Saturday, May 23, 2009

இயூதர்களுக்காக அழுத அழுகின்ற உலகம் மற்றவர்களுக்கா மறுப்பதேன்

இசுரேல் நாடு அமைந்த பிறகும் அல்லது இயூதர்கள் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த பிறகு அவர்கள் செய்த முதல் காரியம் இது தான். தாங்கள் எல்லாம் எப்படி எல்லாம் கொடுமைபடுத்தப்பட்டோம் என்று அனேகமாக எல்லா இயூதர்களையும் கொண்டு எண்ணிகை இல்லா கதைகளும் வந்துவிட்டது. அப்படி அதிக ஆழமாகவும் அழகாகவும் அமைந்த கதைகளை படமாகவும் எடுத்து வெளியிட்டும் வருகிறார்கள் இந்த ஆண்டுகள் வரை.

இப்படிபட்ட எல்லா கதைகளுக்கும் இருக்கும் ஒரு சேர்ந்த அமைப்பு, இயூதர்கள் எல்லோரும் அவர்கள் இருந்த நாட்டில் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்தது மட்டும் அல்லாது. நாட்டு பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களாக இருந்தார்கள்.

இப்படி இருந்த இயூதர்கள், அவர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக படுகொலையும் சித்திரவதையும் செய்யப்பட்டார்கள் என்ற சேதிதான். இந்த செய்கையை இந்த நாள் வரையிலும் கூட இவர்கள் நிறுத்தவில்லை. இந்த முறை ஆசுகர் விருது பெற்ற தி ரீடர் படமும் இந்த இரகம் தான்.

இந்த மாதிரியான படங்களை அவர்கள் வெளியிடவும், எழுதவும் காரணம். அவர்கள் அந்த ஆபத்துகளில் இருந்து தப்பித்துவிட்டாலும், இன்னமும் அந்த தாக்குதலின் பாதிப்புகள் அவர்களை எப்படி வாட்டி எடுக்கிறது என்றதும், எந்த அளவிற்கு அந்த தாக்குதல்கள் இருந்தன என்று அவர்கள் நமக்கு சொல்லும் செய்தி.

சின்டுலர்சு லிச்சுடு படத்தில் ஒரு மிக பெரிய கூட்டத்தையே சின்டுலர் பணம் கொடுத்து காப்பாற்றுவார், படத்தின் கடைசியில் சொல்வார் இன்னமும் அதிகமாக பணமும் நேரமும் இருந்திருந்தால் இன்னமும் அதிகம் மக்களை காப்பாற்றி இருக்கலாமே என்று சின்டுலர்ரு கடைசிக்காட்சியில் புலம்புவதை பார்க்கும் போது பார்க்கும் மக்களின் மனதை கலங்க செய்யும் காட்சி அது.

அது போல தி சன்சைன் என்ற படத்தில் செர்மனி தான் தனது நாடு, அதைவிட்டு நான் ஏன் வெளியேற வேண்டும் என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் வீராப்பு பிடிக்க கடையில் நொந்துவெளியேறி கதை சொல்வதாக அமையும் அந்த கதை. இந்த கதையில் நாயகன் இராணுவத்தினால் படும் பாட்டை பார்த்தால் நமக்கு வரும் எரிச்சல்லில் அவர்களை கொன்றால் என்ன என்றே வரும் அளவிற்கு அழகாக எடுத்து இருப்பார்கள்.

இது போல் ஆயிரம் கதைகளும் நூற்றுக்கணக்கில் படங்களும் அவர்கள் எடுத்துவிட்டதின் பாதிப்பில். இன்றைக்கும் செர்மனி என்றதும், இயூதர்கள் என்றதும் நம்மையும் அறியாமல் மனதில் ஒரு வலிவருவதை உணரமுடியும்.

உலகமக்கள் அனைவரது மனமும் இப்படி தான் இளகியக மனமாக மாற்றம் பெற்று தான் நிற்கிறது. இந்த வகையான கதையாக இருந்தால் பொருமையாக பார்ப்பதும் அந்த படத்தை பார்த்தேன் என்று சொல்வதும் கூட அவர்களுக்கு பெருமையாக இருக்கும் போலும். அப்படி இல்லை என்றால் ஆண்டுக்கு ஒரு படமாவது ஆசுகருக்கு வருவது இயலுமா என்ன.

இப்படி இளகியமனங்கள் ஈழத்தமிழருக்காக உருகாமல் போனது ஏனோ என்று தான் விளங்கவே இல்லை. பிரித்தானியா பாராளுமன்றம் கொண்டுவந்த தீர்மாணங்கள் இலங்கையின் மீது தினிப்பத்தற்குள் இந்த கரளோபகரங்கள் நிகழ்ந்துள்ளது. பத்மனாபா மட்டும் ஊடகங்களுக்கு தெரியபடுத்தவில்லை எனில் இப்படி ஒரு அழிவு நடந்தது என்றும் கூட வெளியில் தெரியாமல் போயிருக்கும் போல.

உலகில் நடக்கும் விடுதலை போராட்டங்களில் மடியும் அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் அனைத்து மக்களும் ஈழத்து மக்களை காக்க ஏன் வரவில்லை.

இதில் இன்னமும் வேடிக்கை என்ன என்றால், நமது வரிப்பணத்தில், தனக்கு என்று ஒரு தனி இராணுவ பிரிவு வரை கொண்டுள்ள ஐ நா வாய் கை மூடி மௌனியாக இருந்தது தான். இன்றைக்கு போர் முடிந்தது என்று சிங்களம் அறிவித்ததும் வரும் ஐ நா நாயகம் ஏன் இதற்கு முன் அப்பாவி மக்களை காக்கும் முயற்சியில் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி இன்னமும் விடையில்லா கேள்விகளாகவே விளங்குகிறது............

ஒரு வேளை இயூதர் கொடுமைகளில் உலகம் இரசித்தது அவர்கள் சொல்லும் கதையையும் அந்த கதைகளில் வரும் அந்த கொடூரமான சித்திரவதைகளும் தானோ, மற்றபடி இந்த உலக்குக்கு எல்லாம் மனிதம் மனித நேயம் என்ற எல்லாம் ஒன்றும் இல்லை போலும்.

அது தான் இலட்ச கணக்கில் அப்பாவி மக்கள் மடியும் போது, அந்த காட்சிகளை இரத்தம் படிந்த காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு பார்த்து சிங்களம் போல இரசிகிறது போலும்.

இந்த வேடிக்கை உலகுக்கு பயந்து தான் நாம் அனைவரும் உலகம் என்ன சொல்லும் என்று பயந்து, உலகுக்கு மாறாக நடக்கவேண்டாம் என்று வாழ்ந்து வந்தோமோ...................என்ன கொடுமை இது.........

1 comments:

Anonymous said...

ஈழ போராட்டம் பயங்கரவாதமாக உலகமெங்கும் ஆவதற்குள், அறியபடுமுன் தமிழர்கள் விழித்திருக்க வேண்டும்!
சரியான திசையில் செல்ல வில்லை! மறு நிர்மாண வேலைகளை துரிதபடுத்த கூட அங்கு தமிழ் தலைகள் எஞ்ச வில்லை!