Saturday, February 13, 2016

விசாரணை படமும் சுப்பிரமணி சாமியும்

விசாரணை படம் காட்டும் செய்தி இதுவாக எடுத்துக்கொள்ளலாம். எப்போது எல்லாம் ஒரு மிக பெரிய அநியாயம் நிகழ்த்த படுகின்றதோ அப்போது எல்லாம் சட்டத்தின் மற்றும் சமுதாயத்தின் கண்களை அடைக்க சில பல அப்பாவிகளை பலியிடப்படுகிறது என்று படம் ஆணித்தனமாக விளக்குகிறது.

என்ன தான் நல்ல மனிதராக இருந்தாலும் சூழ் நிலையில் மாட்டும் போது மேலதிகாரிகளுக்கு பயந்து ஐயா சொல்ராரு ஆய்வாளர் கொல்கிறார் என்று முகத்தில் அறைவது போல் சொல்லி இருக்கிறார்கள்.

சூழ் நிலையில் மாட்டி இந்த காரியத்தை செய்வதற்கு பதில் குண்டடிபட்டு சாகலாம் சுடு என்று சொல்லும் வசனமும் அதற்கு பதிலாக நான் வாழ்வதற்காக உங்களை கொல்வதா என்று சொல்லும் வசனம் படத்தின் உச்சம்.

அஞ்சாதே படத்தில் ஆய்வாளனாக சேர்ந்த புதிதில் கண்ட முதல் கொலையை பார்த்ததும் தடுமாறும் தடுமாற்றம் போல் சமுத்ரகனி பாத்திரம் அழகாக படைத்து இருக்கிறார் இயக்குனர்.

இப்படி எத்தனையோ செய்திகளை படத்தில் இருந்து பட்டியலிட்டு எழுதலாம். ஆனால் பதிவின் நோக்கம் அது அல்ல.

விபு வழக்கு விசாரணைக்கு வரும் போது எல்லாம் சுசா கொன்னுடுங்க அவங்கள வெளியில விட்டு விடாதீங்க என்று தூக்கத்தில் கூட அலறுவது ஏன் என்று அழகாக இந்த படத்தின் மூலம் பொது மக்களுக்கு புரியவைத்திருக்கிறார்கள்.

விசாரணை அதிகாரிகள் மற்றும் திருச்சி சிவா, சுப்பிரமணி சாமி படுகொலைக்கு முன்னும் பின்னும் என்ன எல்லாம் செய்தார் என்று அழகாக விளக்கியும். அவைகளின் அடிப்படையில் தயாரிக்க பட்ட செயின் ஆணையம் மற்றும் வர்மா ஆணையம் அறிக்கைகள் காணாமல் போனது வரை இந்த 7 மனிதர்களை கொன்று கணக்கு காண்பித்து விடுவோம் என்ற செய்கை தவிர வேறு என்ன.

அந்த 7வரும் உயிருடன் இருக்கும் வரையில் என்றைக்கு வேண்டுமானாலும் தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.

இன்னமும் யார் யார் எல்லாம் இந்த செய்கையில் இந்திய அளவில் விலை போயிருக்கிறார்கள் என்று ஒரு பெரிய பட்டியலாக இருக்க வேண்டும் அதனால் தான் உச்ச நீதிமன்றம் வரை இந்த சு சா வால் ஆணையத்தின் அறிக்கைகள் வரை அழிக்கவும் கொல்லுங்க கொல்லுங்க என்று பரப்புரை செய்யவும் முடிகின்றது.

இன்னும் இது போல் நிறைய படங்கள் தமிழிலாவது வரவேண்டும் வரவேற்போம் அந்த மாதிரியான படங்களை.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் மனிதர்களும் அடித்தால் திருப்பி அடிக்க வலிமை இல்லாத மக்களும் தான் இந்த மாதிரியான அசிங்க மனிதர்களின் இலக்கு.

வலிமை தான் ஆளும் என்று இருந்த காலத்தில் கூட நாடும் சட்டமும் அனைவருக்கும் பொது என்று தமிழகத்தில் தொன்று தொட்டு நாகரீகமாக வாழ்ந்து வந்து இருகின்றோம் ஆனால் இன்றைக்கு அவைகள் எல்லாம் அடுத்தவருக்கு அறிவுரை சொல்லவும் புத்தகத்திற்கு மட்டுமே என்று ஆகிபோனதை பார்க்கும் போது கண்ணை கட்டுது...........

0 comments: