Monday, November 12, 2007

இலங்கையில் நடக்கும் சுதந்திர போராட்டமும், காந்தியவாதிகளும்.

ஆயுத போராட்டம் நடக்கும் வரை இலங்கை இனவாத்திற்கு தீர்வுகள் பிறக்கப்போவதில்லை. அதனால் இலங்கையில் நடக்கும் உள் நாட்டு போரில் தலையிடுவதோ அல்லது இரு தரப்பில் எவருக்கேனும் ஆதரவாக வாதிடக்கூட முடியாது என்று ஒரு பிரிவு வாதிடுவதும், பதிவிடுவதையும் பார்த்து வருகிறோம். அவர்களது கொள்கைகளையும், அதன் அடிப்படைகளையும் ஆராயும் முகமாக இந்த பதிவு அமையும்.

இவர்களது முடிவுகளை ஆராய்வதற்கு முன், இலங்கை போராட்டம் எதற்காக நடக்கிறது. அவர்களது கோரிக்கைகள் தான் என்ன என்று பார்ப்போம்.

1) இலங்கையில் சிங்களம் மட்டுமே மொழி.
2) சிங்களர்களுக்கு மட்டும் தான் இலங்கை.
3) பௌத்தம் மட்டுமே மதம்.

மொத்தத்தில் ஒரு மொழி, ஒரு மக்கள், ஒரு மதம். இது வெறும் வாய் வார்த்தையாக சொன்னதல்ல மாறாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டமாக வடிவமைத்து அறிவித்தது சுதந்திர இலங்கை. அறிவித்த நாள் முதல் தொடங்கிய போராட்டம் இன்றளவும் உக்கிரம் குறையாமல் ஒரு நெடிய பாதையும் கடந்து நடந்து கொண்டிருக்கிறது.

கொலைக்கு கொலை தீர்வாகாது, கண்ணுக்கு கண் என்று போனால் பின்னாளில் உலகமே இருண்டு போகும் என்று உரைத்த காந்திய வழியில் போராடினால் என்ன என்று கேட்க்கும் நண்பர்கள் காந்திக்கு பிறகு நெல்சன் மண்டேலா தலைமையில் அறப்போராட்ட வழியில் தென் ஆப்ரிக்கா சுதந்திரம் பெறவில்லையா என்றும் கூட வாதாடுகிறார்கள்.

நண்பர்களே அமெரிக்கா, பிரான்சு, சக்காட்லாந்து என்று நீளும் பட்டியலில் கடைசியாக ஆயுத போராட்டம் மூலம் சுதந்திரம் பெற்ற தேசமான இசுரேலுடன் வந்துநிற்கும். இன்றைக்கு சுதந்திரம் பெற்ற பிறகு அந்த தேசங்கள் எல்லாம் என்ன வன்முறையால் ஆட்கொண்டு சிதைந்து அழிந்து சின்னா பின்னமாகி மனித அவலங்களை கொண்டா திகழ்கிறது?

இல்லையே, அமெரிக்கா உலகின் மிகப்பொரிய மக்களாட்சி நாடு. இன்றைக்கு உலக வன்முறையை அடக்கு நாடாகவும் அது திகழ்கிறது. பிரான்சோ இந்தியாவுக்கும் இன்னபிற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இராணுவ உதவி முதல் அறிவியல் சார்ந்த உதவிகளை வழங்கும் நாடாக திகழ்கிறது. இவ்வளவு ஏன், சுதந்திரதிற்கு பிறகு நிம்மதியாகவே உரங்காத நாடான இசுரேலும் கூட இராணுவத்திலும் சரி தொழில் நடத்துவதிலும் சரி முன்னணி நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.

பிறகு எதை வைத்து ஆயுதப்போராட்டம் கூடாது என்று இவர்கள் மறுக்கிறார்கள். காந்தி தேசத்தில் பிறந்து விட்ட ஒரே காரணாத்தாலா. அல்லது ஆயுத போராட்டம் தீர்வை தராது என்று எப்போதும்மே நிறூபிக்கப்பட்டு விட்டதா.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டது 1917 ஆம் ஆண்டில். அதற்கு பிறகு படி படியாக முன்னேறி 1947 ஆம் ஆண்டு அதாவது 30 ஆண்டு கால போராட்டதிற்கு பிறகு சுதந்திரம் பெற முடிந்தது. ஒரு 30 ஆண்டு காலம் அந்த ஒரு தனி மனிதனால் போராட்டங்கள் அறிவுக்கப்பட்டும், நிகழ்த்தப்பட்டும், அதுவும் அறவழியில் மட்டுமே என்று போராடி சுதந்திரம் வாங்கவில்லை என்று நீங்கள் கேட்ப்பது காதில் விழுகிறது.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு, தீவிரமாக எழுதவும் போராட்டம் நடத்தவும் இருந்த காந்தியை பிரித்தானிய அரசு கொல்லாமல் அத்தணை ஆண்டுகளும் உயிருடன் விட்டு வைத்திருந்தது. அது மட்டும் அல்லாது போராட்டம் நடத்தும் தொண்டர்களை அடக்கு முறை கொண்டு தாக்கிய பிரித்தானியரின் படையணிகள் அருகே அவர்களுக்கு உதவியாக வந்து இருந்த அவர்களது மனைவியர்களை ஒன்றுமே செய்யவில்லையே.

காந்தியின் மனைவி மரணபடுக்கையில் இப்பவோ அப்பவோ என்று படுத்து இருக்கும் போது, காந்தி நான் வழக்கமாக நடை பயிற்சி கொள்ளும் நேரம் இது, இதோ வந்துவிடுகிறேன் என்று புறப்படும் வேளையில் அவரது கரங்களை பிடித்தபடியே கட்தூரிபாயின் உயிர் போகிறது. எத்தணையோ முறை காந்தியும் இன்ன பிற அரசியல் போராட்டகரர்கள் எல்லாம் சிறை பிடிக்க படுகிறார்கள் பிறகு விடு படுகிறார்கள். வீடு திரும்பும் போது அவர்களது வீடும் உறவுகளும் அவர்களை வரவேற்கிறது.

ஆனால் இலங்கை போராட்டம் யாரை எதிர்த்து நடக்கிறது, காந்தி போராடிய அன்னிய ஆட்சியை எதிர்த்தா நடக்கிறது. இல்லையே சுதந்திர இலங்கை என்று அறிவித்த பிறகு, இருக்கும் கிருட்துவ மக்களை அழித்தொழித்த பின்பு, பின்னாளில் கிருட்துவனாக மாறகூடிய சாத்தியம் உள்ள தமிழர்களை குறிவைத்து தாக்கி அழிக்க துவங்குகிறது. அதன் முதல் நடவடிக்கையாக இந்த ஒரு தேச சட்டம்.

அன்றைக்கு அறவழியில் தான் போராடினார்கள் இவர்களும். என்றைக்கு எல்லாம் போராட்டம் நடத்துகிறார்களோ அன்றை எல்லாம் கலவரம் வரும். அல்லது போராட்டம் முடித்து இவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு கலவரம் அவர்களது வீட்டு பகுதிகளில் வெடிக்கும். அஞ்சா நெஞ்சர்களாக காந்தியின் அறவழி போராளிகள் செய்ததைப்போல் இவர்களும் சிறைகளை நிறப்பினார்கள்.

நல்லுடலுடன் சிறைக்கு சென்றவர்கள் அங்கம் இழந்தவர்களாக வெளியில் வந்தார்கள். சிறைக்கு சென்ற காந்தியோ அல்லது அவர் வழி சென்ற அவரது அற போராளிகள் அங்கம் குறைவாக வீடு திரும்பவில்லையே. போராட்டதில் தலையில் அடிபட்டு இறந்த கொஞ்ச மக்களை தவிற, மற்ற அனைவரும் சுதந்திரம் மலருவதை மூவர்ண்ண கொடி ஏற்றி கொண்டாடினார்கள்.

அப்படி நலிந்த உடலுடன் வீட்டிற்கு திரும்பியவர்களுக்கு வீடு இல்லை. வெறும் குட்டி சுவரும், அது விட்டு சென்ற சோகக்கதைகளும் மட்டுமே வெறுமையை கொண்டு அவர்களை வரவேற்றது.

அது மட்டுமா, அவர்களது செந்த பந்தங்கள் இறந்த இறப்பை கேட்டால் எவனாக இருந்தாலும் கோபம் வரும். அப்படி ஒரு இழிச்செயலை எந்த வித கூச்சமும் இன்றி சிங்களம் இன்றைக்கும் செய்துவருகிறது.

இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்கள் கட்டுக்கு அடங்காமல் போகும் போதெல்லாம் காந்தி உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று மக்களை மிரட்டி பணிய வைத்தார். ஆனால் திலீபனின் உயிர் பிரியும் வரை பார்த்துக்கொண்டு இருந்த சிங்களமோ, அவரது மறைவிற்கு பிறகு தனது கோர பற்கள் தெரிய சிரித்து காட்டியது.

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய போராட்ங்கள் ஒவ்வோன்றிலும் தனது கோரிக்கைகளை காந்தியால் வென்று வர முடிந்தது. பஞ்சு வாங்காமல் விவசாயிகளை அலையவிட்ட பிரித்தானிய அரசாங்கம் பிறகு விவசாயிகளிடம் கருணையோடு நடந்து கொள்கிறோம் என்று எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து அந்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தது. இப்படி படி படியா போய் கடைசியில் 30 ஆண்டுகளில் அவர் கேட்ட சுதந்திரதையும் கொடுத்துவிட்டு சென்றது.

இன்றைக்கும் இலங்கையில் அறவழியில் போராடும் போராட்டகாரர்கள் இருக்கிறார்கள். எப்படி, அதே அரசாங்கம் நடத்தும் தேர்தல்களில் பங்கு பெற்று அரசாங்கத்தில் இடம் பெற்றும். மற்ற அமைதி நடவடிக்கைகளில் இலங்கையின் சார்பாக தமிழ் மக்களின் நிலைமைகளை அனைதுலக மக்களுக்கு எடுத்துரைக்கவும், அரசியல் முன்னேறங்களையும் பெற்று தரும் பொருட்டு செயல் பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் மேலே சொன்ன கோரிக்கைகளில் ஒன்றாவது அவர்களால் வெற்றி கொள்ள முடிந்ததா. அட வெற்றி எல்லாம் பெரிய வார்த்தைகள், அது பற்றி பரீசீலிகவாது பட்டதா என்றால் இல்லை. எப்போது அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் ஐ நாவின் வழிகாட்டுதல் பின் பற்ற படுகிறது என்று செல்ல மட்டுமே கூட்டம் நடந்ததாக தான் இருக்கிறதே தவிற முடிவிகளை நோக்கி என்றைகாவது பேசவேனும் முற்பட்டதுண்டா அரசு. அல்லது அரசை பேசவைக்க இந்த அறவழி போராட்டகாரர்கள் என்ன தான் செய்து இருகிறார்கள்.

பொதுவாக சொன்னால் இந்த அறவழி போராட்டகாரகளை விட தமிழர்களது சுதந்திரம் பற்றி இரனில் அதிகமாக பேசியிருக்க கூடும். அவர் வெறும் அரசியலுக்காகவாது அதை செய்தார். ஆனால் போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆயிரம் ஆயிரம் இதயங்களில் நம்பிகையை தூவி தனது அதிகார பசிக்கு தீனி போடும் இவர்களை நம்பி எப்படி மீதம் இருக்கின்ற மக்கள் அறவழியில் போராட வருவார்கள்.

கிட்டத்தட்ட ஒரு 40 ஆண்டுகாலம் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இது வரையிலும் ஏதாவது ஒரு தீர்வையாவது சிங்களம் சொல்லி இருக்கிறதா என்றால் இல்லை. போராட்டத்தை அடக்கு முறை கொண்டு அழிக்க மட்டுமே அரசு முயல்கிறது. சிங்களம் சொல்லும் தீர்வு எல்லாம், தலை இருந்தால் தானே தலைவலி. தலையே இல்லை என்றால் தலைவலி எப்படி வரும் என்று. வாதத்திற்கு கூட ஒத்து வராத ஒரு முடிவை எட்ட சிங்களம் நினைக்கவும் செயல்படுத்தவும் போது மக்கள் எங்கே ஐயா அறவழியில் போராடுவது.

30 ஆண்டு காலம் அறவழியில் போராடிய காந்தியை பிரிதானிய அரசாங்கம் கொல்ல நினைக்க கூட இல்லை. ஆனால் கையால் ஆகாத இனவாதம் அவரது உயிரை 3 தோட்டாக்கள் கொண்டு பிரித்ததை அனைவரும் அறிவோம். பிரித்தானியர்கள் நினைத்து இருந்தால் இதை அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி காந்தி என்று ஒருவர் இருந்தார் என்றே இல்லாமல் செய்திருக்க முடியுமே. ஆனால் பிரித்தானியர்கள் சட்டத்திற்கு கட்டு பட்டு, அதை மீறி எதுவும் செய்யவில்லை. ஆனால் சிங்களமோ, அவர்களது சட்டம் என்ன ஐ நாவின் சட்டத்தை கூட மலிவாக மீறுகிறது. அரசாங்கம் என்ற பெயரில் ஒரு வன்முறை கும்பல் மன நோயாளியாக தமிழர்களை கொன்று குவிக்கின்றது. நீங்கள் அந்த மன நோயாளியிடம் கழுத்தை காட்டுங்கள் என்று சொல்கிறீர்கள், ஏன் அது உங்களது கழுத்து இல்லை அதனாலா.................................

கண்விழித்து கொள்ளுங்கள் நண்பர்களே, கனவு காண்பதை விடுத்து கள நிலைமைகளை நோக்குங்கள் உண்மை விளங்கும்.

Saturday, November 10, 2007

பகுத்தறிவு தந்தை

அவனுக்கு திருமணம் முடிந்து இப்போது 3 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். கல்லூரி காலத்தில் தோன்றிய அறிவு அந்த பகுத்தறிவு அவனுக்கு. அன்று முதல் கடவுள் மறுப்பில் இருந்து இன்னமும் என்ன இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் தெரிந்து பழகவும் தொடங்கியவன் சீர்திருத்த திருமணம் வரை சென்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மனைவியும் கணவனை புரிந்தவளாய் அவனது கொள்கைகளோடு ஒத்து போனாள் என்னாளும்.

3 வயது முடியும் தருவாயில் இருந்த அவனது மகனுக்கு தமிழும், தமிழின் இனிமையும் என்று, தமிழ் சம்பந்தபட்ட அனைத்தையும் தேடி பிடித்து கதைகளாக சொல்லுவதை பழக்கத்தில் கொண்டான். அவனது பகுத்தறிவு கதைகளின் கருத்துக்களை அந்த பிஞ்சு மழழையில் சொல்லுவதை பார்த்து பூரிக்காத நாளே இல்லை அந்த குடும்பத்தில். இதை ஒரு சாதனையாகவே பழக்கி வந்தான் மகனுக்கு.

வரும் தீபாவளியை மனதில் வைத்து, தீபாவளி சம்பந்தமாக உள்ள பகுத்தறிவு கருத்துகளை மறுபடியும் மகனின் மனதில் பதியும்படி சொல்லி வந்தான். துவக்கத்தில் அப்பா சொல்லுவதை எல்லாம் அழகாக மனதில் வாங்கிய அந்த பிஞ்சு அருமையாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில்களை அள்ளி வீசியது.

தீபாவளி நெருங்க நெருங்க அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகள் அவரவர் வயதுக்கு தகுந்த அளவில்லான வெடிகளை அவ்வப்போது வெடிப்பதும், கூடி விளையாடும் போது யார் வெடித்த வெடிகள் பெரிது என்று வாக்கு வாதம் வருவது வழமையானது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கூட விளங்காத அந்த மழழையும் சொன்னது நான் நாளைக்கு இதை விட பெரிய வெடியாக வெடித்து காட்டுவேன் பார் என்று. சொன்னதோடு வீராப்பாக வீட்டிற்கும் வந்தான்.

இரவு வீடிற்கு வந்த தந்தையிடம் வழக்கமான கொஞ்சலுக்கு பிறகு அப்பா மறுபடியும் பகுத்தறிவு கதைகளை சொன்னார். தீபாவளி இன்னமும் அருகாமையில் வந்ததால் இன்றைக்கு நரகாசூரனது கதையை முழுவது சுவையாக சொல்லிமுடித்தார். கதைக்கு பிறகு கேள்விகளை இவரே அவனிடம் கேட்டு பதிகளை சொல்லித்தருவது வழமை. அப்படி அனைத்து பகுத்தறிவு கேள்விகளை கேட்டு முடித்தவர் கடைசியாக அந்த கேள்வியை கேட்டார்.

தான் செய்த தவறுக்கு வருந்திய நரகாசூரன், தனது அழிவை விளக்கொளி வெள்ளத்தில் கொண்டா வேண்டும் என்று கடவுளை பார்த்து வேண்டிக்கொண்டான். அது தான் நாம் தீபாவளியாக கொண்டாகுகிறோம் என்ற அவர், மன்னித்துவிடு என்று மனம் திருந்தி ஒருவர் கேட்க்கும் போது மன்னிப்பது தான் நீதியாகும். அதைவிடுத்து கொண்டாடுவது நீதியாகாது என்று சொல்லி வெடி வெடிப்பது எல்லாம் தவறு என்று முடித்தார்.

அது வரை வெடியை மறந்து இருந்த பிஞ்சு நினைவில் வந்தவனாய், அப்பா எனக்கு நாளைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வெடியை வாங்கி கொடுங்க, நான் அதை கொண்டுப்போய் அவங்க வீட்டுல வெடிக்கனும் என்று சொன்னான் பதிலுக்கு நிற்காமல்.

வெளியே ஓடியவனை பிடித்துக்கொண்டு வந்தவன், மறுபடியும் கேள்வி பதில் ஆரம்பித்தார். அவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் அழகாக பதில்களை அள்ளி வீசியவன் கேள்விகள் முடியும் வரை காத்திராமல் இடையிடையே வெடியை கேட்கவும் துவங்கினான்......

நேரம் செல்ல செல்ல மகன் நொடிக்கு ஒரு முறை வெடியை சொல்லி சினுங்கலானான். முதலில் பொருமையாக கேட்டுக்கொண்டு இருந்தவர், பிறகு தன்னையும் மறந்தவராய் எல்லையின் விளிம்பில் பேச, மனைவி சொன்னாள் அவனை விட்டுங்க காலம் வரும்போது அவனாக உணர்ந்து கொள்ளுவான். கல்லூரி செல்லுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் பிறகு மாறவில்லை. அது போல அவனும் மாறுவான் என்றாள் உறுதியாக.....

மனைவியின் வார்த்தைகளை நம்பாதவனாக பார்த்துகொண்டு இருக்க, மகனோ அம்மாவின் கால்களை பிடித்துக்கொண்டு அம்மா நாளைக்கு வெடி வேண்டும் என்றான் அழுதுக்கொண்டே

தூக்கம் கலைந்தவனாக படுத்துக்கொண்டு இருந்த அந்த பகுத்தறிவு தந்தை நாளைக்கு எங்கே சென்று நல்ல வெடிகளை அவனுக்கு தகுந்தாற் போல் வாங்குவது என்று மனதில் நோட்டமாக இருந்தவனை பார்த்து சிரித்தாள் மனைவி.

Wednesday, November 7, 2007

பெருமாள் மகிமை

திருப்பதி வேங்கட புன்னகை


அவரின் தாமரை பாதம்

Tuesday, November 6, 2007

பெரியாரின் கனவு நினைவானது

இது தான் தந்தை பெரியாரின் கனவு, இராமயணத்தையும் கீதையும் கொளுத்தும் காலம் வரவேண்டும் என்று தனது வாழ் நாளின் இறுதி வரை போராடினார். இன்றைக்கு அவருக்கு சாதகமான முறையில் இவைகள் கொளுத்தப்படவில்லை என்றாலும், இது ஒரு துவக்கம். இராம் இராம் என்று சொல்லி கொண்டிருந்தவர்கள் எண்ணத்தில் இதன் மூலம் பெரியாரின் பெயரை பதித்தவர்களுக்கு நன்றி. இனியாவது மதத்தின் பெயரால் வடக்கில் நடக்கும் கொடுமைகள் குறையும் என்று எதிர்பார்ப்போமாக.

படம்: நன்றி தினமலர்

Sunday, November 4, 2007

மோடி இப்படி நடந்து கொண்டிருதால் நாம் அவரை பாராட்டி இருப்போமா??

சபர்மதி இரயிலில் உயிருடன் மக்கள் எரிக்கப்பட்ட செய்திவருகிறது அதும் இறந்தவர்கள் அனைவரும் புனித பயணம் முடித்து வீடு திரும்பும் வழியில் இப்படி நிகழ்ந்தது என்று. முதலில் வருத்தம் வந்தாலும் இந்த ஈன தணதிற்காக வெறுப்பும் கோபமும் வருவது இயற்கையே. அதும் தனது மக்கள் இப்படி கொல்லப்பட்டதை எந்த ஒரு முதல்வராலும் தாங்க முடியாத ஒரு துயரே. ஆற்றாமை தோன்றும் போதெல்லாம் கோபமாக கொப்பளிப்பதும் இயற்கையே.

ஒரு முதல்வருக்கு இப்படி ஒரு சேதி காலம் தாழ்த்தி தான் அதுவும் சம்பவத்திற்கு பிறகு தான் தெரியும் என்று சொன்னால் நம்புவதற்கு இல்லை. நாட்டிலே என்ன நடக்கிறது, இவைகளின் விளைவால் என்வெல்லாம் பிறகு நடக்கும், யார் யார் எல்லாம் இதிலே ஈடு படுகிறார்கள். பணமும் ஆள் பலமும் எங்கு இருந்து வருகிறது. இன்னமும் எத்தனை சம்பவங்கள் இது போல நடக்கும் என்று முங்கூட்டியே அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கவும் தான் எத்தணை நிறுவனங்கள் கண் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறது. இதனையும் இருந்து மோடி எனக்கு செய்தியே இல்லை என்று சொன்னால் நம்பும்படியா இல்லவே இல்லை.

மோடியையும் தாண்டி ஒரு கலவரம் வெடிக்கிறது மாநிலம் முழுவதும். 3 நாட்கள் இடைவிடாது யாரை எல்லாம் கணக்கு தீர்கவேண்டும் என்று சமயம் எதிர்பார்த்து கொண்டு இருந்தவர்களை போல் ஒரு அழிப்பு நடவடிக்கை மாநிலம் தழுவிய அளவில் நடக்கிறது. ஒரு முதல்வரால் 3 நாட்க்களுக்கு மாநிலத்தில் உள்ள காவல் துறையின் துணை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுவாக அரசு கையாளும் அத்தனை முறையையும் பின் பற்றி நிலைமையை கையாள நினைகிறார் ஆனால் 3 நாள் வரையிலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை. ஊடகங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இப்படி தான் செய்தியை சொன்னார் மோடி. அவர் என்ன என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அவைகளுக்கு சான்றுகளையும் அள்ளிக்கொண்டு போய் காண்பித்து வெறும் கண்டனத்தோடு திரும்பினார் மோடி.

இப்போது தெகல்கா வெளியிட்டிருக்கும் செய்திகளை பார்க்கும் போது மோடியது மோசடி அப்படியே அம்பபலமாகிறது அங்க அங்கமாக. இதில் கொடுமை என்னவென்றால் இரயிலை கொளுத்தியவர்கள் இரகசியமாகவும் அவசர அவசரமாகவும் சாட்சிகள் களையப்பட்டு விடுதலையானது தான். இந்த செய்தியை இப்போதைக்கு விட்டுவைப்போம்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக மோடி செய்திருக்க வேண்டியவைகள்

1) தீவிரவாத நடவடிக்கைகளை கண்கானித்திருக்க வேண்டும் (தகவல்கள் 24 மணி நேரமும் வழங்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது)
2) சம்பவம் நடந்ததும் கலவரம் வெடிக்கும் என்று சிறுவனுக்கு கூட தெரியும், அதை எதிர்பார்த்து நிலைமை கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு நடத்தி இருக்க வேண்டும்.
3) சம்பவத்திற்கு காரணமானவர்களையும் அவர்களது மூளையாக செயல் பட்டவர்களை அடையாளம் கண்டு நாட்டின் முன்னேயும், சட்டத்தின் முன்னேயும் நிறுத்தி இருக்க வேண்டும்.
4) கோபம் கொண்ட மக்களை தனது நடவடிக்கைகளாலும், சொல்லாமும் ஆற்ற முற்பட்டிருக்க வேண்டும்.
5) மூளை சலைவையில் ஈடு பட்டிருக்கும் கூட்டத்தையும் அதற்கு பொருளுதவி செய்பவர்களையும் களைந்திருக்க வேண்டும் சட்டரீதியாக
6) இந்தியார்கள் அனைவரும் சமம், ஒரு சிலரால் நடத்தப்படும் வன்முறைக்கு அவர்களது மதம் சார்ந்ததாக சாயம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படி பட்டியலிட்டுகொண்டே போகலாம். இதில் எதையுமே மோடி செய்யவில்லை, மாறாக என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தையும் செய்ததாக தெகல்காவின் செய்திகள் தெரிவிகிறது.

ஒரு வேளை மோடி மேலே சொன்னது போல் நடந்து காட்டி இருந்தால் நாம் எல்லாம் அவரை பாராட்டி இருப்போம் தானே...........

இவரைத்தான் மிகவும் திறமை வாய்ந்த முதல்வர் என்றும் பின் நாளில் பிரதமர் ஆகும் தகுதி பெற்றவர் என்றும் சிலர் சோ இராமசாமியை போல் சொல்கிறார்கள். எடுத்தற்கொல்லாம் சிறுபிள்ளையாக உணர்ச்சி வசப்படும் மோடியை வேண்டுமானால் அமெரிக்க அதிபராக போய் பணியாற்ற சொல்லலாம், இந்தியாவுக்கு இந்த புத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் தேவையே இல்லை, இப்படி ஒரு முன்னேறமும் இந்தியாவுக்கு அவசியம் இல்லை.

வீரவணக்கம் தமிழ்ச்செல்வனுக்கும் மற்ற அனைத்து வீரர்களுக்கும்.




வீரர்கள் செயலால் அடிக்கும் அடிக்கு உனது சொல்லால் அங்கிகாராம் வாங்கித் தந்தவனே, ஈழத்திற்கும் ஐ நாவிக்கும் நடையாய் நடந்தவனே. எத்தனை சோகமான செய்திகளாக இருந்தாலும் சரி, எத்தனை வெருப்பான கேள்விகளாக இருந்தாலும் சரி மலர்ந்த முகம் மாறாமல் சொல்லுரைப்பவனே. ஈழம் மலர்ந்து அதன் வெளியுரவு அமைச்சராக ஐ நா வில் உனது குரல் ஒலிக்கும் என்று மனதில் கொண்டிருந்தோம் அனைவரும், அதற்குள் வீரமரணம் எய்தினாய். உனது வீரமரணத்திற்கும் உடன் இறந்த அனைத்து வீரர்களுக்கும் எங்க்களது வீரவணக்கம். மற்ற வீரர்களது பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு தான் செய்தி வெளியிட விரும்புகிறேன் ஆனால் எங்களுக்கு தான் எத்தனை பெயரை தெரியும், அப்படி தெரிந்த பெயர்களை எல்லாம் பட்டியல் இட்டால் வலைகொள்ளாத பட்டியலாக அல்லவா அது இருக்கும். ஆகவே அவர்களது அரசியல் முகமாக எங்களுக்கு தெரிந்த உனது பெயரை குறிபிட்டு அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். சென்று வா வீரனே......

என்ன ஆனது தினமலர் பத்திரிக்கைக்கு

பாக்கித்ட்தானில் அவசர நிலை அறிவிக்க பட்டுள்ளதை அறிவிக்கும் பொருட்டு தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அவரசர நிலை அறிவிக்க வேண்டிய காரணம் என்னவாக இருக்கும் என்ற ஊகத்தை இப்படி எழுதியுள்ளது

"தனக்கு எதிரான தீர்ப்பு வரலாம் என்ற தகவல் அதிபர் முஷாரப்புக்கு கிடைத்தது. ஏனெனில் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியும் மற்ற நீதிபதிகளும் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் வந்து ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை. இந்தப் பின்னணியில் பாகிஸ்தானில் அவசர நிலை ப்ரகடனப்படுத்துவதற்கான சூழ் நிலை நேற்று மாலை முதலே காணப்பட்டது."

நல்ல மொழிவளமும் எழுத்து நடையும் பத்திரிக்கைகளை படித்து பெற்றுக்கொண்டேன் என்று பலரது நேர்காணலில் கேட்டு இருக்கின்றேன். அதிக மக்களால் படிக்கப்படும் நாள்ழிதழ் என்று சொல்லிக்கொள்ளும் பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள். குறிப்பாக ஏன்னெனில் தலைமை நீதிபதி இப்கார் சவுத்திரியும் மற்ற நீதிபதிகளும் இராணுவ ஆதிக்கத்தில் பாக்கிட்த்தான் வந்து குடியரசின் குரல்வளையை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை என்று எழுதி இருக்கிறது. இதற்கு முந்திய பத்தியில்

"அதிரடியாக சுப்ரீம் கோர்ட் வளாகத்தைஸ் சுற்றி ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டனர். தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட நீதிபதிகள் வெளியேற்றப்பட்டனர்"

என்று எழுதிவிட்டு, பின்னால்

"இப்திகார் சவுத்ரியும் மற்ற நீதிபதிகளும் ராணுவ ஆதிக்கத்தில் பாகிஸ்தான் வந்து ஜனநாயக குரல்வளை நெரிக்கப்படுவதை விரும்பவில்லை."

என்று எழுதினால் என்ன பொருளில் அது விளங்கும், என்ன ஒரு மொழிவளம் பாருங்கள். இராணுவம் நீதிபதிகளை பாக்கிட்த்தானை விட்டு வெளியேற்றியதாக பொருள் கொள்ளவும், பிறகு இராணுவ ஆத்திக்கத்தில் நீதிபதிகள் திரும்பி வந்து குடியாட்சியின் குரலை நெரிக்கப்போவதை முசாரப் விரும்பாமல் அவசர நிலை அறிவித்தார் என்று பொருள்கொள்ளும் அளவிற்கு குழப்பமாக செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
எவ்வளவும் முக்கியமான ஒரு செய்தியை எவ்வளவு அலட்சியமாக கையாண்டு இருக்கிறது பாருங்கள். இத்தனை பரபரப்பான செய்தியை கூட தணிக்கை செய்யாமல் அதன் தணிக்கை குழு நாளைக்கு எந்த கோவிலின் சாமி படத்தை முதல் பக்கத்திலே வெளியிடலாம் என்று தேடி அலைகிறது போலும். கவனிக்குமா இனிமேலாவது, கவனிக்க வேண்டும்.