Friday, April 1, 2011

இந்தியா பாக்கிட்த்தான் அரைஇறுதி கிரிகெட்போட்டி - குட்டி பகை தாய் உறவாம்

இந்த போட்டி நடக்கப்போகிறது என்று முடிவானது முதல் போட்டியின் கடைசி பந்துவரை பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை.

போட்டி நடந்த மைத்தானத்திற்கு போட்டி நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னமே வந்துவிடவேண்டும் என்ற கட்டாயத்தில் அனைவரும் வரவழைத்ததும்.

போட்டியை கானவந்த பிரபலங்கள் முதல் அடி மட்ட இரசிகன் வரை அனைவரும் விரல் நகம் இழந்த படியாக போட்டியை இரசித்ததை பார்க்க முடிந்தது.

மைதானத்தை சுற்றி விமான எதிர்ப்பு பீரங்க படை பாதுகாப்பில் போட்டி நடந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. 8+3 மணி நேரமும் என்னவாது நடந்து விடுமோ என்ற தவிப்பில் இந்திய பாதுகாப்பு துறை அலரியப்படி இயங்கியது தான் யாருக்கும் தெரியுமா.

வீட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் ஒரு கதவு போட்டி மூடி மறைத்துவிட்டு சிரித்துக்கொண்டே வாங்க என்று சொல்வது போல் அல்லவா இந்த போட்டியை இந்தியா நடத்திகொடுத்துள்ளது.

இந்த போட்டியை கான கிலானி எதற்கு வரவேண்டும். இத்தனை கெடுபிடிகளுக்கு இடையே அவரை வர சொல்லி இவ்வளவு செலவுகளை இந்தியா செய்யத்தான் வேண்டுமா என்ன.

இதற்கு பேச்சு நடக்கும் போதே முடியாது என்று சொன்னால் என்ன.

அப்படி என்ன பாக்கிட்த்தானம் என்ன நமது நண்பனா, நம்மை அசந்த சந்தர்ப்பத்தில் கழுத்தை நெரித்துகொல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஓநாய் அல்லவா அவர்கள். அவர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதையும் பாதுக்காப்பும்.

இதே சோனியா, மன்மோகன் சிங்கை அவர்கள் அரசியல் நடத்தும் நாடாளுமன்றத்திலேயே முடித்துவிடும் படி நாடாளுமன்றம் வரை ஆளை ஏவிய பாக்கிட்த்தானத்தின் அதிபருக்கா இந்த மரியாதையும் பாதுகாப்பும்.

ஆடுகளத்திலே இந்திய வீரர்கள் காட்டிய வீராப்பில் 100ல் ஒரு பங்குகூட இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லையே. உலகக்கிண்ணம் கூட வேண்டாம் இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றால் போதும் என்று வீரர்கள் மட்டும் அல்ல, முழு இந்தியாவும் உணர்வதும் சொல்வதும் உங்களுக்கு மட்டும் உறைக்காமல் போனது ஏன். உண்மையிலே அரசியல்வாதிகள் என்றால் மானம் வெட்கம் ஈவு இரக்கம் எல்லாம் அற்று போனவர்கள் என்று சொல்வது சரிதான் போலும்.

கடைசியாக மும்பையில் நுழைந்து பொதுமக்களை கொன்று குவித்து அட்டகாசம் செய்த செயல்கள் வரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் எப்படி உங்களால் இப்படி நயந்து நடந்துகொள்ளமுடிகிறது. வெட்கம், வேதனை, பரிதாபம்.

2003ல் சச்சினும் சேவாக்கும் விளாசிய விளாசல் இந்த போட்டில் கானும். இல்லை என்றால் 7 முறை வாய்ப்பு கொடுத்து சச்சின் வெளியேறுவாரா......

அன்றைகு சச்சினுக்கு பிறகு இந்தியாவின் வெற்றிக்கு திராவிட்டு பொறுப்பாக அழைத்து சென்றார், ஆனால் இந்த போட்டியில் அணியை கடைசிவரை கொண்டு செல்ல வேண்டிய தலைவனே எனக்கு என்ன என்று ஆடினார் போல் தான் இருந்தது.

சேவாக்கிற்கு என்றைக்குமே கவனம் இருந்தது இல்லை. அப்படி அவர் அடிக்கும் ஓட்டங்கள் தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும், என்ன இன்னமும் இரு 30 அல்லது 40 ஓட்டங்கள் எடுத்து இருந்தால் இன்னமும் ஒரு வலுவான நிலையில் நமது போராட்டம் இருந்து இருக்கும்.....

முன்னாப் பட்டேலை ஒருவரும் மனிதனாகக்கூட மதித்தது இல்லை இது வரை நடந்த ஆட்டங்களில். ஆனால் இந்த போட்டியில் அவரிடம் அதிகம் திணரியதை பார்க்க முடிந்தது. மனிதன் ஆருதலடைந்திருப்பார்.....

எங்கள் அணியில் ஓரம் என்ற ஒருவர் இருக்கிறார் அவர் பந்துகளை மிகவும் நேராக வீசுவார் என்று பகிடி செய்யப்பட்ட நேரா அனைவரது பாரட்டையும் பெற்றது நல்ல மாற்றம். மனிதன் தனது வீச்சில் இன்னமும் அதிகமான வித்தியாசங்களை காட்டி குழப்ப பழகவேண்டும்......

சிக்கலான நேரங்களில் நிதானமாகவும் பொறுப்பாக விளையாடும் யுவராச்சு ஏமாந்தது நம்மையும் ஏமாற்றியதும் கோபமே.....

2003ல் பெற்ற வெற்றியை போல் இது இமாலய வெற்றி இல்லை என்றாலும் நல்ல வெற்றி என்ன கடைசி பந்து வரையில் விட்டிருக்க வேண்டாம்..........

இது எல்லாம் பரவாயில்லை, இறுதி போட்டிக்கு இலங்கை அதிபர் வந்து பார்க்கப்போகிறாராமே. கருணாநிதியையும் உடன் சென்று பார்க்க சொல்லுவோம் சரியாக இருக்கும்.

0 comments: