Friday, April 5, 2019

மோடியின் சாதணை பட்டியல்

1) இராணுவத் துறையில் இருக்கும் இரபேல் ஒப்பந்தம் காணாமல் போனதாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது

2) மல்லையாவில் துவங்கி மோடிகள் வரை 52 பெட்டிகள் முதல் 150 பெட்டிகளில் பணம் நகை தங்கம் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் என்று எந்த விமான நிலையத்தில் சாமானியன் சென்ட்டு பாட்டி கூட கொண்டு போக முடியாது என்று துணை இராணுவத்தினரை வைத்து விரட்டியடிப்பார்களோ அதே துணை இராணுவத்தின் உதவியுடன் அத்தனை பணம் செல்வங்களை அழகாக வழியனுப்பி வைத்தது.

3) ஆட்சியில் இருந்த 5 வருடமும் ஆண்டுக்கு 7.5 இலட்சம் கோடி ரூபாய் என 35.25 இலட்சம் கோடி ரூபாய்க்களை கார்பரேட்டு நிறுவனங்களின் கள்ளப்பணமாக மாற்றி கொடுத்து சாதணை புரிந்தது.

4) மேலே செலவழித்த ரூபாய்க்களை கணக்கு காட்ட ஏழைபாழைகளின் சில நூறு ரூபாய்கள் கூட வங்கியில் வந்து விழவேண்டும் இல்லை என்றால் சிறை பணம் பறிப்பு என்று எல்லாம் பயமுறுத்தி. கடைசியில் வங்கியில் உள்ள பணத்தில் குறைந்த அளவு பண வைத்திருப்பு அளவுக்கு இல்லை என்று ஏழைபாழைகளின் சொற்ப்பணத்தை சுரண்டி அந்த பணக்கார கார்பரேட்டுகளுக்கு கள்ள பணமாக 35.25 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் மோடி.

5) மோடி முதல்வராக இருந்த வரையில் கொள்ளை அடித்த பணம் மற்றும் பிரதமாராக அம்பாணிக்கும் அதாணிக்கும் வேலை பார்த்தற்கான கூலியை வெற்றிகரமாக மல்லையா மோடிகளின் வழியாக வெளி நாட்டில் பதுக்கியது. அதனால் தான் அவர்களை பற்றிய எந்த ஒரு கேள்விக்கும் இந்திய வெளியுரவு துறை இது வரையில் எந்த பதிலும் கொடுக்கவில்லை இங்கிலாந்திற்கு

6) சீனாவின் கட்டளைக்கு இணங்க அடி பணிய இந்த இராணுவ படைக்கு வாங்க இருந்த 126 போர் விமானங்களை வெறும் 36 ஆக குறைத்தது.

7) வெளி நாடுகளுக்கு இந்தியாவின் பெட்ரோல் ரூ 32க்கு ஏற்றுமதி செய்துவிட்டு இந்தியர்களுக்கு ரூ 80 என்று இந்த 5 ஆண்டுகளாக விற்று சந்தையில் இருக்கிற சாதாரண மக்களின் விலை பொருட்களை பலமடங்கு விலைக்கு வாங்க வைத்து மறைமுகமாக கார்பரேட்டு நிறுவனங்களை சட்ட ரீதியாக கொள்ளையடிக்க வைத்தது.

8) பாசக உருப்பிணர்கள் தவிர மற்ற அனைவரும் ஒரு பதட்டத்திலேயே இருக்கும் படி பார்த்துக்கொண்டுதது.

9) பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று சொல்லிக்கொண்டு தனதும் தனது சகாக்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி கொடுத்தது. சமீபத்தில் பாசகவின் கூட்டணி கட்சியான அதிமுக தன்னிடம் வைத்து இருந்த கருப்பு பணத்தில் 3.5 இலட்சம் கோடிக்கு வைரம் வாங்கி வைத்து விட்டு இப்போது விற்று பணமாக மாற்றி இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

10) வட மாநிலங்களில் ஒருவரும் இரயிலில் பயண சீட்டு எடுப்பது இல்லை எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும். வட மாநிலங்களுக்கு இரயிலில் பயணித்தவர்களுக்கு தெரியும். அப்படி வட மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தென் மாநிலங்களில் கட்டணம் மற்றும் தண்ட தொகைகள் பயன்படுத்தபடுகிறது. அதே போல் இப்போது தென் மாநிலங்களின் கல்வி நிறுவனங்களையும் சட்ட ரீதியா கைப்பற்றியது நீட் தேர்வை வைத்து.

11)  நிதி ஆயோக் என்ற பெயரில் மாநிலங்களுக்கு வருடா வருடம் வழங்கப்படும் நிதியை நிறுத்தி செலவு செய்த பணத்தின் கணக்கை கொடுத்தால் மட்டும் பணம் என்று பொய் சொல்லி பாசக ஆளாத மா நிலங்களுக்கு கொடுக்கும் பணத்தை ஏமாற்றியது மட்டும் இல்லை. தான் என்ன என்ன திட்டம் எல்லாம் சொல்கிறேனோ அவைகளுக்கு மட்டும் தான் பணம் மற்றவைகளுக்கு இல்லை என்று மிரட்டியது. இதனால் தான் பழனிசாமி 8 வழி சாலையை போட்டே ஆவேன் என்று நின்றதும் , ஒக்கி மற்றும் கசா புயலுக்கு மோடி அரசு பணம் கொடுக்கவில்லை என்று சொன்னதும்.

12) GST என்ற பெயரில் மாநிலங்களின் வரிப்பணத்தை நேரே பெற்று மாநிலங்களை மோடியிடம் நிதி ஆயோக்கிடம் கையேந்த வைத்தது.

13) வருடத்திற்கு 2 கோடி புதிய வேலை வாய்புகளை உருவாக்குவேன் என்று 2014 தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டும் இல்லாமல் அப்படி செய்யாத காங்கிரசை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று முழங்கிவிட்டு, இந்த 5 ஆண்டுகளில் நீங்கள் உருவாக்கிய புதிய வேலை வாய்புகள் எங்கே என்று கேட்க போய் பக்கோடா போட்டு விற்பது, மாடு வளர்த்து பால் விற்பது என்று செய்யுங்கள் என்று மிகவும் திமிராகவும் நக்கலாகவும் படித்தவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பார்த்து பரிகாசித்தது.

14) சாமானியன் ஒரு வாரத்தில் 2000 ரூபாய்க்கு மேல் தனது கணக்கில் இருந்து எடுக்க முடியாது என்று விரட்டி அடிக்கப்பட்டு அதே நேரம் தமிழக்த்தில் இராதாகிருட்ணன் நகர் தேர்தலில் கொடுக்க ரூ 90 கோடி புதிய 2000 ரூபாய் தாட்கள் பிடிக்கப்பட்டதாகவும் அதனால் தேர்தலை நிறுத்துவதாகவும் தேர்தல் அணையம் மூலம் வாக்குமூலம் கொடுத்தது.

15) பன்னீர் செல்வத்தின் பினாமி வீட்டில் 210 கிலோ தங்கள் 200 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றியது அதே நாட்களில் நடந்தவைகள்.

16) கோவா, கர்னாடகா என்று ஆளுனர்களின் துணையுடன் புறவாசலின் வழியில் ஆட்சியை அமைத்தது. இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததும். ஏன் இப்படி கொஞ்சம் கூட நேர்மை இல்லாமல் நடக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் தர்மத்தின் படி நடக்கிறோம் என்று நக்கலாக பதில் சொன்னது.

17) கடலை மிட்டாய்க்கு 20% GST வரி என்றும் வெளி நாட்டு நிறுவனங்களின் பீட்சாவுக்கு 4% GST வரி என்று நக்கலாக நடுத்தர மற்றும் ஏழை மக்களை பார்த்து பரிகாசமாக நடத்தி காட்டிக்கொண்டு இருப்பதும். ஏன் இப்படி மனசாட்சியே இல்லாமல் என்றால் அப்படி தான் செய்வோம் உங்களால் முடிந்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று நிர்மலாவை வைத்து சொல்ல சொன்னது.

18) இது வரை மோடி சென்ற நாடுகளில் இருந்து ஒரே ஒரு முதலீடைக்கூட இந்தியாவுக்கு கொண்டு வராமல் கடைசியில் மேக் இன் இந்தியா என்று புழுகிவிட்டு பட்டேல் சிலையை செய்ய சொல்லி சீனாவிற்கு 3000 கோடி மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தது.

19) உலகம் முழுவதும் மற்று எரி சக்திக்கு மாற வேண்டும் என்று தீவிரமாக உழைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் இன்றளவும் வெறும் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடும் வண்டிகளை மட்டும் வைத்து இயக்குவதும் மேலும் அந்த நடவடிக்கை பற்றி எந்த ஒரு வார்த்தையும் இது வரையில் பேசாமல் இருப்பது மட்டும் அல்ல வேறு யாரும் பேசாதது போல் பார்த்துக்கொண்டதும்.

20) மோடி செய்த இரபேல் ஒப்பந்தத்தை பார்த்து உலகமே சிரிக்கும் படியாக மாற்றி இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றியது.

21)  HAL நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்று மைய அரசு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுக்கவும் என்று கேட்க வைத்த பெருமையும், இந்த நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை இன்னும் ஒரு செங்கல் கூட தரையில் பதிக்காத சியோ நிறுவனத்திற்கு பிடுங்கி கொடுத்த பெருமையும் மோடியையே சாரும்.

22)  BSNL நிறுவனம் வரலாறிலே முதல் முறையாக சம்பளம் போடாமல் தள்ளிப்போட்டது இந்த ஆண்டு தான் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது.

23) 2014 முதல் 2019 வரை தனியார் வேலைகள் குறைக்கப்பட்டு ஆட்குறைப்பு நீண்டு கொண்டே போனது ஒழிய புதிய வேலை வாய்ப்புக்கள் வரவே இல்லை.

24) கிரிச்சா வைதியனாதனையும் பழனிசாமி மற்றும் பன்வாரிலாலையும் வைத்துக்கொண்டு தமிழக அரசு வேலைகளில் 90% மக்களை பீகார் மற்றும் இந்தி மட்டுமே பேசும் மக்களை தமிழில் பரீச்சை எழுத வைத்து 100க்கு 360 மதிப்பெண்கள் வாங்க வைத்து சென்னையிலும் தென்னக இரயில்வேயிலும் வேலையில் அமர்த்தியது.

25) பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டை, ரேசன் அட்டை என்று பல அட்டைகளை எதற்கு எடுத்தாலும் கொண்டு வந்து காட்டனும் இல்லை என்றால் இல்லை என்று சாக்கு போக்குகள் காட்டியது ம். பின்னாளில் ஆதார் அட்டையுடன் இதை இணை அதை இணை என்று மக்களை வதைத்ததும். அரசு செய்ய வேண்டிய இந்த காரியத்தை படிப்பறிவு இல்லாத மக்களை அலையவிட்டு பணம் செலவழிக்க வைத்த அறிவாளி இவர்.

26)  நாட்டில் நல்லது எது நடந்தாலும் அதற்கு காரணம் நான் தான் என்று கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாம் சொன்ன அற்ப மனிதர் இவர். எந்த கெட்டவை நடந்தால் மட்டும் அதற்கு காரணம் காங்கிரசு என்றும் சொன்ன முதல் அற்பர் இவராவார்.

27) மோடி செல்லும் வெளிநாடுகளில் எப்படி எல்லாம் அற்பமாக பேச முடியுமோ அப்படி எல்லாம் அற்பமாக பேசிய அற்ப மனிதர் இந்த மோடி. இதே இந்துத்துவா வழிகளில் வந்த விவேகாணந்தர் தான் அமெரிக்காவில் சென்று சகோதர சகோதரிகளே என்ற வரலாற்று உரை நிகழ்த்திய இயக்கத்தின் அற்ப மனிதராம் இவர் வெளிநாடுகளில் சென்று தான் பதவிக்கு வந்த பிறகு தான் இந்தியர்கள் உடையணியவே கற்றுகொண்டார்கள் என்ற அளவிற்கு துடுக்கு தனமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் பேசிய சாதணையாளர்.

 28) 2016ல் வெறும் 50 நாட்கள் தான் கேட்கிறேன் அப்படி 50 நாட்களில் எல்லாம் சரியாகா விட்டால் என்னை உயிருடன் எரியுங்கள் என்று சொல்லிவிட்டு, இன்றும் சரி செய்ய முடியாத பொருளாதார வீழ்சியாக மாறிய பின்ப்பும் எந்த வித கூச்சமும் இல்லாமல் மக்களிடம் ஓட்டு கேட்க அரிதாரம் பூசி அடவுகட்டி ஆடுகிறார் மேடைகளில்.

29) மோடி ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு தான் படிக்கிறார் அதையே தமிழில் எச்ச இராசா மொழி பெயர்த்து எழுதி வைத்துக்கொண்டு தான் படிக்கிறார். பேசாமல் இந்த இரண்டையும் செய்தி தாளுக்கு கொடுத்துவிட்டால் வேண்டியவர்கள் படித்துகொள்வார்கள். அதை விடுத்து என்னவோ மோடி அவரது பேச்சுகளை முழுதும் மனப்பாடமாக பேசுவது போல் prompter களை வைத்துகொண்டு நடிப்பான் ஏன்

30) மோடியின் வரலாற்று குறிப்புகள் எதுவாக இருந்தாலும் தப்பும் தவறுமாகவே பேசி சாதணை படைத்த ஒரே மனிதர்

0 comments: