Wednesday, March 30, 2016

நல்லவேளை வைகோ இன்னும் அதிக காலம் திமுகவில் இல்லாமல் போனார்

பொதுவாக எதிரியிடம் பெறும் தோல்வியைவிட மிகவும் கொடூரமான கொடுமை துரோகத்தினால் வரும் தோல்வி.

எதிரியின் கையால் கழுத்தருப்பு படும்போது கூட இந்த வேதணை இருக்காது, ஆனால் இப்படி துரோகம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எல்லாம் அழகாக கணித்து எதிரிக்கு சொல்லி அதனால் வரும் வலி பட்டவருக்கு தான் தெரியும் அந்த வேதணை.

தமிழகம் மட்டும் என்று இல்லை உலகெங்கிலும் இயக்கதின் சிந்தாந்தம் பிடிக்காமல் பிரிந்து சென்ற தலைவர்கள் உண்டு, புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறியது போல்.

அது அவர்களது தனி சுதந்திரம, ஆனால் அப்படி வெளியேறும் தனி  மனிதன் பிறகு என்ன செய்கிறார் என்று கவனித்தால் புரியும் ஏன் அவர்கள் வெளியேறினதின் உண்மை காரணம்.

புலிகளின் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்திற்கு வரவேண்டும் என்றது புலிகளின் இயக்கத்தில் சேரும் அனைவருக்கும் வரும் இயல்பான அவா. அது தன்னை தலைவனது அளவிற்கு அர்பணிக்கவும் செயலில் இறங்கவும் தூண்டும்.

ஆனால் கொஞ்ச பேருக்கு இப்படி தோன்ற ஆரம்பித்துவிடுகின்றது.

என்னையா இந்த தலைவரை பெரிய ஆளுன்னு நினைத்தால் காலையில் அதிகாரிகளை அழைத்து நிலைமை என்ன என்று கேட்கிறார், செய்தி தாள்களை படிக்கிறார், பிறகு நண்பர்களிடம் உரையாடுகிறார். பிறகு மாலையில் அடுத்த நாள் வேலைகளுக்கான உத்தரவுகளை வழங்கிறார். அந்த உத்தரவுகள் காலையில் கொடுக்கப்பட்ட தகவல்களை பார்த்து, இயக்கத்திற்கு என்ன தேவையோ அவைகளையும் இணைத்து ஒரு ஆனையை வழங்குகிறார்.

என்ன இவைகளை எல்லாம் என்னால் செய்யமுடியாத அல்லது அடுத்தவரால் செய்யமுடியாதா என்றும் யோசிப்பார்கள் வைகோ கருணாவை போன்றவர்கள்.

இதை தான் இயக்க தலைமை தலைமைமேல் அவர்களுக்கு ஒரு கண் என்று நக்கலாகவும் செல்லமாகவும் சொல்வார்கள் அது குறும்பு செயலாக இருக்கும் வரையில்.

ஆனால் அதையே செயலாக செய்ய துவங்கிய பிறகும் பார்த்துக்கொண்டு இருந்தால் அந்த தலைமை இருக்கபோவதும் இல்லை அது தலைமைக்கும் அழகும் இல்லை. ஆகவே அந்த நபரை இயக்கத்தை விட்டு வெளியே அனுப்புவது இயல்பு.

இயக்கத்தின் வலிமைகளை தெரிந்தவரை வெளிய அனுப்பினால் என்ன நடக்கும் என்று மற்றும் ஒருமுறை வரலாறு நிருபித்து காட்டியது உலகிற்கு புலிகளின் இயக்கம் அழிக்கப்படது கருணாவின் தகவல்களும் தரவுகளையும் கொண்டு தானே அன்றி சிங்களத்திற்கு புதிதாக வந்த வீரத்தினாலோ அறிவினாலோ அல்ல.

தான் எதிர்பார்த்தது தனக்கு நடக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எந்த நோக்கத்திற்காக இயக்கம் துவங்கப்பட்டு ஆயிரகணக்கான உயிர் துரந்தார்களோ அவைகளுக்கு எந்த வித பலனும் இல்லாமலும் போராட்டத்தையே அழிக்கும் அளவிற்கு சென்றது கருணாவின் துரோகம்.

இதே வேலையை தான் இப்போது வைகோ செய்துக்கொண்டு இருக்கிறார்.

தனக்கு கட்சியின் தலைமையும் மாநில முதல்வர் என்ற பட்டமும் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக திராவிட இயக்கங்களே இருக்க கூடாது என்று அரும்பணியை செய்துக்கொண்டு இருக்கிறார்.

 நாளைக்கு இந்த செயலினால் தலைமையும் பதவியும் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் பாவம் அவருக்கு சாணக்கியன் முதல் கருணா வரை என்ன நடந்தது என்று மறந்து போய்விட்டது போலும். ஆசை யாரைவிட்டது.

இந்த வைகோ நாளைக்கு வேறு ஏதாவது கிடைக்கும் என்ற பட்சத்தில் நாட்டையும் காட்டிக்கொடுக்க தயங்க மாட்டார் என்றதுக்கு என்ன உத்திரவாதம். செய்வார் அதையும் செய்வார் அதற்கு மேலும் செய்வார்.

எனக்கு வைகோவையும் பிடிக்காது திமுகவையும் பிடிக்காது ஆனால் திராவிட இயக்கத்தின் மேல் ஒரு மரியாதை உண்டு. அழிந்துக்கொண்டு இருந்த தமிழையும் தமிழகத்தையும் வடக்கத்தியர்கள் இத்தனை பேர் வந்து பேரம் பேசும் அளவிற்கு கொண்டு வர காரணமாக இருந்த இயக்கம் என்றதால் மட்டுமே.

இந்த வைகோவை நம்பி அந்த தள்ளாடும் தலைவரை முதல்வராக மட்டும் இல்லை இந்தியாவிற்கே பிரதமராகக்கூட ஆக்க நினைக்கும் மக்கள் சிந்திப்பார்களா.

ஒரு புரம் கொள்கைக்கு மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு பாசக சத்தம் இல்லாமல் அரங்கேற்றும் பாசிசத்தை தமிழகத்தில் அரங்கேற்ற துடிக்கிறது பாமக. அந்த கொடுமை போதாது என்று இந்த துரோக கொடுமை வேறு. நன்றாக நம்பி ஏமாறுங்கள் மக்களே மக்களின் மக்களே.................

3 comments:

Anonymous said...

கருணாவால் புலிகள் இயக்கத்துக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டது உண்மை
.
ஆனால் கருணா பிரிய காரணம் .. தலைமை மீதான ஆசை அல்ல
தன்னை தற்காத்து கொள்ள ,
கருணா மீது உறுதிப்படுத்தபபட்ட 3 குற்ற சாட்டுகள் வந்த பின்பே கருணா பிரிய முடிவு எடுக்கின்றார் ..
முக்கிய விடயம் கருணா இயக்கத்தில் 2 நிலையில் தான் இருந்தார் . .
.
கருணா பிரிந்த பின்பு தனக்கு நெருங்கிய சகாக்களுக்கு ஒரு விளக்க கூட்டம் நடத்திய போது எந்த சூழ்நிலையிலும் தலைமையை விமர்சிக்க வில்லை . அவரின் முழு விமர்சனமும் பொட்டு அம்மான் மீதுதான் இருந்தது
.
ஈழ விடயத்தை அறிய முயலும் போது அதன் இட அமைப்பு தொடர்பாக அறிதல் முக்கியம் . தமிழ் ஈழம் என்பது வடக்கு , கிழக்கு என்ற இரு மாகாணங்களை உள்ளடக்கியது . கிழக்கு மாகாணத்தில் கருணா இருந்தார். வடக்கு மாகாணத்தையும் , கிழக்கு மாகாணத்தையும் பிரித்து ஸ்ரீலங்கா ராணுவம் சிங்கள குடியேற்றங்களை அமைத்து இருந்தது. இரண்டு மாகாணங்களுக்கும் நேரடி நில தொடர்பு இல்லை

Anonymous said...

இது மிக அரிய கருத்து. தன் சுய நலத்துக்காக தன் இனம் பாதிப்பு அடைய கூடாது. வைகோ, தமிழருவி, நெடுமாறன் போன்றோர் இதில் முக்கியமானோர். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று பார்ப்பானை போல் கேட்பார்கள். இவர்களே அதன் நிழலில் பற்பல சுகங்களை அனுபவித்த பின்..இவர்கள் தங்கள் திறமையால் மேலே வர வேண்டியது இயலாமையால் தொடர்ந்து பார்ப்பான் வெற்றி பெற்று இனத்தை இன்னும் அடிமை தனத்தில் வைத்திருக்க உதவுகின்றனர். அருவியெல்லாம் இன்னும் எவ்வளவு தமிழ் கற்றாலும் பேசினாலும், தமிழ் கற்ற உள்ளம் இருக்குமானால் நிச்சயம் அது அவரை வருத்தும். தேர்தலுக்கு தேர்தல் காசு வாங்கி கொண்டு தமிழரை அழிப்பது இவர்களின் பொது குணம்.

Anonymous said...

Nambeeetom !!!!