Monday, January 12, 2015

உளவாளி சுப்ரமணிசாமிக்கு அடுத்த வேலைக்கு நேரம் வந்தாசு - பாக்கிட்தானத்துடன் பேசுவார்

சுசா தொகாவில் அழுது வடிந்து இன்னமும் ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள்ளாகவே பாக்கிட்தானத்தில் இருந்து இந்தியா எங்களுடனான உறவை மேம்படுத்தும் விதமாக செயல்படவில்லை என்று அறிவிப்பு செய்துள்ளது.

இப்போது சுசா தொகாவில் சொல்வார் மோடி ஒரு முறை பாக்கிட்தானத்தோடு தொலைபேசியில் பேசினார் உடனே பாக்கிட்தானம் இந்தியாவின் நட்பு நாடு என்று மாறிவிட்டது. மேலும் இது வரை இந்த பிரச்சனைகள் தொடர்பாக எங்கே எல்லாம் கலவரம் வந்துக்கொண்டு இருந்ததோ அங்கே எல்லாம் இனி பாலாறும் தேனாறுதான் ஓடபோகிறது என்ற போக்கில் பேச போகிறார்.

தமிழிசை சௌந்தர்ராசன் சுசா பேசுவதை எல்லாம் கணக்கில் எடுத்துகொள்ளாதீர்கள் என்றும், மோடி கட்சி மக்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்று தினதந்திக்கு மட்டும் பேட்டி கொடுப்பார்கள், அதுவும் கடைசி பக்கத்தில் ஒருவரின் கவனத்திற்கும் படாதபடி சின்ன எழுத்துக்களில் வரும்.

 நாடே இந்தியா பாக்கிட்தான் பிரச்சனையை மோடி ஒரே ஒரு அழைப்பில் தீர்த்துவிட்டாரே என்று கொண்டாடும் என்று பதிவர்கள் தொட்டு தொகா வரை வரிந்துகட்டி எழுதிய பின், பாசாக வின் செய்தி தொடர்பாளர் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே. தீர்வு கானவேண்டும் என்று எங்களுக்கு ஆர்வம் இருக்கிறது ஆனால் பாக்கிட்தானம் நமது நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று முந்தைய ஆட்சிகாலத்தில் சொன்ன அதே பதிலை பட்டும் படாமல் சொல்வார்கள்.

இன்னமும் என்ன என்ன கூத்துகளை உளவாளி சுசா ஆடிக்காட்டபோகிறார் என்று பார்ப்போம்...........

0 comments: