Thursday, October 27, 2016

தொடரி படமும் - Unstoppable (2010)மும் திரைவிமர்சனம்

UnStoppable(2010)

தொடரி துவங்கியதில் இருந்து ஏதோ ஒரு பெரிய சின்னத்திரை தொடரை இடையில் இருந்து பார்ப்பது போல் ஒரு தோற்றம்.

கதையில் அதே அந்த காலத்து கஞ்சத்தனம், சின்னதாக கதை சொல்ல வேண்டும் என்று நாயகனை அனாதையாகவும், அழுத்தமாக இருக்க வேண்டும் என்று நாயகி மாற்றாம் தாய் வளர்க்கும் பிள்ளையாகவும் என்று கதையை எழுதி தள்ளி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் படத்தின் கதை இவ்வளவுதான். இரயில் நிறுவன நட்டத்தை கணக்கு காட்டி அந்த வண்டி ஓட்டுனரை 30 நாளில் பணியில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துவிட. அவனும் மிச்சம் இருக்கும் நாட்களை விபத்து இல்லாமல் கடக்கவேண்டும் என்று வேலைகளை மேற்கொள்ளுகிறார்.

அவருடன் அன்றைக்கு வேலைக்கு வருபவனின் குடும்ப வாழ்க்கை சிதைந்து மறுபடியும் கூடுமா இல்லை அவ்வளவு தானா என்ற மனப்போறாட்டம் வண்டியில் மாட்டியுள்ள அந்த நிறுத்தி (Break) தொடர் அறுந்து விழுவதை கூட கவனிக்காமல் செல்கின்றான்.

அதற்குள் இவர்கள் செல்லும் பாதையில் ஒரு சோம்பேறி ஊழியரின் அலட்சியத்தால் ஆள் இல்லாமல் பயங்கர வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு மணிக்கு 140 கிமீ வேகத்தில் செல்கின்றது.

அதே சமயம் பள்ளி சிறார்களை ஏற்றிக்கொண்டு சின்ன சுற்றுலாவாக இன்னும் ஒரு வண்டி எதிர் திசையில் வருகின்றது.

இந்த 3 வண்டிகளும் பயண்படுத்தும் பாதை ஒன்றே, எப்படி விபத்தை தவிற்பார்கள் அல்லது என்ன ஆகும் என்று திரைகதை ஆங்கிலத்தில்.

இதை மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு தமிழ் படமாக மாற்றிவிட்டார்கள்.

ஆனாலும் கீர்த்தியை அனியாத்திற்கு கேணை கிறுக்கச்சியாக காட்டி இருப்பது சகிக்கவில்லை. அதே மாதிரிதான் அந்த சேட்டன் கதையும்.

அப்படியே எடுக்க வேண்டியது தானே அது என்ன மசால தடவி கொடுப்பது போங்கப்பா நீங்களும் உங்க ஆலிஉட் உறுவலும்.

அது தான் கதையின் முன் பாதியை சமோசா விற்பதாக மாற்றினீர்களே அதே போல் ஒரு கதையையும் எழுத வேண்டியது தானே அது மட்டும் என்ன சுட்ட பழபாக. பாழாய் போச்சு தமிழகத்து படைப்பாற்றல்.

0 comments: