Thursday, September 3, 2009

சிதம்பரமும்,மனமோகன்சிங்கும்,பதவிவிலக வேண்டும், குடியரசு தலைவர் மத்திய ஆட்சியை கலைக்கவேண்டும்

நாட்டின் பாதுகாப்பு கெட்டு போகிவிட்டது, தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை அதனால்......

ஆந்திர முதல்வர் காணாமல் போனதை அடுத்து செயலலிதா இப்படி ஒரு அறிக்கையையும், தமிழகத்து அனைத்து ஊர்களிலும் சாலை மறியலும், போராட்டம், உண்ணா நோம்பு என்று அறிவிப்பார் என்று பார்த்து பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்.

அந்திராவில் இந்த கண்ணாமூச்சு நடந்து இருந்தாலும் ப.சிதம்பரத்தை பதவி விலக கோருவதில் செயலலிதாவுக்கு ஒரு தனிபட்ட ஆர்வம்.

அதே போல் தான் மனமோகன்சிங்கும், எது எடுத்தாலும் இவரும் பதவி விலக வேண்டும். ஆனால் தொடர்ந்த 4ஆம் முறையாக அதிமுக மேற்கொள்ளும் அத்தணை தேர்தலிலும் தோற்றுக்கொண்டு வருகிறது இந்த பாட்டி மட்டும் பதவி விலகல் என்ற வார்த்தையை கூட சொல்ல அஞ்சுகிறார்.

ஒரு வேளை இப்படி ஏது நாடகம் ஆடினால், கிடைத்த வாய்பை செவ்வனே பயன்படுத்தி மக்கள் கட்சியையும் ஆட்சியையும் பிடித்துவிடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு.

குறைந்தது அடுத்த தேர்தல் வரும் வரையில் படுக்கையிலேயே ஓய்வு எடுக்கும் படி மருத்துவர்கள் ஆலோசனை செய்து இருப்பார்கள் போலும். அது தான் பாட்டியை எங்கேயும் கானோம்.

2 comments:

')) said...

//அத்தணை தேர்தலிலும் தோற்றுக்கொண்டு வருகிறது இந்த பாட்டி மட்டும் பதவி விலகல் என்ற வார்த்தையை கூட சொல்ல அஞ்சுகிறார்.//

அம்மாவுக்கு பாட்டி ப்ரோமோசன் கொடுத்த முதல்வர் நீங்களாத்தான் இருக்கனும் !

:)

')) said...

இவர் அடிக்கும் நக்கலுக்கு இப்படி மரியாதையாக விளிப்பதில் தவறேது இல்லையே கோவியாரே