Wednesday, May 14, 2008

தமிழருவிமணியனும் புலிகளும்

குமுதம் இனையதள இதழுக்கு அளித்துள்ள காணொலியில் இப்படி குறிப்பிடுகிறார் இவர். இராணுவம் செல்லும் இடங்க்களில் பாலியல் பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு அன்றாட நிகழ்வு என்றும். அதை ஒன்றும் யாரும் பெரிது படுத்த தேவை இல்லை என்றும் கூறுகிறார்.

மேலும் இராசீவ் காந்தியின் மரணம் தரும் வேதணையும் அதை குறித்து புலி தலைவர் குறிபிட்டதையும், சொன்ன விதத்தையும் இவரை மிகவும் துன்பத்துகுள்ளாகியது மட்டும் அல்லாது, அனேக தமிழருக்கும் இப்படி ஒரு உணர்வுகளை தந்து இருக்கிறது என்று அடித்து கூறுகிறார். மேலும் இப்படி ஒரு நிகழ்வை நடத்தியதும், இராசீவ் காந்தி மறைவும் ஈடுகட்ட முடியாத இழப்பு என்றும் அவர் கூறுகிறார்.

இங்கே ஒரு கொலைக்கு மற்ற ஒன்று ஈடு என்று நாம் சொல்ல வரவில்லை. அடுத்தவரின் உயிர் என்றால் 100 திலீபன் இறக்க வேண்டியது தானே, அப்போது இந்த உலகம் இவர்கள் பக்கம் வந்து நிற்காதா என்று சொல்கிறார், இராணுவம் என்றால் பாலியல் பலாத்தகாரம் ஒரு அன்றாட நிகழ்வு என்று சொல்கிறார். ஆயுதம் தூக்கும் வரையில், அறப்போர் என்று கிளம்பியவர்கள் பாதிபேருக்கு மேல் வீடு திரும்பியதில்லை. அப்படியே தெரிம்பினாலும் அவர்களை வரவேற்க, அவர்களின் வரவை கொண்டாட அவர்களது குடும்பங்கள் இல்லை. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றா சிங்களம் இருக்கிறது. எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே முடிவு மரணம் என்றும் அதும் மரணத்திற்கு முன்னால் அந்த மனிதன் என்ன என்ன வேதணைகளை அனுபவிக்க முடியுமோ அத்தணை வேதணைகளையும் அனுபவித்த பின்பும், சாவுக்காக ஏங்கவிட்டு, ஒரு வேளை தானாக போனாவது நிம்மதியாக போகும். இல்லையேல் அணு அணுவாக வதைத்து கொல்லும் சிங்களத்திடம் தினமும் ஒரு திலீபனை அனுப்ப சொல்லி சிபாரிசு செய்கிறான் இவர். ஆண் என்றால் தான் இவ்வளவும், அதுவே பெண் என்று இருந்துவிட்டால். அவள் பெண்ணாக பிறந்தற்காக சாவின் விளிம்புவரை வருந்தகூடிய ஒரு சாவை அல்லவா கொடுத்துக்கொண்டு இருக்கிறது சிங்களம். இந்த மனிதர்களிடம் தினமும் ஒரு திலீபனை அனுப்பினால் என்ன என்று கேட்கிறார் மனிதர்.

இந்த மனிதர்களின் உயிரும், வலியும், வேதணையும் இராசீவ் காந்தியின் உயிருக்கும், வலிக்கும், வேதணைக்கும் எந்த அளவில் குறைந்தது என்று நீங்கள் எங்களுக்கு விளக்க கடமைபட்டுள்ளீர்கள். இங்கே சொல்வது அவரை புலிகள் கொன்றார்கள் என்றோ அல்லது அப்படி எவரோ ஒருவர் கொன்றது சரி என்றும் நாங்கள் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் படும் வேதணை எங்களின் வேதணையிலும் எந்த விதத்தில் அதிகம். எங்களது உயிர் அப்படி என்ன மலிவாக போனது.

காந்தி தேசத்தில், மதத்தின் பெயராலும், இன்னமும் எத்தணையோ காரணங்களுக்காக வருடா வருடம் அப்பவி மக்கள் கொன்று குவிக்கப்படுகிறது, உதாரணத்திற்கு குசராத்தையும் மேற்கு வங்கத்தையும் எடுத்துக்கொள்ளலாம். அங்கே எல்லாம் யாரும் ஆயுதம் தூக்க வில்லைதான். ஏன் அறவழி போராட்டம் கூட நடந்த்த அந்த கூட்டத்திற்கு நாதி இல்லை. அதற்காக அவர்களின் மேல் நடக்கும் வன்முறைகள் என்ன முடிந்தா போய் இருக்கிறது. இன்றைக்கும் எந்த ஒரு போராட்டம் என்றாலும் எதிர்க்க துணிவில்லாத, அடித்து போட்டால் ஏன் என்று கேட்டக நாதி இல்லா அந்த அனாதை சமூகத்தில் அன்றாடம் சாவி நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது அதே காந்தி பிறந்த தேசத்தில். காந்தி மன்னிலே அவரது செயல்முறை தோற்று போய் நிற்கும் இந்த காலத்தில் 100 திலீப்பனை பலிகொடுக்க சொல்லும் உங்களின் சித்தாந்தத்தை என்ன வென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஐயோ அடிக்கிறானே காப்பாத்துங்கள் என்று சொன்னால், முடிந்தால் காப்பாற்றலாம். அதைவிடுத்து தஞ்சம் புகுந்தவனை நாவில் தேன்தடவி இனிக்க பேசி, கழுத்திலே ஈர துணியை போடுபவனுக்கு தமிழிலே ஒரு சொல் உண்டு அதை நாம் சொல்ல விரும்பவில்லை.............வெட்க்கம்.

0 comments: