல விழுந்து சாகு அப்படி இப்படி எல்லாம் அல்ல கைகளின் அன்றாட அறிக்கையும், தமிழக்கா அதற்கும் பாசகவுக்கும் அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை என்ற புலம்பலும் தாங்க முடியவில்லை.

வாயிக்கிழிய இவ்வளவும் பேசும் அந்த மக்களின் வீட்டில் சென்று பாருங்கள் துவைப்பது முதல் கைகளை சுத்தம் செய்யும் சோப்பு வகைகள் யாவும் அமெரிக்காவோ அல்லது வெளிநாட்டின் தயாரிப்பாக இருக்கும்.

அமெரிக்காவிலும் ஐரோபாவிலும் விற்கும் இந்த வகை சோப்புகள் மிகவும் மலிவாக கிடைக்க காரணம் அதன் மூலப்பொருள் மலிவாக கிடைப்பது தான்.

அதே தாயாரிப்புகளை இந்தியாவில் கொண்டு வந்து கூவி கூவி வித்து இன்றைக்கு உள் நாட்டு தயாரிப்பை ஒருவரும் உபயோகிப்பதில்லை. மாற்றாக அமெரிக்க ஐரோப்பாவின் தயாரிப்புகளையே பெரிதும் விரும்பி பயன்படுத்துகிறார்கள்.

சரி இதுக்கும் தலைபுக்கும் என்ன சம்பந்தம், எங்களை பொருத்தவரை யார் தயாரித்தாலும் ஒன்று தான். வெளுத்தால் மட்டுமே போதும் அது கோமயத்தில் தயாரித்தா என்ற ஆறாய்ச்சி எல்லாம் நமக்கு தேவை இல்லாத ஒன்று.

ஆனால் பாசகவிற்கு பொருள் தயாரிப்பு என்று வந்தால் அதில் உள்ள சாங்கியங்களை மறுபடியும் பட்டியல் இட்டால் நீளும் என்று விட்டு விடுகிறேன். அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் மலிவாக இந்த சோப்புகள் கிடைப்பதற்கு காரணம் அங்கே அவர்கள் உண்ணும் பசுமாடும் பன்றியும் கொண்டுள்ள கொழுப்பை குப்பையில் கொட்டுவதற்கு பதில் சோப்பு தயாரிக்கும் மூலப்பொருளாக பயன்படுத்துவது தான்.

அந்த பசுமாட்டு மற்றும் பன்றிக்கொழுப்பை கொஞ்சம் வாசனையாக கொடுத்ததில் இந்த பாசக அல்லகைகள் பெருமை பொங்க நாங்க எல்லாம் எப்பவும் அமெரிக்க ஐரோப்பாவின் தயாரிப்புகளை தான் தருவிப்போம் அவர்களை போல் பொன்வண்டு சோப்பு எல்லாம் மலிவாக  வாங்க மாட்டோம் என்று பெருமை பேசுதுக.

அட இதுவாது பரவாயில்லை ஏதோ முகத்துல துணிக்கு போடுதுக என்று விட்டாலும், சாப்பிடம் முன்னு அப்படி கொஞ்ச தொட்டு தேச்சா போதும் பிசுபிசுப்பே இருக்காதுன்னு தட்டிலும் இன்ன பிற சமையல் பாத்திரங்களை கழுவுகிறார்களே அந்த தட்டுகழுவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் தட்டுகழுவும் சோப்பும் இப்படி பட்ட தயாரிப்புகள் தான்.

இப்படி பசுமாட்டு மற்றும் பன்றி கொழுப்பில் குளித்து சாப்பிட்டு உழன்று வரும் பரதேசிகங்க தான் தினமும் ஒரு செய்தித்தாளுக்கு கூபிட்டு சொல்லி  பாக்கிட்தானத்துக்கு போ, கடல்ல விழுந்து சா என்று எல்லாம் பிதற்றிக்கொண்டு அலையுதுக.

எங்க முடிஞ்சா முதுகு எலும்பு இருந்தால் இந்த பொருட்களை எல்லாம் இந்தியாவில் எங்கள் ஆட்சி இருக்கும் வரை விற்க விடமாட்டோம் என்று  தடைவிதியுங்கள் பார்கலாம் உண்மையில் உங்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால்.

இனி இந்த மாதிரி செய்திகளை அவர்கள் சொன்னால் இந்த கேள்விகளை அவரிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டும், உங்க பேசுடுல உப்பு  இருக்கான்னு கேட்கிற மாதிரி அங்கேயே கேட்கனும் அப்ப என்ன அசடு வழியுதுகன்னு பார்க்கனும்...........


0 comments: