Thursday, April 18, 2019

பாசகவிற்கு பசு ஏன் அவ்வளவு முக்கியமானது

பாசக சங்கபரிவாரத்தின் அரசியல் முகம். வெளியில் அழகாக சிரித்து பேசினாலும் அந்த அழகிற்குள் பொதிந்து இருக்கும் நச்சு அதே பழைய ஆலகால நச்சு தான்.

இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளின் பலவீனம் இந்த மாதிரியான நச்சு அரசியல் சக்திகளை சகித்துக்கொண்டு இருப்பது. சரி செய்திக்குள் வருவோம்

இந்த முறை பாசக 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பசுவை மனிதர்களின் தாயாக பெருமையாக சொல்லிக்கொள்ளும் கூட்டம் பெருகி இருக்கிறது. அப்படி சொல்லிக்கொள்வதில் பெருமை படுவதில் முன்ண்ணியில் இருப்பது இளைஞ்சர்கள் என்றது தான் சோகமே.

பசு ஒரு விலங்கு, அந்த விலங்கை தனது தாய் என்று ஏன் அந்த இளைஞர்களை சொல்ல வைக்க வேண்டும். அப்படி சொல்வது அவர்களை சதையும் இரத்தமுமாக பெற்று எடுத்து பாலூட்டி வளர்க்கும் அன்னையை இழிவுபடுத்தும் செயல் என்று அவர்களின் புத்திக்கு வராமல் மூளை சலைவை செய்தது எப்படி.

உலகில் இறைவனை நம்பும் மனிதர்கள், அந்த இறை நம்பிக்கையின் பேரில் தனது தந்தையை சேவல் என்றோ, தனது தாத்தாவை எலி என்றோ தனது பாட்டியை பாம்பு என்றோ சொல்வதே இல்லை.

ஆனால் இந்த சமீபத்திய பாசக இளைஞர்கள் தனது தாய் பசு என்று ஏன் சொல்லவேண்டும் என்ற ஆவலோடு அவர்களோடு விவாதிக்கும் போது கடைசியாக அவர்கள் சொல்வது பசு தான் மனித இனத்தையே பாதுகாத்த முதல் விலங்கினம். அந்த பசு மட்டும் இல்லாமல் போய் இருந்தால் இன்றைக்கு இந்த மனித இனமே இருந்து இருக்காது என்றும் அதனால் தான் அந்த பசுவை காமதேனு என்று அழைப்பதாகவும். அப்படி மனித மொத்த குலத்தின் தாயாக பசு இருந்ததினால் பசு தான் தனக்கு தாய் என்றும் ஒரு அசத்தலான பதிலாக வந்தது.

புராணங்களிலும் சரி இதிகாசகங்களிலும் சரி இது வரையில் இப்படி பசு மனிதனின் தாய் என்று ஒருபோதும் விளித்ததும் இல்லை. நாக கன்னி, மோகினி, கன்னி பேய், இரத்த காட்டேரி, இப்படி என்ன என்ன வடிவங்களில் அசாதாரணமான கற்பனை பாத்திரங்களை கொண்ட புராண இதிகாசகங்களிலில்  கூட ஒரு பசு ஒரு மனிதனை பெற்று எடுத்து வளர்த்தாகவோ அல்லது ஒரு மனிதனை தனது மகனாக தத்து எடுத்து வளர்த்தாகவோ எங்கேயும் கூறப்பட்டதாக கதைகளிலோ கட்டுரையிலோ அல்லது திரைபடங்களிலோ வந்து இல்லை.

இப்படி எந்த தொடர்புகளும் இல்லாமல் திடீர் என்று பசு தாயாக பரிணாமித்தது ஏன் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. அதுவும் பாசக ஆட்சி 2014ல் அமைந்த பிறகு மிகவும் தீவிரமாக அவர்களுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும் பசு ஏன் இவ்வளவு முக்கயத்துவம் பெறவேண்டும் என்றும் யோசித்து பார்க்க வேண்டியும் உள்ளது.

உலகில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் புதை பொருட்கள் அனைத்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் மிஞ்சி போனால் டைனோசர்களின் எலும்பு கூடுகள் தவிர அடுத்த கிரகத்து மனிதர்களின் கூடுகளோ அல்லது மிகவும் வித்தியாசமான ஒன்றோ இது வரை கிடைத்தாக இல்லை.

இந்தியாவை பொருத்த அளவில் இது வரை வெளி வந்து இருக்கும் புதை பொருள் ஆராய்ச்சிகள் அசோகர்காலத்தவைகளே பழமையானவைகள். அதற்கு பழமையானவைகள் இன்னும் ஆராய்சிக்குட்படுத்தபடாமல் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி மூடி வைக்கப்பட்ட இடங்கள் தமிழர்களின் அடையாளங்களாக கருதப்படும் பூம்புகார் நகரம், தற்பொழுதைய பூம்புகார் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் கடலிலும், ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற இடங்கள். இந்த இடங்களில் கிடைப்பெற்ற பொருட்கள் அசோகர் காலத்திலும் மிக பழமையானவைகள்.

அதாவது இது வரை ஆதியாக கொண்டு எழுதப்பட்டு வந்த இந்திய வரலாற்றை மாற்றி அமைக்கவல்ல ஆராய்ச்சிகளாக அது அமையக்கூடும் என்றதும் அந்த ஆராய்சிகளை தள்ளிப்போட்டு பிறகு மண்ணை அள்ளி போட்டு மூடும் வேலையும் நடந்து வந்தது.

ஒரு காலகட்டத்தில் அந்த புதை பொருள் ஆராய்ச்சிகளை இனியும் காரணங்கள் சொல்லி புதைத்தாலும் பின்னொரு காலத்தில் வெளிவந்தே ஆகும் என்ற கூற்றுகளையும் அறிகுறிகளையும் வெளிக்காட்ட இந்த பரிவாரங்கள் என்ன செய்வது என்று கையை பிசந்துகொண்டு ஒரு குறுக்கு வழியை கண்டு பிடித்தார்கள்.

அந்த குறுக்கு வழிதான் இது வரை சிந்துவெளி நாகரீகம் வரை கடைசியாக கிடைத்த கீழடி ஆய்வுகள் வரை கிடைத்த மாடு தோற்றங்களை குதிரை தோற்றம் என்று நிறுவுவது என்று துவங்கி இந்திய ஆராய்சியாளர்கள் மற்றும் வெளி நாட்டு ஆராய்சியாளர்களையும் சம்மதிக்க வைக்க போலியான ஆதாரங்களை கொண்டு நம்ப வைக்கப்பார்த்த போது ஞாயமாக இருக்கும் ஆராய்சியாளர்கள் ஒப்புகொள்ளவில்லை என்றதோடும் மட்டும் நில்லாது இப்படி ஒரு முயற்சி உள் நாட்டிலும்  நடப்பதாகவும் உலகுக்கு தெரிவித்தார்கள்.

அப்படி இப்படி என்று எவ்வளவோ முயன்று மாட்டிடம் அவர்களது குதிரைகள் தோற்று போனது.

இந்தியாவின் ஆதி நாகரீகம் இந்து நாகரீகம் தான் அந்த நாகரீகத்தின் சான்றாக இனி எப்பவும் எதுவும் காட்டமுடியாது என்று முடிவாக ஆனது. ஓலை சுவடி, கல்வெட்டுகள், அல்லது புதை பொருள் என்று இது வரையில் அவர்களது வாதத்திற்கு வலு சேர்க்கும் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இது வரை கிடைக்கவில்லை. அந்த ஆதிரத்திலும் ஆற்றாமையிலும் தமிழர்களின் அடையாளமான மாட்டை ஆரிய சின்னமாக மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.

அதன் முதல் முயற்சி சல்லிக்கட்டை தடைவிதித்தோடு நில்லாமல் இனி எப்பவும் நடத்தவே முடியாத வண்ணம் அமுக்கியது. வேண்டும் என்று கேட்கையில் உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துவிட்டது என்று சப்பை கட்டு கட்டியதோடு மட்டும் நில்லாது, இந்தியா முழுவதும் எந்த எந்த மாடு சம்பந்தமாக இருக்கும் அத்தனை கலாச்சாரத்தையும் பீட்டாவின் துணைக்கொண்டு நிறுத்தினார்கள்.

பிறகு மெல்ல பசுவிற்கு புணித பிம்பத்தை பூசி பிறகு மனிதர்களின் தாய் என்று சொல்ல வைத்தார்கள். மக்களையும் சட்டத்தையும் விட பசு முக்கியம் என்று இந்திய பாராளுமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பேச வைத்தார்கள். இன்னும் சிறிது காலத்தில் எங்கே எல்லாம் பசுக்களின் சின்னங்கள் கிடைக்கின்றதோ அவைகளை காட்டி இது இந்து மத அடையாளங்கள் என்றும் தமிழர்கள் எல்லாம் கைபர் போலன் கனவாய் வழியாக தென் ஆப்ரிக்கவில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியது மட்டும் இல்லை இப்போது இந்தியாவை சொந்தம் கொண்டாடுகிறார்கள் ஆகவே தமிழர்களை ஆப்ரிக்காவுக்கு விரட்டுங்கள் என்று சொல்வார்கள்.

இது தான் பசுவிற்கு பாசகவின் பாசத்திற்கு உள்ள தொடர்பு. கிருத்துவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், இசுலாமியர் பாக் செல்ல வேண்டும், தமிழர்கள் ஆப்ரிக்கா செல்ல வேண்டும் என்றதே பாசகவின் திட்டம்.........

2 comments:

')) said...

எப்படியெல்லாமோ கனவு காண்கிறார்கள். பரிதாபத்திற்குரியவர்கள்!

')) said...

இது கனவு மட்டும் இல்லை பேராபத்தை கொண்டு வரும் திட்டமும் கூட. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி