தேசிய விருதுகள் அறிவித்ததை அடுத்து தனது விமர்சனங்களாக வைக்கும் விதமாக ஞானி அவர்கள் காஞ்சிவரம் படத்திற்கு விருது கொடுத்ததை கண்டித்ததோடு நில்லாமல் எவனோ ஒருவன் படத்திற்கு கொடுத்து இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
பதிவுகளில் எழுதி இப்போது வார இதழ்களுக்கு எழுதும் அளவிற்கு உயர்ந்த இவருக்கு, தேசிய விருகளுக்கு உள்ள அடிப்படை தகுதிகள் கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.
எவனோ ஒருவன் படம் ஆங்கிலப்படத்தின் பிரதி. ஒவ்வொரு காட்சியும், கதையும் அப்படியே ஈ அடிச்சாம் பிரதியாக்க இருப்பதை மூலபடத்தை பார்த்தவர்களுக்கு தெரியும். இல்லை என்று அந்த படத்தை எடுத்த இயக்குனரும் சரி, நடித்த மாதவனும் சரி வாதாடவோ எங்கே ஆதாரம் காட்டுங்கள் என்றோ கேட்கும் நிலையில் எல்லாம் இல்லை.
எவனோ ஒருவன் தனது கடின உழைப்பில் கதை எழுதி, அதை வெற்றி திரைக்கதையாக மாற்றி வெளியிட்டால், அதை அப்படியே ஆலிவுட்டுக்கு வெகு தொலைவில் அல்லவா உள்ளோம் என்று தமிழில் மாற்றி எடுத்த உங்களது முயற்சியை வேண்டு என்றால் பாராட்டலாம் ஆனால் அதற்கு விருது எல்லாம் மிகைமிகையான ஆசைகள் ஞானி.
மற்ற விபரங்களுக்கு எனது விமர்சனத்தை பார்க்கவும்.
http://panimalar.blogspot.com/2008/03/blog-post_19.html
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
11 years ago

