Tuesday, November 15, 2016

மோடி நடுதர வர்கத்திற்கு அடுத்து கொடுக்கப்போகும் அடி இது தான்

500, 1000 ரூபாய் தாள்களை செல்லவே செல்லாது என்று அறிவித்தால் இந்தியாவில் ஊழல் ஒழிந்து நாடு ஒரே இரவில் மறுபிறப்பு எடுத்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

கருப்பு பணம், பணமாக ஏழைகளின் கையில் இருந்தவைகளை எல்லம் புனிதப்படுத்தியாச்சு. மிச்சம் என்ன இருக்கும் ஏழைகளிடம் என்று கணக்கு பார்த்ததில் மோடியின் ஆலோசகர்கள் சொன்ன ஆலோசனை இது.

சரி கருப்பு பணத்தை எல்லாம் ஏழைகளிடம் இருந்து பிடிங்கியாச்சு, அப்படி அடித்து பிடித்து பிடிங்கியதில் இது வரை வந்தது வெறும் 3 இலட்ச்சம் கோடி ரூபாய்க்கள் மட்டுமே வங்கிகளில் வந்தாக சக்திகாந்து தாசு குறிப்பிடுகிறார். அப்படியானால் மிச்ச பணம் எல்லாம் எங்கே என்று கணக்கு போடுகிறார்கள்.

இந்தியாவின் மொத்த பணம் சுமார் 6,3800,000 கோடிகள். அதில் 30 இலட்சம் கோடிகள் இது வரையில் வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ளதாக அறிவித்து இருக்கிறார்கள் . ஆக இது வரையில் 4.7% கருப்பு பணம் தான் வெளியில் வந்து இருக்கிறது.

மீதம் இருக்கும் 95% சதவிகிதம் பணம் எங்கே யாரிடம் இருக்கிறது என்று அலோசித்தார்கள்.

அப்போது தான் தெரிந்தது மீதம் இருக்கும் பணம் எல்லாம் நிலம், வீடு, வீட்டு மனையாக, தங்கம் மற்றும் தங்க நகைகளாக மக்கள் பதுக்கி வைத்துள்ளார்கள்.

ஆகவே விரைவில் உங்களின் நிலம் பதிந்த பத்திரம் செல்லாது என்று அறிவித்து 2 நாட்களுக்குள் புதிய நில பத்திரங்களை பதிய வேண்டும் என்றும் அப்படி பதியும் போது ஆதார் அட்டை இல்லாதோரின் நிலம், மற்றும் அனைத்து சொத்துகளையும் அரசாங்க சொத்தாக எடுத்துக்கொண்டு கருப்பு பண வரவில் வைக்கலாம் என்று அறிவிறுத்தபட்டுள்ளது.

அதை தொடர்ந்து மக்களிடம் இருக்கும் நகை மற்றும் தங்கங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதற்கு ஈடானா தங்க பத்திரங்களை மக்கள் வாங்கிட வேண்டும் என்றும் அறிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு யார் யாரிடன் தங்கம் இருக்கிறர்து என்று பார்த்தால் கருப்பு பணம் என்று பார்ப்பவர்கள் தகவல் கொடுக்க, கைத்து செய்து சிறையில் அடைத்து கருப்பு பணத்தை மீட்டு மீதம் இருக்கும் 95% கருப்பு பணத்தையும் மீட்டு எடுப்போம் என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

நிலப்பதிவு மற்றும் தங்க ஒப்படைப்பு நிலவரங்களை அடுத்து அப்படியும் 95% சதவிகித நீடிப்பு நீடித்தால் வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு சாமான்கள், கிழிந்த பாய்களையும் ஒப்படைத்து விடும்படி அரசு ஆனை அறிவித்து இன்றைக்கு தான் ஏழைமக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று அமெரிக்காவில் சென்று உரையாற்றுவார் மோடி.

இந்த அரசு தான் வந்தாள வேண்டும் என்று தவம் கிடந்த மக்களே வீட்டு மற்றும் சொத்து பத்திரத்திற்கு ஈடான முத்திரை தாள்களை இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அனைத்தும் பாழாய் போகும், பிறகு பாசக கைக்கூலிகள் நாட்டு நலனுக்கு உங்கள் சொத்தை விட்டு கொடுத்துவிட்டு தெருவில் தூங்கினால் என்ன கேடு வந்துவிட போகிறது என்று செய்தி தாயாரித்து வெளியிடுவார்கள்.

2 comments:

Anonymous said...

aiyoo pavam. :)

')) said...

The step indicated by the writer is far fetched. Assuming Government initiates steps to weed out soiled immovable property, "benami" property holders would face the heat. Genuine property holders need not worry.