Thursday, March 3, 2016

பாசக உண்மையில் நேர்மையான கட்சியாக இருந்தால் இவர்கள் மீது தேச துரோக வழக்கை பதிந்து தண்டனை பெற்று தரவேண்டும், செய்யுமா....

நேரு பல்கலை வளாகத்தில் நடந்த கூட்டதில் எழுப்ப பட்ட வாசங்கள் தேச துரோகமாக கருதி மாணவர்களை சிறையில் அடைத்து தவறு செய்யவில்லை என்று நீயே நிருபிக்கனும் என்றும் சொல்லியது.

என்ன தேச துரோகம் செய்தார்கள் என்றால், அவர்கள் என்ன கோசமிடுகிறார்கள் என்று பாருங்கள் என்று தொகா காட்சிகளை அலைபரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது.

சமாதானம் செய்யவந்தவனை பிடித்து சிறையில் அடைத்து தனிமைபடுத்தி இவர்கள் சோடித்த இந்த வழக்கை ஒத்துக்கொள்ளுமாரு கொடுமைபடுத்தி இருப்பார்கள்.

அதற்குள் புத்திசாளியின் குட்டு வெளிபட்டு விட்டது.

இப்போ இவ்வளவு காராசாரமாக தேச துரோக வழக்கு பதிந்த இந்த பாசக அரசு புனைவு காட்சிகளை தயாரித்து அலைபரப்பிய நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்து அதன் நேர்மையை நேர்மையாக நிரூபிக்குமா இல்லை வழக்கம் போல் போதிய ஆதாரம் இல்லாதால் கன்னையா குமார் உட்பட அனைவரும் விடுதலை என்று மட்டும் கள்ள ஆட்டம் ஆடுமா என்று பார்ப்போம்.

ஒரு கால் பாசக கள்ள ஆட்டம் ஆடும் பட்சத்தில் மற்ற கட்சியினரும் ஊடகங்களும்  சேர்ந்தாவது இந்த தேச துரோகத்தை தோலுரித்து காட்டவேண்டும். இல்லை என்றால் இந்த விபரீத விளையாட்டு நாளை யார் மீது வேண்டும் என்றாலும் பாயும். செய்வார்களா ...........

0 comments: