Friday, February 19, 2016

மீண்டும் அத்வானி பாணியில் வெடிகுண்டு அரசியல் - பாசக

எப்போது எல்லாம் பாசக பலவீனப்பட்டு விடுகின்றதோ அப்போது எல்லாம் தேசபக்தி தீயை மூட்டி, தேசத்தையும் தேசியத்தையும் காக்க பாசகவாவை விட்டால் யாரும் இல்லை என்றது போல் ஒரு போலி பிம்பத்தை காட்டி ஏமாற்றும்.

சென்ற முறை பாசக ஆட்சியில் அத்வானி எங்கே எல்லாம் கூட்டம் நடத்த செல்வாரோ அங்கே எல்லாம் அத்வானி வருவதற்கு முன்பும் இல்லை பாதுகாப்பான தூரம் அந்த ஊரைவிட்டு அத்வானி சென்றபிறகு குண்டுகள் வெடித்ததை பார்த்து இருக்கின்றோம்.

6 ஆண்டுகாலமும் அந்த தீவிரவாத அமைபுகள் ஒரு முறை கூட அத்வானி இருக்கும் போது குண்டுகளை வெடிக்கமுடியாமல் பார்த்துக்கொண்டோம் என்று சொல்லி மறைக்க பார்க்கிறது இல்லை அந்த தீவிரவாத இயக்கம் எல்லாம் குண்டுகள் மட்டுமே வெடிக்க தெரிந்த கத்துகுட்டி இயக்கம் என்று ஒரு புதிய விளக்கம் தரபோகின்றதா....

ஏதோ ஒரு தடவை மறுதடவை என்றால் எங்கேயோ தவறு நிகழ்ந்தது என்று சொல்லாம், ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படி சாத்தியப்பட்டு இருக்கும் அதுவும் 6 ஆண்டுகள் என்றால் தர்கரீதியில் இது பாசகவினால் நடத்தப்பட்ட வெடிகுண்டு நாடம் இல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.

அன்றைக்கு வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து உணர்வுகளை எழுப்பியவர்களுக்கு இப்போது கருத்து குண்டுகளை வீசி அதைவிட அதிக உணர்ச்சி கூட்டங்களை எழுப்பி வருகின்றது.

மறுபடியும் என்று முன்னால் காங்கிரசு தலைவர்களின் பெயர்களில் இருக்கும் அரசு சார் பல்கலைகழகளும் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்த கருத்து குண்டுகளை திட்டமிட்டு வெடித்துவிட்டு முதலில் குரல் கொடுத்துவிட்டால் பழி நம்மீது விழாது என்ற கருத்தில் இயங்கி வருகின்றது.

தென்னகத்தை பொருத்த அளவில் வட மாநிலங்களில் ஓடும் உணர்ச்சி பெருக்கு எல்லாம் ஒன்றும் ஓட போவது இல்லை. இந்த மாதிரி நிறைய பார்த்து இருக்கிறார்கள். மிகவும் தெளிவாக கண்டிக்க தக்க அந்த கோசங்களை பேசியவர்கள் தண்டிக்கவும் தக்கவர்கள் தான். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கன்னைய குமாரையும் கோவனையும் கைது செய்து அதன் மூலம் மற்றவர்களை மிரட்ட நினைப்பதை ஊடகங்கள் உட்பட அனைவரும் கண்டிப்பதை பார்க்கும் போது பெருமை கொள்ள நினைக்கிறது மனது. உண்மையில் அந்த கேசங்களை பேசியவர்கள் கடைசியில் பாசகவினராக இருப்பார்கள். கையில் இசுமாயில் என்று பச்சை குத்தி இருப்பார்கள், தலையில் குள்ளா வைத்து கொண்டு கத்தி இருப்பார்கள். இல்லை என்ன என்ன இசுலாமிய அடையாளங்கள் இருக்கின்றனவோ அவைகளில் மிகவும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள கூடிய ஒப்பனையில் வந்து கத்தி கோசமிட்டு பிறகு ஓடி ஒளிந்து இரகசியமாக ஒப்பனையை களைத்துவிட்டு வந்து அப்படி கத்திய மாணவர்களை கைத்து செய்யுங்கள் என்று அவர்களே முழக்கமும் இடுவார்கள்.

இது மிகைபடுத்தி எழுதப்படுவது இல்லை, இணையத்தில் இருக்கும் மாணவர்களின் ஆங்கில பேட்டியை பார்த்தால் உங்களும் உண்மை புரியும்.

தென்னகத்தில் பாசக எதிர்பார்த்த எழுற்சி இல்லாததால் ஊடகங்களில் தோன்றும் பாசகவினர் என்னங்க அவங்க இந்தியாவை துண்டாட வேண்டும் என்று சொன்னவர்களை ஆதரிக்காதீர்கள் என்று புலம்புவதையும் அந்த புலம்பல்களுக்கு சொன்னவர்களை கைது செய்யுங்கள் தண்டியுங்கள் ஆனால் இவர்கள் செய்த தவறு என்ன என்று கம்பீரமாக கேட்பதை பார்த்து பாசகவினர்கள் திணருவதையும்  நெளிவதையும் கண்கூடாக பார்க்கமுடிகின்றது.

இனி என்ன என்ன கருத்து வெடிகுண்டுகளை எல்லாம் பாசக வீச போகின்றதோ அதில் யார் யாரை எல்லாம் கொளுத்த போகின்றதோ. ஒருவரும் கிடைக்கவில்லை என்றால் கோத்ராவில் இந்துகளையே கொளுத்தியது போல் பாசகவினர்களையே கொளுத்தும் பாசக. யார் அந்த அப்பாவி பாசகவினரோ பாவம் அந்த குடும்பம். நிச்சயமாக கருப்பு நிறத்தில் இருக்கப்போகும் படித்த ஏழை மாணவராக இருப்பார் என்று மட்டும் உறுதியாக கணிக்கலாம்.

0 comments: