Friday, February 17, 2017

ஒரு நீதிபதியை இதைவிட அதிகமாக யாரும் கேவலப்படுத்த முடியாது

பொதுவாக நீதிமன்றத்தையோ, நீதிபதியையோ அல்லது நீதிமன்ற தீர்ப்புகளையோ விமர்சிக்க ஒருவருக்கும் அனுமதி இல்லை. இது அனேகமாக எல்லா நாட்டிலும் இருக்கும் சட்டம். மக்களாட்சி கொண்ட நாடுகள் உட்பட.

இந்த பட்டியலில் நீதிமன்றமும் மற்ற நீதிபதிகளுக்கும் விலக்கு உண்டு அனைத்து நாடுகளிலும்.

அந்த அடிப்படையில் நீதியரசர் குமாரசாமியை வரிக்கு வரி விமர்சனம் செய்து தீர்ப்பை வெளியிட்டது இந்தியாவின் உச்ச நீதிமன்றம்.

அந்த தீர்ப்பின் சாரத்தை மக்கள் இப்படி எடுத்துக்கொள்ளலாம்.

வழக்கில் குற்றவாளி என்று அளித்த முந்தைய தீர்ப்பில் சொல்லப்பட்ட அடிப்படை காரணத்தையே மாற்றி காட்டியது மட்டுமோடு நில்லாமல் இந்த அளவிற்கு கொலை செய்தால் அது ஒன்றும் குற்றமாகாது என்றும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியும் உள்ளார் என்றதாகும் என்பதாகும்.

அதோடு நிற்காமல் வழக்கு நடந்த காலகட்டத்தை எடுத்துப்பார்க்கும் போது முன் தீர்மானிக்ப்பட்ட ஒரு முடிவுக்கு அழக்காக வழியை அமைத்துக்கொடுத்தாகவும் கொள்ளலாம் என்றும் விமர்சித்துள்ளார்கள் உச்ச நீதிமன்றத்தில்.

இந்த தீர்பு மூலம் நீதிமன்றமும் நீதிபதிகளும் முறையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை என்று மறைமுகமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

அறிவியலில் சொல்வது போல் இப்படி தான் நடக்கனும் சூழ் நிலைகள் எந்த மாற்றமும் கொள்ளாத வரை(on Ideal Conditions) என்று வரையறுப்பதை போல்.

அரசாங்கத்தில் ஒரு அங்கமாக விளங்கும் நீதித்துறை என்றது ஒரு பெயர் மட்டுமே, மைசூர் போண்டாவில் மைசூர் இருக்கும் என்று நீங்கள் நம்பினால் கம்பெனி பொருப்பாகாது என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது இல்லை மறுபடியும் நிறூபிக்கப்பட்டுள்ளது...........

0 comments: