Tuesday, December 21, 2010

யார் இந்த விருதகிரி - ஆங்கிலபடம் TAKENஇன் தமிழாக்கம்



படத்தில் கதை இயக்கம் என்று விச்சையகாந்தின் பெயரை காண்பிக்கிறார்கள். முதல் தயாரிப்பு அதுவும் நடப்பு செய்திகளை கொண்டு படமாகப்பட்டது என்ற புகழுரைகள் வேறு. இந்த முடியாத வயதிலும் தலைக்கு வண்ணமாக வண்ணங்களை மாற்றிக்கொண்டும், அயலக காவல் துறைகளோடு மோதுவதும். என்னமோ அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை என்றது போலும் ஆரம்ப காட்சிகள் அரங்கேற்றம்.



இந்த படம் ஆங்கிலபடம் இன் ஈ அடிச்சான் பிரதி. எந்த அளவிற்கு என்று கேட்டால் ஆங்கிலத்தில் அந்த கடத்தல் கும்பல் ஒரு கல் உடைக்கும் இடத்தில் வைத்து அந்த விபச்சார தொழில் நடத்துவார்கள். அந்த கல்லுடைக்கும் இடத்தில் இருந்து நாயகன் தப்பி ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வண்டியில் தப்பிக்கும் போது அந்த வண்டி விரட்டல் அந்த கற்களின் குவியல்களுக்கு நடுவில் நடப்பதாக எடுத்து இருப்பார்கள் அந்த அளவிற்கு ஈ அடிச்சான் பிரதி இது.

மற்றபடி அந்த இரண்டு பெண்கள் ஆசுத்ரேலியா வந்து இறங்கி பின் கடைசியில் தப்பிக்கும் வரை அனைத்தும் காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் ஆங்கிலப்படமே.

இந்த இலட்சணத்தில் ஆசுத்ரேலிய அரசும் நாடும் இந்தியர்கள் வந்து அவர்களது நாட்டின் பொருளையும் செல்வங்களையும் கொள்ளயடிக்க வந்த கும்பலை நடத்துவது போலவும் காட்டியுள்ளார் இந்த படத்தில். உண்மையில் அங்கு படிக்க செல்லும் நம் மாணவமணிகள், கூட்டம் கூட்டமாக ஆட்களை அழைத்துக்கொண்டு தீபாவளி பொங்களுக்கு ஊர்வலம் நடத்திக்காட்டுவதும். 200, 300 வண்டிகளில் அணிவகுத்து ஊர்வலம் வருவதும், உள்ளூர் மக்களை பார்த்து நையாண்டி அடிப்பது தான் அந்த அடி தடிகளுக்கு உண்மையான காரணம்.

இவைகளுக்கு எல்லாம் மேலாக கிரிகெட்டு ஆட்டம் நடந்தால் அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு அவர்கள் ஆட்கள் வெளியேறும் போது தாரைதம்பட்டை என்று வாசித்துகாட்டினால் எப்படி இருக்கும். என்ன தான் எழுத்துரிமை பேச்சுரிமை என்று இருந்தாலும் எங்கே நம்ம ஆட்களை பெங்களூரூவில் சென்று அப்படி செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம். அடுத்த நாள் கையும் காலும் இல்லாமல் வந்து சேர்வார்கள். நமது நாட்டிலே நிலை இப்படி என்றால் அடுத்த நாட்டில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு ஏன் இந்த வீண்விளையாட்டுகள்.

இப்படி ஒரு நொண்டி சாக்கு இந்த படத்திற்கு தேவைபடுகிறது இல்லை என்றால் மூலப்படம் அப்படியே அல்லவா இருக்கிறது என்று சொல்வார்கள் என்று யோசனை கூறி இருப்பார்கள் போலும்.

விச்சைகாந்திற்கு இனி கவலையே இல்லை, என்ன என்ன காவலர்கள் படம் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் இனி இப்படி ஒரு தமிழக அம்மா அப்பா, நண்பரின் மகள் என்று தலையையும் காலையும் மட்டும் மாட்டிவிட்டு படம் எடுப்பார் போலும்.

இந்த திருட்டு சரக்கை வைத்துக்கொண்டு படம் முழுக்க அடுத்தவர்களை இவர் பகிடி போசும் வசங்கள் இருக்கிறது பாருங்கள் செயா தொலைக்காட்சி செய்திகள் போல் ஒரே அருவருப்பு.

ஒருவேளை இவரது கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்கால், படமே எடுக்கமுடியாமல் திணரும் இவர் எப்படி சொந்த ஆட்சியை கொடுப்பார். இன்னும் ஒரு மண்ணார்குடி கும்பலைபோல் வேலூரோ அல்லது ஆந்திரா கும்பலோ கதை வசனம் எழுதிகொடுக்க இவர் சட்டசபையில் நின்றுக்கொண்டு இவன் திருடன், அவன் அயோக்கியன், நான் மட்டும் தான் நல்லவன் என்று வசனம் சொல்வார் போலும்.

முதலில் அடுத்தவர் உழைப்பை திருடும் செயலை நிறுத்துங்கள், பிறகு நீதி செல்ல வாருங்கள். அடுத்த படமாவது திரைபட கல்லூரி மாணவர்களிடம் ஆலோசித்து இது தானா எழுதின கதையா அல்லது மண்டபத்தில எழுதி அதை தன் கதை என்று கொண்டு வந்து கொடுத்துள்ளார்களா என்று சரி பார்த்துகொள்ளவும்.

இன்னமும் கொஞ்சம் விட்டா இந்த படம் ஒரு தமிழன் எடுத்து இருக்கான் என்று தான் ஆசுகர் விருது கொடுக்கவில்லை இதுவே ஒரு வட நாட்டுகாரனாக இருந்து இருந்தா ஆசுகர் விருதுகள் கிடைத்து இருக்கும் என்று அவரது அடிபொடிகள் அவரை உசுப்பேத்தி விடாமல் இருத்தால் சரி.

Thursday, December 16, 2010

சித்திக்கின் ப்ரண்சு Friends படமும் - சைமன் பிரிக்கும் Simon Birch (1998)


விச்சையின் இந்த படம் பார்க்கும் போது ஆகா என்ன ஆழமாக கதையாக எழுதி இருக்கிறார்கள் என்று வியந்தேன். அருமையான கதைகளம் அதிலே நகைபாக வர வேண்டும் என்று அதிக கவனமாக சூர்யாவையும் விச்சையையும் கையாண்டு இருப்பார்கள் படத்தில்.

அந்த படத்தின் கதையில் இது தான் அடிப்படை, தண்ணீரில் விழுந்த தனது தங்கையை காப்பாற்றுவான் ஒருவன் யாரும் இல்லாத அனாதையாக இருக்கும் அவனுக்கும் அவனது தம்பிக்கும் இவன் நண்பனாக ஆவான்.

நன்றாக சென்றுக்கொண்டு இருக்கும் அவர்களது நாட்களில் எதிர்பாராத விதமாக சூர்யாவின் தம்பி இறப்பான். இந்த சிறுவன் காதுகேளா மற்றும் பேச்சற்றவனாக கதையில் சொன்னாலும் அதிக இடங்களில் இந்த பாத்திரத்தை மூடி மறைத்தே கதை நகரும்.

அந்த இறப்பிற்கு பிறகு இவர்களின் நட்பில் ஒரு பெரிய நெருக்கம் வரும் அந்த நட்பு ஏன் என்று பிறகு தனது மனைவியின் சந்தேகத்தை போக்க சொல்லும் வரையில் இது இரகசியமாக காக்கப்பட்டிருக்கும்.

விச்சையும் சூரியாவும் கல்லூரி காளையாக தனது நண்பர்களுடன் இல்தக்க சையா என அடுக்கும் லூட்டியும் மற்ற விடலை செய்கைகளும் இரசிக்கும் படியாக இருக்கும்.

சித்திக் லால் இருவரின் கைவண்ணங்களில் வந்த படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த குழுவின் படைப்புகள் முழு நீள நகைப்பு படமாக அமையும் வெற்றியும் காணும்.

இந்த படத்தை பார்க்கும் போது கதையையும் அரட்டைகளும் தமிழில் வருவது இல்லையே என்று வருந்தவும் செய்தேன்.

சைமன் ப்ரிக்கை பார்க்கும் வரையில் இந்த பிரமிப்பு இருந்தது. சைமன் ப்ரிக்கின் கதை இந்த இரண்டு இளைஞர்களை எடுத்து விட்டு இரண்டு 12 வயது சிறுவர்களாக மாற்றி எடுத்தால் எப்படி இருக்கும் அது தான் படம்.

கண்ணுக்கு அழகான பெண்ணாக தாயாக ஆசுலி சூடை காட்டி இருப்பார்கள், ப்ரண்டுசு படத்தில் இதே போல் தோற்றம் உடைகளுடன் தேவியாணி நடித்து இருப்பார்.

சைமன் ஒரு உடல் வளர்ச்சி குன்றிய பிள்ளை பாத்திரம், 12 வயதிலும் குழந்தை ஏசுவாகத்தான் நடிக்க வேண்டும் என்று வேண்டும் ஒரு உருவம் இந்த பாத்திரம்.

அவனது நண்பன் ஆசுலியின் மகன் தந்தை யார் என்று அம்மாவுக்கே தெரியாது என்று கதையில் சொல்வார்கள். சைமனோ குறையுன் பிறந்தால் பெற்றோர்களாலும் மற்ற அனைவருக்கும் எள்ளி நகையாடும் வகையில் அவனது வாழ்க்கை அமைந்தாலும். நண்பன் தான் அவனுக்கு எல்லாம், அவனது நட்பும் விளையாட்டும் என்று இருக்கும் இவன் வீட்டில் இருப்பதை விட நண்பனின் வீட்டில் தான் அதிக காலம் செலவிடுவான் என்று கதை நகரும்.

எதிர்பாராதவிதமாக சைமனின் பந்து விளையாட்டில் வாழ்க்கையிலே முதல் முதலாக அடிக்கும் பந்து ஆசுலி இறப்பதும் கதையில் ஒரு சோகம் தொற்றிக்கொள்ளும். அந்த நிகழ்விற்கு பிறகு தனியாக சென்று அந்த சிறுவன் அழுவதை பார்க்கும் போது மனது பிசைந்து எடுக்கும். அந்த நிகழ்வுக்கு பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தவிர்த்து வருவார்கள். பிறகு ஒரு நான் ஆசுலியின் சமாதியில் சைமன் உருகி அழுவதை பார்த்த நண்பனுக்கு சைமனை மன்னித்து நட்பை தொடர்வார்கள்.

அனாதையாக ஆக்கப்பட்ட சைமனின் நண்பன் வாழ்க்கையில் இனி தான் என்ன செய்ய போகிறோம் என்று யோசிக்க தனது தந்தை யார் என்று கண்டுபிடித்தால் என்ன என்ற முயற்சியில் இறங்க கடைசியில் சைமன் நண்பனின் தந்தை யார் என்று கண்டுபிடித்து விடுகிறான்.

நண்பனின் தந்தை யார் என்று கண்டுபிடித்ததை நண்பனிடன் சொல்லிவிட்டு திரும்பி வரும் வழியில் பள்ளி பிள்ளைகளை ஏற்றி கொண்டு வந்த வண்டி அந்த பனிகாலத்தில் நீண்ட நெடிய மலைசரிவில் சரிந்து ஆற்றில் விழுகிறது.

அந்த வண்டி 13 பிள்ளைகளோடு வேகமாக ஓடும் அந்த ஆற்றில் விழுந்ததும் ஓட்டுனர் அனைவரையும் விட்டு விட்டு தப்புவதும். அழைத்து வந்த ஏசு போதகர் தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் திரையில் குழந்தைகளின் கூச்சல் ஒரு 20 வினாடிகள்.

ஐயோ என்ன நடக்குமோ என்று நாம் மர்மத்தில் ஆழும் போது சைமன் மூழ்கிக்கொண்டு இருக்கும் வண்டியின் முன்புரம் வந்து அனைவருக்கும் ஆனையிடுவதும், அனைவரையும் காப்பாற்றுவதும் மிகவும் அழகாக படமாக பட்டிருக்கும் இந்த படத்தில்.

படத்தில் சைமன் அடிக்கடி தான் ஒரு காரியத்திற்காக கடவுள் அதிசிய பிறவியாக படத்துள்ளார் என்று சொல்லிக்கொண்டே வருவான். அந்த கடைசிகாட்சியில் அப்படி ஒரு சின்ன உருவம் இல்லாமல் இருந்து இருந்தால் அந்த விபத்தில் இருந்து 13 குழந்தைகளை காப்பாற்றி இருக்கமுடியாது என்று அந்த வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கதை முடியும்.

கதையின் ஓட்டம் அந்த நண்பன் சைமனை பற்றி சொல்ல சொல்ல கதை நகர்வது போல் எடுத்து இருப்பார்கள். தனது மகனுக்கு சைமன் என்று பெயரிட்டு இருப்பான் அந்த நண்பன்.

கதை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும், சித்திகின் கற்பனை அலாதியாக வந்துள்ளது தமிழில். அனைத்து சிறுவர்கள் சம்பவங்களுக்கும் பெரியவர்களை வைத்து கதையை அருமையாக அமைத்து இருப்பார் தமிழில். உதாரணத்திற்கு வடிவேலின் கேளிகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் சர்சில் இவர்கள் இருவரும் அடிக்கும் அரட்டையை அழகாக தமிழில் எழுதி இருப்பார் சித்திக்கு.

மலையாளிகள் படைபில் ஒரு தனித்துவமும் உயிரோட்டமும் இருக்கும். பாசில், சித்திக்கின் தமிழ்படங்களில் இவைகளை நாம் பார்க்கலாம். ஆனால் அவர்களும் ஆலிவுட்டின் படங்களை அடிப்படியாக கொண்டு தான் படம் எடுக்கிறார் என்று பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.

பாசிலின் ஒரு நாள் ஒரு கனவு How to lose a guy in 10 daysசின் தமிழ் பிரதி.

பார்க்கலாம் இன்ன எத்தனை கரடி வெளியே வருகிறது என்று.

Thursday, December 2, 2010

இனிது இனிது - திரைவிமர்சனம் - Revenge of the Nerds (1984) ஆங்கில படமும்



படம் துவங்கும் போதே நெர்டு படத்தின் பிரதிதான் என்று அழகாக தெரிகிறது. பார்க்க தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் திறமையில் சளைக்காதவர்கள் என்று காட்டும் படம் தான் அந்த ஆங்கிலப்படம். கிட்டத்தட்ட நமது இராசேந்தர் படம் போல தான் இருக்கும், என்ன கொள்ளையாக பணத்தை கொட்டி அரங்குகள் அமைத்து பாடல்கள் மட்டும் இல்லை என்று இருக்கும் ஆங்கிலத்தில்.

ஆங்கிலத்தில் ஒரு முட்டாள் முரட்டு குண்டு ஆள் ஒருவர் மாணவனாக வருவார், அவர் உட்பட அனைத்து கதா பாத்திரங்களும் அப்படியே தமிழில் எழுதி எடுத்து இருக்கிறார்கள்.

என்ன திறமையை காட்ட அவர்களுக்குள் பாட்டுப்போடு நடத்துவார்கள் இவர்கள் கிரிகட் ஆட்டம் நடத்தி காட்டியுள்ளார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.

அது என்ன மதுமிதா என்ற பெயர் வந்தால் உடனே இச்சீன்சு படத்தின் மகரிச இசையை அதுவும் அதே பியானோ இசையை கொண்டு தான் கொடுக்கனுமோ. இரகுமானின் பின்னணி அப்படியே ஆங்காங்கே வருகிறது.

நம்ம ஊர் கல்லூரி தானா என்று கேட்க்கும் அளவிற்கு கட்டமைபுகள் எல்லாம் அருமையாக இருக்கிறது அந்த கல்லூரியில்.

நல்ல காதல் கதையாக படமாக்கி இருக்கிறார்கள் அழகாக, நல்ல காதல் மோதல்கள். அதுவும் அந்த அப்பு பெண்மணி புடவையில் வருவது குச்சு குச்சு கோத்தாகை படத்தில் காசோல் நாகரீக உடையணிந்து வரும் காட்சியை கண்களுக்கு முன் கொண்டு வருகிறது.

நாயகி நல்ல தேர்வு, சின்ன பெண்ணாக இருக்கிறார். இல்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் தான் எல்லோருக்கும் நாயகி. என்ன சற்று குள்ளம் எடுபடுகிறாரா என்று பார்ப்போம்.

எங்கே மருந்தடிக்கும்/குடிக்கும் முன்னவர்களுக்கு பின்னவர்கள் சேவை செய்யுபடி காட்சிகள் வந்துவிடுமோ என்று பயந்தேன் நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள்.

உடைசன் பாத்திரம் அருமை, எங்கே அவரது கூந்தலையும் வெட்டிவிடுவார்களோ என்று இருந்தது அப்படி எதுவும் நடக்கவில்லை.

படத்தில் திடீர் என்று ஏப்ரல் மாதத்தில் படத்தி வாசனை அப்படியே.

அடுத்த படத்தின் பாதிப்பை தனது படைபில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டியது இயக்குனரின் கடன். நிறையவே கோட்டைவிட்டுள்ளார்.

படம் கடைசிவரை ஒரு கொலை, தற்கொலை, கத்தி குத்து என்று இல்லாமலும், தேர்தல் அடிதடி பின் குத்து பாட்டு என்று இல்லாமல் ஆங்கிலத்தில் உள்ளது போலவே தைரியமாக எடுத்துள்ளமைக்கு பாராட்டுகள்.

ஈ அடிச்சான் பிரதியாக இருந்தாலும் நிறைவான பிரதி, வாழ்த்துக்கள்.

Wednesday, December 1, 2010

நந்தலாலா - திரைவிமர்சனம் - ஜாக்கி சேகர்க்கு எனது கேள்விகள்.

படம் நன்றாக வந்து இருக்கிறது, என்ன இவ்வளவு மெதுவாக படம் நகர்ந்தால் தமிழ் இரசிகர்களுக்கு பிக்காது, இயக்குனருக்கு தெரியாதா என்ன.

நமக்கு எல்லாம் சப்பான் என்றால் பாயும் இரயிலும், மின்ணணு சாதணங்களாக மட்டும் தெரியும் நாட்டிலும் வாழ்பவர்கள் எல்லாம் மக்கள் தான். அவர்களிடமும் பாசம், ஏமாற்றம், அறிவின்மை என்றெல்லாம் உண்டு என்று சொல்வதோடு மட்டும் அல்லாது. சப்பானிய கிராமங்களை வழி நெடுக்க காட்டுவார்கள் சப்பான் படத்தில்.

ஏற்கனவே பல விமர்சனங்களில் சொன்னது போல் கதை அப்படியே அச்சு பிரதி எடுத்தால் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் மிகவும் கடினமான உழைபிலே ஒரு வெற்றி திரைகதையை உருவாக்கி வெற்றியும் கண்ட படத்தின் திரைகதையை அப்படியே இந்திய மை பெட்டியிலே நனைத்து கொடுப்பது தான் மிகவும் வருத்தமான செயல்.

அழுத்தமான கதையும், அதை அழகாக நடத்தி செல்லும் கம்பீரமான திரைகதையும் அமைந்துவிட்டால் வெற்றி நிச்சயம். நம்மவர்களுக்கு கதை எழுத வருகிறது, ஆனால் படமாக ஆக்க திரைகதையாக மாற்றும் போது தான் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

நந்தலாலாவில் எனக்கு எழுந்த கேள்விகள்.

1) ஏன் எல்லா கதா பாத்திரங்களும் தலைகுனிந்தே நடக்கிறார்கள். அதுவும் அப்படி தலைகுனிந்து நிற்கும் காட்சிகளை ஏன் மேல் இருந்தோ அல்லது கீழ் இருந்தோ அல்லது பின்னால் மட்டும் காட்ட வேண்டும். எல்லா படங்களிலும் காட்டுவது போல் பாத்திரங்களை நேரில் காண்பது போல் காட்டினால் என்ன. சப்பானிய படத்தில் இப்படிதான் காட்டுவார்களே அதனாலா அல்லது அவைகளுக்கு வேறு எதுவும் பொருள் உண்டா.

2) எந்த ஒரு காட்சிக்கும் ஒரு முன்னமைப்பை காட்டிவிட்டு தான் காட்சியை காட்டுவார்கள், அதாவது இது தான் களம் இனிமேல் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று காட்டுவார்கள். மன நல காப்பகத்தில் மட்டும் அப்படி ஒரு காட்சி அமைப்பு இருந்தது, பிறகு எந்த காட்சிகளிலும் இல்லை, தாய்வாசல் காட்சியில் மட்டும் மற்றும் ஒரு முறை களத்தை காட்டியுள்ளார். சப்பானிய படத்தில் அனேகமாக எல்லா காட்சியிலும் இந்த அமைப்பு அருமையாக வந்துள்ளது. அதனால் தான் என்னவோ எந்த காட்சியும் மனதில் ஒட்டவில்லை அந்த கடைசி காட்சியை தவிர.

3) ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை சாலையை தவிர. முதலில் நடக்கும் காட்சிகளை காட்டிவிட்டு நேரே தாய்வாசலை காட்டினால் கூட யாராலும் காட்சிகள் கானாமல் போனதை கண்டுபிடிக்க முடியாது.

4) புதுமண தம்பதிகள் மேல் சாராயத்தை தெளித்த ஆட்களை அடித்து கேட்க்கும் இவர்களை எதற்காக இறக்கிவிட்டு விட்டு அவர்கள் ஓட வேண்டும்.

5) ஒன்றுமே புரியாத செய்ய தெரியா ஆள் அம்மாவை மன நலகாப்பகத்தில் சேர்க்கும் போது இவனை ஒருவரும் கண்டுக்கொள்ளாமல் விட்டது எப்படி.

6) இன்னமும் எத்தனை காலங்களுக்கு தான் பெண்களை இழிவுபடுத்தியே படமாக எடுப்பீர்கள். நான் கடவுள் படத்தில் பிச்சைகாரியாக வருபவள் கூட தனக்கு விருப்பம் இல்லா ஆணுடன் வலுக்கட்டாயமாக அனுப்புவதை பொருக்காமல் சாவதற்கும் துனிவதாக கதை அமைத்திருப்பார் பாலா அது போல் ஏதாவது ஒரு பாத்திரமாக படைத்து இருக்கலாம் அந்த விலைமாது பாத்திரத்தை.

இப்படி பல குறைகள் படத்தில் இருந்தாலும் படம் நன்றாக அமைந்துள்ளது.

இளையராசா வழக்கம் போல் படம் முழுவதும் ஆளுகிறார், எல்லா காட்சியிலும் அவரும் உடன் வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அதே கம்பீரம் அவரின் குரலில். இரண்டு பாடல்கள் அருமை. தொலைகாட்சிகளில் உணர்ச்சிகளை அள்ளி கொட்டி மக்களின் மனதை மறுத்து போகும் அளவிற்கு செய்துவைத்திருக்கும் இந்த காலத்திலும், மனதை உலுக்கும் காட்சிகளாக அந்த கடைசிகாட்சிகள் அமைந்து இருப்பது அருமை.

சப்பானிய படத்திற்கும் இதற்கு ஆயிரம் ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த படம் வேறு அந்த படம் வேறாகத்தான் தெரிகிறது. என்ன உருசிய நாவலை தமிழில் படிக்கும் போது ஏற்படும் சங்கடங்கள் தானே தவிர தரமாக அமைந்து இருக்கிறது.

இதே போல் சப்பானிய படமான ஆடிசனையும் எடுத்தார் என்றால் இன்னமும் நன்றாக ஒரு திகில் படம் தமிழுக்கு கிடைக்கும். முயற்சிக்கிறாரா என்று பார்ப்போம்.

வாழ்த்துக்கள் மிசுகின்.