Thursday, December 4, 2014

மிசுகின் அதிகமாக விமர்சிக்கபடுவதும் அதே பாணியில் செயல்படும் மற்றவர்கள் தப்பிபதும் ஏன்?????

மிசுகினை பொருத்தவரை அவர் வேற்று மொழிபடங்களை தமிழில் எடுப்பதும், அல்லது தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி எடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்.

இதில் கமலை வம்புக்கு இழுப்பது வேறு. ஏன் கமலோடு நிப்பாட்டி விட்டீர்கள், பாலுமகேந்திரா, பாலசந்தர், அனந்து, மணிரத்தினம் தொடங்கி இக்காலத்து இயக்குனர் வரையில் திட்டி தீர்க வேண்டியது தானே அது என்ன கமல் மட்டும்.

வேற்று மொழி படங்களை தமிழில் கொடுப்பதை மக்களும் நிராகரிக்கவும் இல்லை அளவுக்கு மீறி விமர்சிப்பதும் இல்லை.

எனக்கு தெரிந்து பாலுமகேந்திராவின் படைப்புகளை அனைத்தும் வெகு சிலவைகள் தவிர அனைத்தும் ஆங்கிலபடங்களின் தமிழாக்கம் தான். எந்த படத்தை மக்கள் நிராகரித்தார்கள், அல்லது அளவுக்கு மீறி விமர்சனம் செய்தார்கள். காரணம் அவரது படங்களில் ஒரு முழுமையும் நிறைவும் இருக்கும். சரியா சொல்வதென்றால் செய்வன திருந்த செய் என்ற சொல்லுக்கு ஏற்று செய்வார். எந்த ஒரு படத்திலிலும் அவர் இந்த சொதப்பு சொதப்பியது இல்லை.

அது போல தான் கமலும், எடுக்கும் எல்லா படங்களிலும் ஒரு நிறைவு இருக்கும். அந்த படங்களை மக்கள் முழுமையாக எற்றும் கொள்கிறார்கள். என்ன எந்த படத்தின் மொழியாக்கம் என்று குழந்தைகளுக்கு கூட தெரிந்து இருந்தும் ஆமாம் என்றும் சொல்ல மாட்டார் இல்லை என்றும் மறுக்க மாட்டார். அதை விடுத்து ஏன்டா விமர்சனம் செய்கிறீர்கள் என்று எரிந்து விழுந்தது இல்லை. அந்த மனம் உங்களுக்கு இல்லாமல் போனது வருத்தமே.

விமர்சனம் செய்ய உங்களை போல் திரை கலை தெரிந்து இருக்கனும் என்று அவசியம் இல்லை. நன்றாக இருக்கிறது இல்லை, மற்றும் எந்த படத்தின் சாயல் என்று சொல்ல தெரிந்தால் போதும். அதற்காக விமர்சனம் செய்பவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக மட்டமாக நீங்கள் பேசி சீண்டுவதால் தான் வாங்கி கட்டிக்கொள்கிறீர்கள்.

 நானும் கூடத்தான் உங்களை விமர்சனம் செய்து இருக்கிறேன் ஆகவே தான் பொதுபடையாக சொன்ன உங்கள் கருத்திற்கு எனது பதில். எங்கே நான் எழுதிய விமர்சனங்களுக்கு பதில் கொடுங்களேன் பார்ப்போம் உங்களால் முடிந்தால். எனது விமர்சனங்கள் உண்மை என்று உங்களுக்கும் எனக்கும் நன்றாக தெரியும். அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த வேலைகளை கவனியுங்கள்.

மற்றவர்களை போல் உங்கள் படத்திலும் ஒரு நிறைவு இருக்கும், அதை தொடருங்கள். அதைவிடுத்து இப்படி திட்டுவது பேசுவதும் உங்களுக்கு அழகு இல்லை, இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.........

0 comments: