Wednesday, January 9, 2008

இந்தியர்களை வேலைக்கு சேர்க்காதே, மலேசிய அரசு திடீர் தடை, தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு. காவிக்கூட்டமே இப்போ நிம்மதியா.

இந்து(தின)மலர் பத்திரிக்கையின் இனையதளத்தில் வந்திருக்கும் செய்தி. மேலே உள்ள தலைப்பில் செய்தியை வழங்கியுள்ளது. இந்த செய்தி வெளியான கொஞ்ச நேரத்தில் மலேசிய அமைச்சர் சாமிவேலு மறுப்பு தெரிவித்தார், செய்தி வெறும் வதந்தி தான் என்று. இந்த செய்தியில் மறைந்து கிடக்கும் இரகசியத்தை பார்ப்போம்.

செய்தி உண்மையோ வதந்தியோ, ஆனால் இப்படி ஒரு செய்தி வரக்காரணம் என்ன?

"மலேசியாவில் இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்கள், அதற்காக இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து பேரணியை நடத்தினார்கள். அந்த பேரணியில் தண்ணீரை அடித்து கலைத்தும், சிறையில் இட்டும் இந்துக்களை கொடுமை படுத்தினார்கள்" என்ற செய்திகளை தமிழ்பத்திரிகைகளில் படித்தது நினைவில் இருக்கலாம்.

இப்படி ஒரு போராட்டம் நடக்க காரணம் என்ன, அதன் பின்னனியில் இருந்து இயக்கியவர் யார் என்ற செய்தி எல்லாம், குமுதம் இதழில் மலேசிய அமைச்சர் சாமிவேலு தெரிவித்திருந்தையும் படித்திருப்பீர்கள்.

அன்றைக்கு வரிக்கு வரி இந்து, இந்து, இந்து என்று எழுதிய தமிழ் பத்திரிக்கைகள் ஏன் இன்றைக்கு இந்தியர்கள், தமிழர்கள் என்று எழுதுகிறார்கள். அல்லது இந்துக்கள் எல்லாம் தடை இல்லை இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டும் தான் தடை விதிக்கவேண்டும் என்று மலேசிய அரசு அலோசிப்பதாகவும் அல்லவா செய்தி சொல்லி இருக்கிறார்கள்.

உண்மையில் மலேசியாவில் என்ன குழப்பம், இந்து, இந்தியர், தமிழர் என்ற குழப்பம் ஏன் வரவேண்டும்.

மலேசியவோ, அமெரிக்காவோ, எந்த ஒரு நாட்டிற்கும் பிழைக்கபோவது நடு தட்டு மற்றும் கீழ் தட்டு மக்கள் மட்டுமே. சொந்த நாட்டில் பிழைப்பும் பணமும் கிடைக்கபோவது இல்லை. கொண்ட கொஞ்ச கல்விக்கு நல்ல சம்பாதியம் வெளி நாடுகளில் கிடைக்கும் என்ற வந்திறங்கும் மக்களை இந்தியர்கள் என்று அழைக்காமல், இந்து, மதம், மொழி என்று மறுபடியும் ஒரு குட்டி இந்தியத்தை உருவாக்கி. வந்த நாட்டில், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராக அவர்களை தூண்டிவிட்டு அடிவாங்க வைத்து. உதை கிடைத்ததும், இந்தியர்கள் வதைக்கப்படுகிறார்கள் என்று சொல்லுவது ஏனோ.

முன்னே நீங்கள் கண்டு பிடித்த இந்துகள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் அப்பனே தெரியபடுத்தவும். மதத்தின் பெயரால் நடு தட்டும், கீழ்தட்டு மக்களும் இன்னமும் எத்தணை கொடுமைகளைத்தான் அனுபவிப்பார்களோ பாவம்.

இப்போது வதந்திதான் வந்து இருக்கிறது. பிறகு இதையே முன்னுதாரணமாக கொண்டு, மற்ற எல்லா நாடுகளும், இந்துக்களுக்கு (இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் என்று எடுத்து கொள்க, நன்றி தமிழ் பத்திரிக்கை உலகம்) எதிரான சட்ட நடவடிக்கையில் இறங்க கூடும். பின்னாளில் கொஞ்சம் நஞ்சமாவது பொருளாதார முன்னேறம் கண்ட இந்த நடு தட்டு மற்றும் கீழ்தட்டு மக்கள் இனிமேல் அடுத்த தலைமுறைகள் அதே பஞ்ச பாட்டு பாடிக்கொண்டு நிழல்கள், வறுமையின் நிறம் சிகப்பு படங்களில் காட்டுவது போல் கலைகல்லூரியில் பயின்று தத்துவம் பேசிக்கொண்டு அலைய வேண்டியது தான்.

இவர்கள் முன்னேறுவதில் அப்படி என்ன தான் பொறாமையோ இவர்களுக்கு. நல்ல இந்து, நல்ல மதம். மதத்தை மனித முன்னேறத்திற்கு பயன் படுத்துங்கள். இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் (இந்துக்களுக்கு, நன்றி தமிழ் பத்திரிக்கை உலகம்).

0 comments: