Thursday, September 1, 2011

இந்தியர்கள் அல்லாத தமிழர்கள் வெளியேற வேண்டும் சுப்பிரமணிய சாமி: அதை தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சொல்லட்டும் சாமி

சாமிக்கு தமிழ் எழுதபடிக்க கூட தெரியாது, வீட்டிலும் மற்றும் எங்கிலும் ஆங்கிலம் தான் அவருக்கு தாய் மொழி. இன்றைகும் பல முன்ண்ணி இதழ்களில் இருந்து வலை பூக்கள் வரை இவரை அமெரிக்காவின் கை கூலி, சைனாவின் கை கூலி, மற்றும் உளவாளி என்றும் அல்லவா சொல்கிறது. அதனால் அவசர அவசரமாக தன்னை இந்தியன் என்று அவரே அவருக்கு சான்றிதழ் வழங்கும் வேலையாக சொல்லிக்கொள்ளட்டும்.

உங்களை போன்ற இந்தியரும் அல்லாத தமிழரும் அல்லாதோர் சொல்ல தேவை இல்லை. ஒரு பல்கலைகழக வாத்தியார் இவ்வளவு செழிப்பாக வேறு எந்த வருமானமும் இல்லாமல் கட்சி நடத்தமுடியும் என்றால் இன்றைக்கு தமிழகத்தில் 80,000 கட்சிக்கள் இருந்துக்கொண்டு இருக்கும். போய் உங்கள் உளவாளி வேலையை பார்த்து காசுபார்கிற வேலையை பாருங்கள். ஆடு நனையுதேன்னு ஓநாய் உட்கார்ந்துக்கொண்டு அழுததாம் அந்த கதையா இல்ல இருக்கு உங்க பேச்சு.