Wednesday, April 17, 2019

பாசகவை கழுவி கழுவி ஊற்றும் தேர்தல் ஆணையம்

கடந்த ஒரு மாத காலமாக வேலூர், தூத்துகுடி, கரூர் என்று வரிசையாக கட்டு கட்டாக புதிய ரூபாய் கட்டுகளை தொகவில் காட்டப்படுகிறது.

இந்தியர்களின் பழைய ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று சொல்லிய பணமதிபிழப்பு நடவடிக்கையில் இந்தியர்களின் பணம் எல்லாம் யார் யாரிடம் எவ்வளவு பணம் இருந்தது, மற்றும் நாள் தோறும் வந்து சேர்ந்துக்கொண்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்க எல்லா பணபரிவத்தனைகள் எல்லாம் வங்கிகளின் வழியாக மட்டும் தான் நடத்த வேண்டும் என்று சட்ட திருத்தங்கள் முதல் தனி நபர் அடையாளங்கள் இல்லாமல் அவரவர் வங்கி கணக்கில் கூட பணத்தை எடுக்க முடியாது என்று மாற்றி அமைத்து முடித்துவிட்டோம் கள்ளப்பணம் கருப்புபணம் எல்லாம் இனி இல்லவே இல்லை என்று முழங்கியது பாசக.

ஒன்று இந்த கட்டு கட்டாக காட்டப்படும் பணம் யார் யார் வங்கி கணக்கில் இருந்து எட்டுத்தவை என்றும் சேர்த்து வெளியிட வேண்டியதுதானே. அதை எல்லா வெளியிடாமல், யார் யார் வீட்டில் எடுத்தோம் என்று மட்டும் சொல்வதை நீதிமன்றமும் கூட கேள்வி கேட்காமல் இருப்பதும் தான் பரிதாபமாக இருக்கிறது.

மோடி சொல்லட்டும் இந்த பணம் எல்லாம் எங்கு இருந்து வந்தது என்று. அப்படி சொல்ல முடியவில்லை என்றால் பொது மக்கள் பணம் எடுக்க இருக்கும் கட்டுப்பாட்டை அப்படியே நீக்க வேண்டும்.

0 comments: