Saturday, September 10, 2011

நரேந்திர மோடியை தூக்கில் போட வேண்டும் என்று சுப்பிரமண்ணிய சாமி சொல்கிறார்

இராசீவு கொலை வழக்கில் விசாரணை முடியாமல் கருப்பு சட்டத்தினால் பிண்ணப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரும் அந்த மூவரையும் தூக்கில் தான் தொங்கவிட வேண்டும் என்று கோரும் சாமி, 4 நாட்களில் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஆயிரகணக்கில் கொன்ற நரேந்திர மோடியை தூக்கில் ஏற்ற வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை.

கொலை சதியில் ஈடுபட்ட செயலுக்கு அவன் வாங்கிய மின்கலமும் அதைவிற்ற கடைக்காரரும் சாட்சி என்றால். மோடி இந்த கொலைகளுக்கு திட்டம் தீட்டியதில் இருந்து, அழகாக கச்சிதமாக எப்படி படிப்படியாக நடத்தினார் என்று அவரது பரிவாரங்கள் என்டி தொலைக்காட்சிக்கு அளித்த சாட்சியங்களில் வெட்ட வெளிச்சமாகியது.

மின்கலன் வாங்கி கொடுத்ததுக்கு தூக்கு தண்டனை என்றால், முன் நின்று திட்டங்கள் தீட்டி, அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் பயன்படுத்தி தனக்கு கொள்கை அளவில் பிடிக்காது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அயிரம் ஆயிரம் மக்களை சாட்சியோடு கொன்ற நரேந்திர மோடியை என்ன செய்வது என்று சொல்வாரா.

அல்லது கொள்கையில் நானும் மோடியுடன் இணைந்து நிற்கிறேன் அதனால் என்னையும் மோடியுடன் சேர்த்து தூக்கில் போட்டு கொல்லுங்கள் என்று சட்டம் சொல்வாரா என்று பார்ப்போம். "நீங்கள் சொல்வது எல்லாம் நடக்காது, நாங்கள் சொல்வது மட்டும் தான் நடக்கும் என்று என்ன ஆனவமாக சொல்கிறார்". அது சரி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் சொல்வது தானே நடக்கிறாது.

0 comments: