Tuesday, August 30, 2016

அப்போ இந்தியாவில் இனி யாரும் ஓட்ட பந்தையம் நடத்தவோ, கலந்துக்க கூடாதுன்னு ஆணை பிறப்பிக்கபடும்

http://ramaniecuvellore.blogspot.com/2016/08/blog-post_90.html






இந்தியாவில் இனி யாராவது ஓடினாலோ அல்லது ஓட்டப்பந்தையம் பற்றி பேசினாலோ எழுதினாலோ கடும் தண்டனைகளுக்கு ஆளாகி சாக வேண்டியது தான் என்று அரசு விரைவில் ஆணை பிறப்பிக்கபடும் என்று எதிர்பார்ப்போமாக.

அது மட்டும் இல்லாது இனி இந்தியா எதிர் வரும் நாட்களில் ஒலிம்பிக்கு முதல் அனைத்து விதமாக விளையாட்டு போட்டிகளையும் இந்தியாவில் தடை விதித்துவிட்டு, அந்த காலத்தில் விளையாடியது போல் வில் வித்தை, கட்டை விரலை வெட்டுதல், தேர் ஓட்டுதல், புறா விளையாட்டு என்று மட்டும் நடத்தும். அல்லது மாட்டிறைச்சி இல்லா உணவர்களால் விளையாடும் விளையாட்டுக்கள் மட்டும் என்று சிமிர்த்தி இராணி தலைமையில் ஒரு குழு அமைத்து பரிந்துரைக்க சொல்லும்.

அதோடு மட்டும் நில்லாது மாட்டிறைச்சி உட்கொள்ளும் நாட்டுடன் இனி எந்த ஒரு விளையாட்டோ வியாபாரமோ இந்தியா நடத்தாது என்றும் அறிவிக்கும். இல்லை என்றால்; இது என்ன பாசக ஆட்சி இது.

மாட்டிறைச்சி நாடுகளுடன் வியாபாரம் செய்யும் கணவான்களே உங்கள் தொழிலுக்கு உசைன் போல்டு போட்ட குண்டை பார்த்தீர்களா இந்த ஒலிம்பிக்கு இப்படியா உங்களுக்கு வினையாக முடியானும்.

ஒரு வேளை இந்தியா வாங்கிய பதக்கங்களை எல்லாம் திருப்பி கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டால் வெள்ளி வென்றவளுக்கு அறிவித்த அத்தனை பரிசுகளும் திரும்ப பெற்றுவிடுவார்களோ.....சிந்து தென்னகத்தவராயிற்றே செஞ்சாலும் செய்வாங்க......






https://1.bp.blogspot.com/-8VD-5Ws_WYM/V8Woa0EoM3I/AAAAAAAAMgA/-zCrZ1tCCK0aCKW6_C0dIAeZJhAgVJPzwCLcB/s1600/14051633_10206837014546753_259085067589701593_n.jpg

0 comments: