Wednesday, February 17, 2016

சாமிக்கே சம்மன் - மக்களை முட்டாள்களாக்கும் விகடன்

இன்றைய செய்திகளில் விகடன் வெளியிட்டிருக்கும் செய்தி இது.

பொது மக்களுக்கு தான் நீதிமன்றங்களின் நடப்புகள் தெரியாது இப்படி எல்லாம் பேசுவார்கள், விகடனுக்கு கூடவா தெரியாது நீதிமன்ற நடப்புகள்.

என்னமோ ஒரு நீதியரசர் யார் என்ன என்று விசாரித்து சம்மன் அனுப்ப சொன்னது போல் செய்தி நீள்கிறது.

 நீதிமன்ற சம்மன் அந்த வழக்கை கையாளும் வக்கீலோ அல்லது தனி நபரோ இவருக்கு ஒரு சம்மன் அனுப்புங்கள் என்று படிவம் பூர்த்தி செய்து நீதிமன்ற பதிவாளரிடம் கொடுத்தால் வழக்கு எண் மட்டுமே சரிபார்க்கப்பட்டு நீதிமன்ற பெயரில் அனுப்பபடும்.

இது வழக்குகளை சந்தித்தவர்களுக்கும் வக்கீல்களுக்கும் தெரிந்த ஒரு சாதாரண செய்தி. இதை வைத்துக்கொண்டு மக்களை முட்டாளாக்க நினைகிறது விகடன்.

விகடன் என்ன செய்து இருக்க வேண்டும் இந்த சம்மனை அனுப்பியவரை அடையாளப்படுத்தி இப்படியயா செய்வீங்க என்று சொன்னால், அட மடையரே என்று மக்களுக்கு செய்தியாக அமைந்து இருக்கும் அதைவிடுத்து நீதிமன்றத்தை கேலி பேசும் விதமாக குறும்பான செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.

கேட்பவர்கள் கேனையாக இருந்தால் எலி ஏரோபிளேன் ஓட்டுதுன்னு சொல்வார்களம் அந்த மாதிரி. போங்கப்பா போய் வேலைய பாருங்கப்பா உங்க அக்க போர் தாங்கல.......

0 comments: