Thursday, August 27, 2009

மக்கள் விடுதலை புலிகளின் மேல் வைக்கும் விமர்சனங்கள் சரியானவை தானா??

பொதுவாக ஈழ சம்பந்தமாக என்ன வாக்குவாதங்கள் எழுந்தாலும், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களானாலும் சரி, பொதுவாக கீழ் கண்டவாரு வாதங்களை வைப்பார்கள்.

  1. புலிகள் தீவிரவாதிகள் அதோடு நில்லாமல் பயங்கரவாதிகள்.
  2. இராசீவ் காந்தியை படுகொலை புரிந்தவர்கள்.
  3. மக்களை கேடையமாக கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டவர்கள் தான் இந்த புலிகள்.
  4. ஈவு இரக்கம் இல்லாமல் மக்களை மிரட்டி அவர்களது உழைப்பை அபகரித்து உல்லாச வாழ்க்கையை நடத்தியவர்கள்.
  5. அப்பாவி மக்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொன்றவர்கள்.
  6. புலிகள் பிரிவிணைவாதிகள். தேசத்தை துண்டாட நினைப்பவர்கள்.

இன்னமும் கொஞ்சம் அதிகம் தகவல்கள் உள்ளவர்கள் இப்படி பட்டியலிடுவார்கள்.

  1. புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் கூட்டம்.
  2. அனைத்துலக நாடுகளும் தேடும் பயங்கரவாதிகள்.
  3. அனைத்துலக சந்தையில் கள்ளத்தனமாக ஆயுதங்களை கடத்துபவர்கள்.
  4. அனைத்துலக நாடுகளுக்கும் முறை கேடான வகையில் பொருளீட்டி கொடுத்து அந்தந்த நாட்டில் பிரிவிணைவாதத்தை தூண்டுபவர்கள்.
  5. இந்தியாவின் பாதுகாப்புக்கு இவர்களால் கேடு தான் விளையும்.
  6. இவர்களை ஆதரித்தால், பிறகு இதையே காரணமாக காட்டி காசுமீரும், நக்சல்பாரிகளும் தங்களது அட்டகாசங்களை தொடருவர்.

இப்படி கட்டு கட்டாக அடுக்கிக்கொண்டே போவார்கள்.

இவர்கள் சொல்லும் அத்தணை குற்றசாட்டுக்களையும் ஒன்று ஒன்றாக பார்ப்போம்.

புலிகள் தீவிரவாதிகள் அதோடு நில்லாமல் பயங்கரவாதிகள்.

எதனால் புலிகளை பயங்கவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சொல்கிறீர்கள் என்று கேட்டால். அவர்கள் தேவைக்காக நாட்டில் உள்ள எதிரணியினரை கொன்று குவிப்பவர்கள் என்று சொல்வார்கள்.

சரி தான் சிங்களம் என்ன செய்தது என்று அவர்களையே திருப்பி கேளுங்கள். அவர்களிடம் மௌனம் தான் பதிலாக இருக்கும். சிங்களம் தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி நெருக்கி வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளியதோடு மட்டும் நில்லாது. அந்த நிலையிலும் அவர்களது வாழ்க்கை தொடர்வதை பிடிக்காமல் கூட்டம் கூடமாக கொன்று குவிக்கும் வரை பொருமை காத்த மக்கள் அல்லவா அவர்கள். அது வரையில் பாதுகாப்பு வேண்டும் என்று சிங்களத்திடம் அல்லவா கேட்டார்கள். இனிமேலும் இவர்களிடம் கேட்டு நின்றால் எதுவும் மிஞ்சாது என்று முடிவான பிறகு அல்லவா இந்த ஆயுத போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

அதுவும் எப்படி அணு ஆயுதம் எங்களிடம் இருந்தாலும் முதலில் அதை கொண்டு அடிக்கப்போவது இல்லை. எங்களை அப்படி ஒரு கட்டத்துக்குள்ளாக்கும் போது கட்டாயம் அணு குண்டு கொண்டு அடிப்போம் என்று இந்தியா சொல்லிக்கொண்டு வருவதை போல் அல்லவா இவர்களும் செய்தார்கள். இது எந்த வகையில் குற்றமாகும் என்று யாரேனும் சொல்ல இயலுமா.

இராசீவ் காந்தியை படுகொலை புரிந்தவர்கள்.

சிங்களமும் சரி இந்தியாவும் சரி என்ன பூமாலையோடா சென்று புலிகளை அழைத்துவர செய்தது. அல்லது அவர்களுக்கு விருந்துகளை வைத்து சாதுவாகவாக இவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கு என்று இயங்கிக்கொண்டு இருந்த தமிழ்ச்செல்வனில் தொடங்கி கடைசியாக காட்டிய செய்திகள் வரை எது ஒன்றாவது கொலை இல்லாமல் இவர்களால் முடிந்ததா. பிறகு உபதேசம் எல்லாம் அடுத்தவனுக்குத்தானோ..... சொல்லும் தங்களுக்கு எல்லாம் இல்லை போலும்.

அதுவும் கொல்லப்பட்ட அனைவரையும் எவ்வளவு கோரமாக சிங்களமும் இந்தியாவும் நடத்தியது என்று உலகே அறியும், இனியும் இந்த படு கொலை என்றோ இத்தியாதி இத்தியாதி என்றோ பேச ஒருவருக்கும் அருகதை கிடையாது..............

மக்களை கேடையமாக கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டவர்கள் தான் இந்த புலிகள்.

சிங்களமும் சரி இந்திய இராணுவமும் சரி, என்ன புலிகள் எங்களை வந்து தாக்கட்டும் என்று ஊருக்கு வெளியில் யாரும் இல்லா தனி இடத்தை தேர்ந்து எடுத்து காத்துக்கொண்டா இருந்தார்கள். இவர்கள் எப்படி சிங்களத்தோடு ஐகியப்பட்ட ஊரில் ஊருக்கு நடுவில் பாதுகாப்பு மிக்க பகுதியில் இருந்தார்களோ அவர்களும் அப்படி தான் இருந்தார்கள்.

இந்த இருவரில் ஒரு வித்தியாசம் உண்டு, புலிகள் தாக்குதல் தொடுக்கும் போது தாக்குக்கு உள்ளாவது என்னவோ இராணுவம் மட்டும் தான், ஆனால் சிங்கள் தாக்குதலுக்கு உள்ளாவது 99% பொது மக்கள் தான். இதிலே வியாக்கியானம் வேறு, அது மட்டும் நில்லாது, மக்களுக்கும் பொது சொத்துக்கும் புலிகளால் ஆபத்து என்று பரப்புரைவேறு.......

ஈவு இரக்கம் இல்லாமல் மக்களை மிரட்டி அவர்களது உழைப்பை அபகரித்து உல்லாச வாழ்க்கையை நடத்தியவர்கள்.

எப்படி பட்ட உல்லாச வாழ்க்கையை புலிகள் வாழ்ந்தார்கள் என்று தான் சிங்களம் அவர்கள் வெற்றி கொள்ளும் காட்சியில் காண்பித்தார்களே. நாலு அலுமினிய பாத்திரங்கள், 5 துணிமணிகள், மற்றும் கையில் பிள்ளைகளும் பெண்களும். இதை தான் உல்லாச வாழ்க்கை என்றால் சிங்களமும் இந்தியர்களும் வாழும் வாழ்க்கையை என்ன தெய்வீக வாழ்க்கை என்று தான் சொல்லவேண்டும்.

சிங்களம் தங்களது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் புலிகளின் மேல் போர் தொடுத்தது. அது ஒன்றும் அவர்களது அப்பன் வீட்டு பணம் அல்ல, அது போலத்தான் புலிகளும் தமிழ் மக்களின் பணத்தில் சிங்களர்களுக்கு எதிராக போர் தொடுத்தது. அதுவும் எப்படி ஒரு இலட்சம் இராணுவ வீரகளுக்கு எதிராக ஒரு சொற்ப அணியை கொண்டு முடிந்த அளவிற்கு என்று ஆயுதம் வாங்கி போர் புரிந்தது.

தவிர, இந்த தமிழ்மக்களுக்கு என்று எந்தவிதமான ஒரு வருவாய்க்கும் வழியே இல்லை என்றது ஊரரிந்த ஒரு இரகசியம். அப்படி இல்லாத பணத்தை புலிகள் பரித்தார்கள் என்று சொல்ல உங்களுக்கு எல்லாம் நா கூசவில்லை......

அப்பாவி மக்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொன்றவர்கள்.

இதை செய்தது சிங்களமும் இந்தியாவும் தானே ஒழிய புலிகள் இல்லை, அப்படி இருப்பின் உங்களால் உதாரணங்கள் காட்ட முடியுமா. கடைசி நாள் யுத்ததில் மட்டும் 10,000 தமிழர்களை கொன்று குவித்துள்ளது சிங்களம்.

இப்படி சொன்னால் போர் என்றால் பொது மக்கள் மடிவது நடக்ககூடிய ஒன்று தான் என்று செயலலிதா சொன்னதை போல் தான் இந்த அறிவு சீவிகளும் சொல்வார்கள். ஏன் இந்தியா காசுமீரத்தில் பயங்கரவாதிகளோடு சண்டையிடவில்லை அங்கே என்ன இப்படி கொத்து கொத்தாகவா கொன்று நிலத்தை மீட்டது. அல்லது அது முடியாத காரியமா என்ன.

புலிகளை வளர்ந்த மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை புலிகளோடு அழிப்பது என்றது எந்த விதத்தில் சரியாக இருக்கும் பதில் சொல்ல முடியுமா உங்களால்.......

புலிகள் பிரிவிணைவாதிகள். தேசத்தை துண்டாட நினைப்பவர்கள்.

யார் பிரிவிணைவாதிகள், சிங்களம் தவிர்து மற்ற மொழி பேசுபவர்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்று சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரகம் முதலில் இருக்கிறது. இந்தி பேசாத ஒரே மா நிலம் இந்தியாவிலே தமிழகம் மட்டும் தான். அதற்காக தமிழகம் இந்தியாவோடு இருக்க தகுதி இல்லாத பகுதியாக ஆகிவிடுமா என்ன..........

இலங்கையின் பிரிவிணைவாதிகள் சிங்களம் தானே ஒழிய தமிழர்கள் அல்ல....

புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் கூட்டம்.

ஒரு பலம் மிக்க அரசோடு மோதி, அதுவும் ஆயுத போராட்டமாக மோதி விடுதலையை கொள்ளவேண்டும் என்று ஆனபிறகு அதை என்ன பிச்சை எடுத்த செய்யமுடியும். புலிகளுக்கு என்று எந்த விதத்தில் பணமும் பொருட்களும் கிடைக்கும். உண்ணும் உணவுக்கே அங்கே தட்டுப்பாடு. பிறகு எப்படி ஆயுதம் வாங்குவது, போராட்டம் நடத்துவது.

முதலில் இந்தியா தனது சுய நலத்திற்காக போராட்டத்தை துவக்கிவைத்தது, அதுவும் எப்படி ஆயுதம் மற்றும் எல்ல பொருட்களையும் கொடுத்து. பிறகு அதன் தேவை முடிந்த பின், புலிகளது விடுதலையை பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளாது அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவந்தது.

முட்களின் மேல் விழுந்த சேலையாய் புலிகளின் வாழ்க்கை சிங்களத்தின் கரங்களில் சிக்க வைத்துவிட்டு இந்தியா தப்பித்து கொண்ட வேலையில் ஒரே அடியாக சரணடைந்தால் இப்போது என்ன செய்ததோ சிங்களம் அதை தான் அப்பொழுதும் செய்திருக்கும்.

இப்படி எழுதுவதால் புலிகள் போதை மருந்தை கடத்தினார்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் இந்த நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துகொள்ள அப்படி ஒரு வழி இருந்தால் செய்தால் தான் என்ன தவறு என்று தான் கேட்கிறேன்.

அனைத்துலக நாடுகளும் தேடும் பயங்கரவாதிகள்.

எந்த நாட்டில் எல்லாம் அவர்களை தேடினார்கள் என்று பட்டியலிட முடியுமா உங்களால். புலிகளது யுத்தம் சிங்களத்திடம் மட்டும் தான் அந்த எல்லையை தாண்டி அவர்கள் வந்தது கிடையாது.

அனைத்துலக சந்தையில் கள்ளத்தனமாக ஆயுதங்களை கடத்துபவர்கள்.

ஆயுதங்களை வாங்கியவனை இத்தணை சொல்கிறீகளே விற்றவனை பற்றி ஏன் வாய்திரக்கவே மாட்டேன் என்று சொல்கிறீர்கள். அப்படி ஆயுதம் கொடுத்த்வர்கள் எல்லாம் யார் யார் என்று பார்த்தால், இந்தியா, அமெரிக்கா, இரசியா, சீனா, பாக்கிட்த்தானம் ஆகிய நாடுகள் ஆகும். இதிலே இரசியாவையும் சீனத்தையும் தவிர மற்ற நாடுகள் எல்லாம் மக்களாட்சி நடக்கும் நாடு. அது எப்படி ஒரு குடியரசு கொண்ட ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக சமர் செய்ய இந்த குடியாட்சி நாடுகள் எல்லாம் எப்படி ஆயுதங்களை விற்க முனைந்தது என்று கேட்டு பாருங்கள், அவர்கள் பெப்பே பெப்பே என்று தான் பதில் சொல்வார்கள்........

அனைத்துலக நாடுகளுக்கும் முறை கேடான வகையில் பொருளீட்டி கொடுத்து அந்தந்த நாட்டில் பிரிவிணைவாதத்தை தூண்டுபவர்கள்.

புலிகளினால் என்ன என்ன நாட்டில் திவிரவாதம் தலைதூக்கியது என்று சொல்ல முடியுமா உங்களால். சிங்களம் தவிர்த்து வேறு எந்த ஒரு நாட்டின் அமைதிக்கும் குந்தகம் விளைவித்தவர்கள் அல்ல அவர்கள்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இவர்களால் கேடு தான் விளையும்.

கட்டாயம் கேடுதான் விளையும், அடுத்தவன் அழியவேண்டும் என்று இந்தியா விரும்பியது. அவர்கள் என்ன அதற்கு பூமாலையா பரிசாக அளிப்பார்கள். ஈழ தாக்குதலின் ஆவணங்களை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரையும் கேளுங்கள், இந்தியா ஈழத்தில் இப்படி படுகொலைகளை நடத்தியுள்ளதே என்ன செய்யலாம் என்று. கவிஞர் தாமரை சொன்னது போல் தான் சொல்வார்கள். பிறகு என்ன பாராட்டு பத்திரமா கொடுப்பார்கள். தன்விணை தன்னை சுடும். இதை விடுத்து புலிகளுடன் நல்லுரவு கொண்டு இருக்கலாம். ஆமாம் போகட்டும், இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டும் என்ன பாதுகாப்பா என்ன.

இந்த இலங்கையின் இலட்சனத்தை தான் வங்க சமர் போது பார்த்தோமே, இந்திய இராணுவத்தின் மீது குண்டு மழை பொழிய பாக்கிட்த்தான விமானத்திற்கு எரிபொருளும் குண்டுகளையும் நிறப்பிக்கொள்ளும் இடமாக அல்லவா இந்த சிங்களம் விளங்கியது. அது மட்டும் அல்லாது, தற்பொழுது சீனத்துடன் இணைந்துக்கொண்டு அது போடும் ஆட்டதிற்கு அளவே இல்லை.

இது எல்லாம் கேடே இல்லையாம் புலிகளால் தான் கேடு வந்துவிடப்போகின்றதான் என்ன உங்களது அறிவு. இப்படி சொல்ல உங்களுகு வெட்கமாக இல்லை......

இவர்களை ஆதரித்தால், பிறகு இதையே காரணமாக காட்டி காசுமீரும், நக்சல்பாரிகளும் தங்களது அட்டகாசங்களை தொடருவர்.

எங்கே எல்லாம் மனித சமுதாயம் சுரன்டப்படுகின்றதோ அங்கே எல்லாம் போராட்டம் வெடிப்பது இயல்பே. அன்னிய சக்திகள் நாட்டை துண்டாடும் விதமாக நடந்துகொள்ளும் பொழுது பெட்டிகளை வாங்கிக்கொண்டு நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகிகள் இருக்கும் இந்த நாட்டில் இந்த போராட்டகாரர்கள் ஒன்றும் கொடியவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.

0 comments: