Thursday, November 20, 2014

மோடி வித்தை காட்டும் இராசபட்சேவும் சுசாமியும்

செயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து தூக்கு தண்டனையை நிறுத்தினாரோ அன்றில் இருந்து என்ன செய்தால் தமிழகத்தில் பலமாக காலூன்ற முடியும் என்று எந்த எந்த வழி என்று சளித்து எடுத்து ஒன்று ஒன்றாக செயல் படுத்துகிறது போலும் மோடி அரசு.

வழக்கம் போல் எல்லா சதி வேலைகளையும் காட்டிக்கொடுக்கும் வேலைகளையும் அழகாக செயல்படுத்தும் சுசாமி இந்த செயலிலும் அழகாக செயலாற்றியுள்ளார்.

அப்படி ஒரு தீர்மானத்தை செயலலிதா கொண்டு வந்தர்காக செறைக்கு செல்ல வேண்டி வந்ததும். பிணையில் வெளியில் வந்ததும் மீனவர்களை பிடித்து வைக்க சொல்லிவிட்டு அதிமுக,செயலலிதா எதுவும் அதிரடியாக செய்கிறார்களா என்று நோட்டம் விட்ட பிறகு தனது இரகசிய பேரத்தை மோடி அரசு சுசா வழியா நிறைவேற்றியுள்ளது எத்தனை மக்களுக்கு புரிய போகிறது.

ஒரு வேளை செயலலிதா ஏதேனும் அதிரடியாக செய்து இருந்தால் அல்பமாக ஒரு காரணத்தை சொல்லி அவரின் பிணையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதாக திட்டமாக இருந்து இருக்கும் போலும். தற்கொலை செய்துகொள்ள போகின்றேன் என்று மிரட்டும் விடலைகளை போலும் தேள் கொட்டிய திருடனாகவும் செயலலிதாவின் மௌனத்தை எதிர்கொள்ள முடியாமல் என்னவோ மோடி கேட்டுக்கொண்டாராம் சுசா சட்டங்களை எடுத்து சொன்னாராம் இராசபட்சே விட்டு விடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன தீர்பை எடுத்து குப்பையில் வீசினாராம்.

பொய் வழக்கு என்று சொல்லாமல் நாடு இராசபட்சேக்கு கடமைபட்டிருக்கிறது என்று சுசா சொல்கிறார். நல்லவேளை இராமருக்கு கோவில் கட்டுவது போல் இராசபட்சேக்கு கோவில் கட்டவேண்டும் என்றும் அதற்கு ஒரு தேர் அணிவகுப்பு தொடங்குவதாக மோடி அரசு சார்பாக சுசா அறிவிப்பதாக செய்தி வெளியிடாமல் இருப்பது ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது.

மோடி மிகவும் பலமான அரசியல் தலைவர் என்று காட்ட மேலும் தமிழக மீனவர்கள் மற்றும் மற்ற வேலைகளில் இருக்கும் தமிழர்களை சுமத்ரா, மியான்மர், பிலிபைன்சு, மொரிசியசு என்று குட்டி குட்டி நாடுகளில் இது போல பொய் வழக்குகளில் தூக்கு தண்டனை என்று சொல்வதும். அவரின் சொந்த காரர்கள் போராடுவதும் சுசா என்ன செய்யலாம் என்றும் சொல்வதும் மோடி அவர்களை விடுவிக்குமாறு சொல்லவும் உடனே அவர்களும் விடுவதும் இனி வாடிக்கயாகிவரும். இதை எல்லாம் பார்க்கும் மக்கள் மோடி கட்சி தான் பலம் வார்ய்ந்த கட்சி என்று நம்பி தமிழகத்தில் மோடி கட்சியின் அரசு அமையூமாறு மன நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை சுசாக்கும் அவரது வகையராவுக்கும்.

திருத்தி அமைக்கும் வரலாறு பாட புத்தகங்களில் மோடி எப்படி பலம் வாய்ந்தவராக இருந்தார் என்று இந்த சம்பவங்களை கொண்டு விவரிப்புகள் வரும். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த அரசு ஒரு துரும்பை கூட தூக்கு வைக்கவில்லை என்றும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் பலம் உள்ள்வர்கள் அவர்களே என்றும் எழுதுவார்கள்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பதில் அந்த தொழிலை சுசாவும் மோடியும் அவரது ஆலோசகர்களும் செய்யலாம். இலங்கை அடுத்த பாக்கிட்தானம் ஆகிறது என்று வெளிப்படையாக தம்பட்டம் அடித்திருக்கிறது. யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்காக இலங்கையின் இராணுவம் முதல் நீதிமன்றம் வரை கூலி வேலை பார்கும் என்று அழகாக காட்டி சந்தையை திறந்துள்ளது இலங்கை.

மோடிக்கும் அவரது சாகாக்களும் உண்மையிலே அரசியல் பலம் இருப்பதான நினைத்தால் செயலலிதா கொண்டுவந்த தீர்மானம் போல் ஏதேனும் செய்யட்டும். அதைவிடுத்து ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று அப்பாவி மக்களின் வாழ்கையை பலியிடுவதை நிறுத்திகொள்ளவும். இத்த மானம் இல்லா சுசா இந்த அரசியல் பொறுக்கிதனத்தை எப்போது தான் நிறுத்துவாரோ, தாங்க முடியல அவரது கொசுத்தொல்லை...................யாராவது கொசு மருத்து இருந்தால் கொஞ்சம் உதவுங்களேன்.

0 comments: