Wednesday, April 3, 2019

மோடிக்கு மேடைகளில் பேச ஒரு செய்தி கிடைத்தது - ஐயோ பாவம்

காங்கிரசு தேர்தல் அறிக்கையை வெளியிட்டாலும் வெளியிட்டாங்க, நேற்றில் இருந்து மோடி காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொய் புரட்டு புழுகு மூட்டை என்று வாய்க்கு வந்த படி எல்லாம் உளர ஆரம்பித்துள்ளார்.

தேர்தல் அறிவித்த இத்தனை நாளும் என்ன சொல்வது மேடைகளில் என்றி விக்கி தவித்தவருக்கு இப்போ இப்படி ஒரு கேவலமான உத்தி கிடைச்சு இருக்கு பாவம்.

முதன் முறையா நாட்டை ஆண்ட மனிதர் எப்படி பிச்சைகாரதனமா ஓட்டு கேட்க்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் பாவம்.

தான் அதை செய்தே இதை செய்தேன் இனி இவைகளை செய்வேன் என்று சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாமல் அவன் பொய் சொல்கிறான் அதனால் எனக்கு ஓட்டு போடு என்று கேட்க்கும் கேவலமான நிலைக்கு வந்துவிட்டது பாசகவும் அதன் மோடியும்.

எனக்கு தெரிந்து பாசகவின் தேர்தல் அறிக்கையும் அதன் சாதணை அறிவிப்புகளும் தான் டுபாகூராக தெரிகின்றது. எங்கே தன்னை சொல்லிவிடுவார்களோ என்று முந்திக்கொண்டு சொல்கிறார்கள் போலும்.

தொகா விவாதங்களில் மக்கள் சற்று நக்கலாகவே கேட்கிறார்கள் உங்களின் வாக்குறுதிகளும் அதிக் என்ன நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று. அதற்கு கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எல்லாவற்றையும் நிறைவேற்றியாச்சு என்று புழுகுகிறார்கள். உடனே காசுமீரத்தில் ஆயுத படையின் சிறப்பு அதிகாரம் பறிக்கப்படும் என்று 2014ல் சொன்னீங்களே அதை நிறை வேற்றுவதா காங்கிரசு இப்போ தேர்தல் அறிக்கை விட்டு இருக்கேன்னு கேட்க்க அந்த பாசக நபரின் முகம் போன போக்கை பார்கனுமே.....

0 comments: