Thursday, October 27, 2016

அன்னை ஸ்ரீவித்யா அவர்களின் 10 ஆண்டு நினைவு

பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நினைவு அலைகளை எழுதும் போது இல்லாத வலி இந்த பத்தாம் ஆண்டு நினைவு குறிப்புகளை எழுதும் போது வந்தது.

நீ இல்லாத இந்த வெறுமை நாட்களை எப்படி கடப்பேன் என்று இருந்த நிலை மெல்ல பழகித்தான் போச்சு என்றும் இருந்தேன். இருந்தாலும் இந்த ஆண்டு புரட்டியே தான் போட்டுவிட்டது.

ஒவ்வொரு முறை எழுத நினைக்கையிலும் முதல் வார்த்தைகளுடன் நின்று தான் போய்விட்டது.

மீண்டும் மீண்டும் உனது நினைவு அலைகள் நீண்டு நாட்கணக்கில் அடங்காமல் வாட்டிய போது தான் தெரிந்தது எங்களை பிரியும் நிலையில் உன் மனது என்ன என்ன வேதணைகளில் துடித்து இருக்கும் என்று.

எங்கு இருகிறாய் என்று தெரியவில்லை இருந்தாலும், தினமும் என்னை அங்கு இருந்து பார்த்துக்கொண்டும் வாழ்த்திக்கொண்டும் இருக்கிறாய் என்று.............

0 comments: