Thursday, October 27, 2016

தொடரி படமும் - Unstoppable (2010)மும் திரைவிமர்சனம்

UnStoppable(2010)

தொடரி துவங்கியதில் இருந்து ஏதோ ஒரு பெரிய சின்னத்திரை தொடரை இடையில் இருந்து பார்ப்பது போல் ஒரு தோற்றம்.

கதையில் அதே அந்த காலத்து கஞ்சத்தனம், சின்னதாக கதை சொல்ல வேண்டும் என்று நாயகனை அனாதையாகவும், அழுத்தமாக இருக்க வேண்டும் என்று நாயகி மாற்றாம் தாய் வளர்க்கும் பிள்ளையாகவும் என்று கதையை எழுதி தள்ளி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் படத்தின் கதை இவ்வளவுதான். இரயில் நிறுவன நட்டத்தை கணக்கு காட்டி அந்த வண்டி ஓட்டுனரை 30 நாளில் பணியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துவிட. அவனும் மிச்சம் இருக்கும் நாட்களை விபத்து இல்லாமல் கடக்கவேண்டும் என்று வேலைகளை மேற்கொள்ளுகிறார்.

அவருடன் அன்றைக்கு வேலைக்கு வருபவனின் குடும்ப வாழ்க்கை சிதைந்து மறுபடியும் கூடுமா இல்லை அவ்வளவு தானா என்ற மனப்போறாட்டம் வண்டியில் மாட்டியுள்ள அந்த நிறுத்தி (Break) தொடர் அறுந்து விழுவதை கூட கவனிக்காமல் செல்கின்றான்.

அதற்குள் இவர்கள் செல்லும் பாதையில் ஒரு சோம்பேறி ஊழியரின் அலட்சியத்தால் ஆள் இல்லாமல் பயங்கர வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்கின்றது.

அதே சமயம் பள்ளி சிறார்களை ஏற்றிக்கொண்டு சின்ன சுற்றுலாவாக இன்னும் ஒரு வண்டி எதிர் திசையில் வருகின்றது.

இந்த 3 வண்டிகளும் பயண்படுத்தும் பாதை ஒன்றே, எப்படி விபத்தை தவிற்பார்கள் அல்லது என்ன ஆகும் என்று திரைகதை ஆங்கிலத்தில்.

இதை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு தமிழ் படமாக மாற்றிவிட்டார்கள்.

ஆனாலும் கீர்த்தியை அனியாத்திற்கு கேணை கிறுக்கச்சியாக காட்டி இருப்பது சகிக்கவில்லை. அதே மாதிரிதான் அந்த சேட்டன் கதையும்.

அப்படியே எடுக்க வேண்டியது தானே அது என்ன மசால தடவி கொடுப்பது போங்கப்பா நீங்களும் உங்க ஆலிஉட் உறுவலும்.

அது தான் கதையின் முன் பாதியை சமோசா விற்பதாக மாற்றினீர்களே அதே போல் ஒரு கதையையும் எழுத வேண்டியது தானே அது மட்டும் என்ன சுட்ட பழபாக. பாழாய் போச்சு தமிழகத்து படைப்பாற்றல்.

அன்னை ஸ்ரீவித்யா அவர்களின் 10 ஆண்டு நினைவு

பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நினைவு அலைகளை எழுதும் போது இல்லாத வலி இந்த பத்தாம் ஆண்டு நினைவு குறிப்புகளை எழுதும் போது வந்தது.

நீ இல்லாத இந்த வெறுமை நாட்களை எப்படி கடப்பேன் என்று இருந்த நிலை மெல்ல பழகித்தான் போச்சு என்றும் இருந்தேன். இருந்தாலும் இந்த ஆண்டு புரட்டியே தான் போட்டுவிட்டது.

ஒவ்வொரு முறை எழுத நினைக்கையிலும் முதல் வார்த்தைகளுடன் நின்று தான் போய்விட்டது.

மீண்டும் மீண்டும் உனது நினைவு அலைகள் நீண்டு நாட்கணக்கில் அடங்காமல் வாட்டிய போது தான் தெரிந்தது எங்களை பிரியும் நிலையில் உன் மனது என்ன என்ன வேதணைகளில் துடித்து இருக்கும் என்று.

எங்கு இருகிறாய் என்று தெரியவில்லை இருந்தாலும், தினமும் என்னை அங்கு இருந்து பார்த்துக்கொண்டும் வாழ்த்திக்கொண்டும் இருக்கிறாய் என்று.............

Saturday, October 8, 2016

ரெமோ - திரைவிமர்சனம் இதுக்கு பேசாம wedding singer கதையையே எடுத்து இருக்கலாம்

wedding singer

என்னமோ வித்தியாசமா படம் என்று சொன்னார்களேன்னு பார்த்தால் கடைசியில இந்த wedding singer கதைய அப்படியே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு எடுத்து இருக்கிறார்கள் மற்றபடி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

அந்த சிறுமியை காப்பாற்றுவதாக அந்த சிறுவனுடன் டுருபெரி மோரை நடனம் ஆடவைத்து நாயகியின் மனதில் இடம்பிடித்ததை மாற்றி அமைத்து இருக்கிறார்.

 நிச்சயம் ஆன பின்னும் அடுத்த பெண்களின் பின்னழகை ஆபாசமாக விளிக்கும் அந்த ஆடவனின் வசனங்களை இவளை பார்த்ததும் அவளை விட்டு விட்டு வந்துவிட்டேன் என்று சொல்வதாக மாற்றிவிட்டார்கள்.

திருமணங்களில் மட்டும் பாடி சொற்பபணம் ஈட்டும் நாயகன் ஆங்கிலத்தில் இதில் நடிக்க வேண்டி வேலை இல்லாமல் அலைவதாக காட்டியுள்ளார்கள்.

கண்ணாடியில் ஜூலியா கூலியா என்று சொல்லிப்பார்ப்பதையும், நாயகனின் அன்புள்ளம் கண்டு வியந்தலும் என்று இருந்த காட்சிகளை எடுக்க படாது பாடு பட்டுள்ளார் இயக்குனர்.

என்ன அந்த டுருபெரி மோர் காட்டும் அதே அப்பாவி தனம் இந்த நாயகிக்கும் பொருந்தி இருக்கிறது.

பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் இருந்தாலும் இவ்வளவு நல்ல ஆண்களும் உலகில் இருக்கிறார்களே என்று அதிசயக்கும் காட்சிகள் எல்லாம் தமிழில் காணாமல் போனது ஏன் என்று இயக்குனரும் அவரது கதை சொன்ன பட்டாளமும் விளக்கினால் நல்லது.

ஆங்கிலத்தில் நாயகனுடன் பாடும் ஒரு திருனங்கை வருவார் அந்த பாத்திரத்தை பயன்படுத்தி திரைகதையில் மாற்றுவோம் என்று துவங்கி முதல் கோணல் முற்றிலும் கோணலாக சென்று முடிந்து இருக்கிறது.

என்ன அருமையான படம் இந்த wedding singer. அதை கடித்து குதறி குத்துயிரும் கொலை உயிருமாக கொடுத்து இருக்கிறார் இந்த இயக்குனர்.

ஆங்கிலத்தில் படம் துவங்கியதில் இருந்து கடைசிவரை எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல் படம் பயணிக்கும். ஆனால் தமிழிலோ சிவா தனது விமர்சனங்களில் அடுத்தவர் படங்களில் பகிடியடிக்கும் அத்தனை நக்கல் சம்பவங்களுமாக இந்த படம் அமைந்தது கொடுமையே.....

எப்பவுமோ சிவாவை பெண் வேடத்தில் பார்க்க சலிப்பாக இருக்கிறது இது அந்த இயக்குனருக்கு தெரியாமல் போனது சோகமே.