Monday, March 21, 2011

மானம் கெட்ட இந்தியா, லிபியா பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது, நீலி கண்ணீர் வடிக்கிறாயோ......

வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருக்கும் செய்தியை பாருங்கள்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=393754&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

"லிபியாவில் தற்போதைய வன்முறை நிகழ்வுகள், விமானத் தாக்குதல்கள் ஆகியவற்றை மிகவும் கவலையுடன் கவனித்து வருகிறோம். வன்முறைகளையும் வேறுபாடுகளை களைய படைகளை பயன்படுத்துவதையும் கைவிட வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொள்கிறது. ஆயுத மோதலை நிறுத்தவேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை." என்று எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

ஏன் இலங்கையில் இப்படி தானே நடந்தது, அப்போது எல்லாம் என்ன செய்தீர்கள் நீங்கள். இப்போது கடாபீ மக்களை படுகொலை செய்வதை போல் தானே அன்று ஒரு இலட்சம் மக்களை ஒரிரு நினங்களில் கொன்றார்கள். அப்போது எல்லாம் இந்தியா தன் பங்குக்கு ஆளையும், ஆயுதங்களையும், காட்டிக்கொடுக்கும் செயலையும் எந்த வெட்கமும் இல்லாமல் செய்துவிட்டு. இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்துக்காட்டுகிறீர்களோ.

ஏன் இவர்கள் தான் மனிதர்களா, அங்கே இலங்கையில் இறந்தவர்கள் எல்லாம் என்ன எள்ளும் புல்லும்மா.........மனம் கெட்டவர்களே, நீங்கள் எல்லாம் எந்த கதிக்கு ஆளாவீர்களோ...அந்த கடவுளுக்கே வெளிச்சம்.........

1 comments:

')) said...

இந்தியா மாத்திரமல்ல உலகில் பல நாடுகள் இன்று லிபியாவின் மக்களுக்கு விடும் கண்ணீர்; சிரிப்பை வரவழைத்தது.
அங்கு எண்ணெய் உண்டே! இலங்கையில் என்ன? உண்டு.