Friday, March 11, 2011

இலங்கையில் பின்லேடன் தலைமையில் அல்குவைதா தீவிரவாத பயிற்சி முகாம் - அமெரிக்க உளவு நிறுவனம் தகவல்

இலங்கையில் பின்லேடன் நேரடி தலைமையில் அல்குவைத்தா தீவிரவாத முகாம்கள் இரகசியமாக நடந்து வருவது அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது.

பின்லேடன் ஆப்கானிலும், பிறகு பாக்கிட்த்தணத்திலும் இருப்பதாக சந்தேகித்து தாக்குதல்களை தொடுத்த அமெரிக்க இரணுவம் இது வரை பின்லேடனை பிடிக்கவோ கொல்லவோ முடியாத நிலையில் இந்த செய்தி கசிந்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் இலங்கை அரசை விசாரித்த அமெரிக்காவை சரி கட்ட எண்ணிய இலங்கை அரசு, சமாதானத்திற்கான போரில் அழிக்கப்பட்ட புலிகள் தான் பீனிக்சு பறவையாக உயிர்த்தெழுந்து அமெரிக்கா, ஆப்ரிக்கா, அண்டார்டிக்கா என்று உள்ள தனது சாக்களுடன் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தின் சென்னை செயின்டு சார்சி கேட்டையின் பின்புறம் இந்திய இராணுவத்தின் நேரடி பார்வையில் மீண்டும் பயிற்சியில் ஈடு படுக்கிறார்கள் என்று சொல்லி சமாளித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

அதுமட்டும் அல்லாது அப்படி பயிற்சி அளிப்பதை இலங்கையின் உளவு நிறுவனமும், பாக்கிட்த்தாணத்து ஐஎசுஐ நிறுவனமும், சீனாவின் உதவியோடு, சீன உளவு செயற்கை கோள் உதவியுடன் படம்பிடித்த படங்களையும் அமெரிக்காவிடம் அளித்துள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

இப்படி இலங்கை அரசு தெரிவிக்கும் செய்தியை ஒரு வேளை இந்திய அரசு மறுக்குமாயின், சீனாவிற்கு திரிகோணமலையை மொத்தமாக எழுதிக்கொடுக்கும் என்ற இரகசிய மிரட்டலையும் மனமோகன்சிங் அலுவலகத்திற்கு ஒரு தபால் அட்டை மூலம் அனுப்பியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

இந்தியாவின் காலின் கீழ் சீனா மூக்கை நுழைப்பதையோ அல்லது பாக்கிட்த்தாணத்திற்கு இலங்கையில் தளம் அமைத்துக்கொடுப்பதையோ விரும்பாத இந்தியா, சென்னை காவலர் தலைவர் ஒருவரை மட்டுமே கொண்டு அந்த செய்தியை மென்மையாக கண்டித்து, கண்டும் கானாமலும் விட்டுவிட்டது என்றும் தெரிவிக்கின்றது.

நமக்கு என்ன, நாம் நமது வேலையை கவனிப்போம். இப்போது அதிக விவாதம் நடக்கும் செய்தி கிரிகெட்டும், திமுகவின் தேர்தல் உடன்படிக்கையும். மாய்ந்து மாய்த்து எழுதுவோம். வாழ்க இந்தியா, வளர்க அதனது குடியாட்சி.

அடடா அமெரிக்காவையும் எதெதோ சொல்லி ஏமாற்றிவிட்டார்களே இந்த இலங்கை எத்தர்கள்.................shame shame puppy shame........

3 comments:

Anonymous said...

hello,
charu ungalai thaan kum minaara?
naayrllam paaka vennamnnu mudivu eduthen; neengalum uruthi paduththiyadarkku nandri

')) said...

அனானி நண்பரே என்ன சொல்கிறீர்கள், சாரு என்னை ஏன் போட்டு தாக்க வேண்டும், தொடர்புகளை கொடுத்தால் உறுதி செய்கிறேன். சொல்வீர்களா....

Anonymous said...

பனிமலர் admin அவர்களுக்கு..

இந்த பதிவுக்கு என்ன ஆதாரம்.
எதாவது link இருந்தால் share பண்ணவும்...