Tuesday, November 26, 2013

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் என்ன அவரது சொந்த படைப்பா ????????

இணையத்தில் பேபி ஆனந்தும் அவரை போல் செல்வராகவனை தீவிரமாக இரசிக்கும் இரசிகர்களும் அதிகமாக குறிபிட்டு பேசுவதும் சிலாக்கித்து கொள்வதும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தான்.

மற்றவர்கள் அந்த படைப்பின் மேல் வைக்கும் விமர்சனங்களும் அவைகளுக்கு இவர்கள் சொல்லும் சமாதானங்களும் பார்க்கும் போது உண்மை என்ன என்று தெரியாமல் இவர்கள் இருவரும் சண்டை இட்டுக்கொள்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும்.

இதற்கு முன் பல தடவைகள் எடுத்து எழுதியது போல், கதையை அடிப்படையாக கொண்டு திரைகதை எழுதி படம் எடுப்பது வேறு. ஆங்கிலத்தில் வந்த படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி வசனத்திற்கு வசனம் தமிழில் மட்டும் மாற்றி இன்னும் கொஞ்சம் தமிழ் மக்களையும் அவர்களது பழக்கங்களையும் மட்டும் திணித்து அசலை அப்படியோ கொடுக்கும் ஒரு கொடூரம் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

இத்த சூத்திரத்தை கையாண்டு பெரிய அளவில் படைப்பாளி அறிவாளி அப்படி இப்படி என்று எல்லாம் எல்லா பெயரையும் வாங்கிக்கொண்டு தமிழ்படைப்புலகின் தன்னிகரில்லா நீவீன படைப்பாளி என்று பெயர் பெற்று இருக்கும் மணிரத்தினம் தான் அவர்.

மணிரத்தினம் சொந்தத்தில் கதை எழுதி படம் எடுத்தது ஆரம்ப காலங்களில் மட்டுமே, அதற்கு பிறகு மிகவும் புகழ் பெற்ற ஆங்கில மற்று ஐரோப்பிய திரைபடைப்புகளை அப்படியே தமிழுக்கு உருட்டி எடுத்து கொடுப்பதும் அதுவும் நல்லபடியாக வியாபாரம் ஆகுவதுமாக இருந்தது.

இந்த வகையில் மணிரத்தினம் எழுதி இயக்கி தயாரித்த இராவணன் மிகவும் பிரபலம் அடைந்த லெசு மிசரிசு Les Misérables படத்தை அப்படியே தமிழில் எடுத்துவிட்டு. இது இராமாயணம், மகாபாரதம், சீதை, இராமன், அனுமன் என்று பத்திரிக்கைகளில் ஒரு தொடுப்பும் கொடுப்பார்.

2012ல் இந்த படத்தை ஆங்கிலத்தில் மீண்டும் எடுத்தார்கள் அந்த படைப்பை கௌரவிக்கும் விதமாக.

பாத்திரபடைப்புக்கு பாத்திரம், காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் என்று அனைத்து ஒற்றுமையையும் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் காணலாம் இந்த படங்களில்.

உமா துருமேனும் ஐசுவரியாவும் சரியாக அந்த பாத்திரத்திற்கு பொருந்தினார்கள். மற்ற எல்லா பாத்திரங்களும் அவர்களுக்கு துணையாக வரும் பாத்திரம் ஆனதால் மணிரத்தினமும் ஐசுவரியாவை வைத்துக்கொண்டு மற்றவர்களையும் அது போல தேர்ந்து எடுத்துகொண்டார். இப்படி ஏகப்பட்ட ஒற்றுமைகளை காட்சிக்கு காட்சி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த வழியில் செல்வராகவனும் குதித்து தனது திறமையை காட்ட துவங்கிய போது தான் அவருக்கு சரிவு துவங்கியது.

ஆங்கிலத்தில் காங்கோ  Congo (1995) என்று ஒரு படம்
http://www.imdb.com/title/tt0112715/?ref_=nv_sr_1
இத்த படத்தை தான் ஆயிரத்தில் ஒருவனாக செல்வராகவன் எடுத்துள்ளார்.

புதைந்து கிடக்கும் சாலமன் குகையில் கிடக்கும் வைரங்களையும் பொருட்களையும் மனதில் கொண்டு ஆப்ரிக்கா பயணபடும் ஒரு செல்வந்த கும்பலும். தான் வளர்க்கும் செல்ல குரங்கை அதன் காட்டிற்கு கொண்டு காட்டிவிட்டு திரும்பி வரும் ஒருவரும். வரலாற்று ஆராய்சியில் சாலமனின் குகைபற்றி அறிந்து அதன் செல்வத்தை கொள்ளை கொள்ள வரும் ஒரு நபரும் என்று ஆப்ரிக்க காடுகளில் பயணிக்கும் காங்கோ கதை.

காங்கோவில் வரும் அந்த கருங்குரங்கு பாத்திரத்தை தமிழில் கார்திக்காகவும், ஆங்கில கதாநாயாக வரும் பாத்திரத்தை ரீமாவாகவும் மாற்றி இருப்பார் தமிழில்.

இதைவிட கொடூரம் அந்த சாலமன் குகையை காக்க எண்ணிய மன்னன் அங்கே சில குரங்குகளை கொடூரமாக பழக்கி அங்கு வரும் ஆட்களை கொன்று குவிக்க என பழக்கப்படுத்து பிறகு தலைமுறை தலைமுறையாக அவைகள் கொடூர விலங்கினமாக பரிணாமித்து இருக்கும் என்று காட்டியதை தான் தமிழ்ல் பழங்கால மன்னராகவும் தமிழர்களாகவும் படம் எடுக்கும் கொடுமையும் துணிவும் செல்வராகவனுக்கு மட்டும் தான் வரும்.

அந்த கொடிய குரங்குகள் அங்கு வந்த புதையல் கொள்ளை காரர்களை தாக்கும் போது உடன் சென்ற குரங்கு அங்கே குரங்குகளுடன் காப்பாற்றும் காட்சிதான் கார்த்திக் இறுதி காட்சியில் சண்டியிடும் காட்சிகள்.

புதயலை நோக்கி இரவில் ஒரு படகு பயணம் இருக்கும் அந்த படகுகளை நீர் யானை கடித்து நாசம் செய்வதாக காங்கோவில் வரும் அந்த காட்சிகளை கூட விட்டு வைக்காமல் மணிரத்தினம் போல் மொழி மாற்றும் கலாச்சார மாற்று மட்டு செய்து ஏதோ ஒரு வகையான் மீன் துரத்துவதாக காட்டியுள்ளது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

உண்மை இப்படி இருக்க ஆனந்தும் மற்றவர்களும் ஒரு உண்ணத படைபாளியின் படைப்பு கேவலப்படுத்த பட்டுவிட்டதே என்று புலம்புவதை பார்த்து சகிக்கமுடியாமல் இவைகளை எழுதுகிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் வந்ததும் இவைகளை எழுதவேண்டு என்று இருந்த என்னை தமிழர்களின் வரலாறை போற்றி படங்களே வருவது இல்லை அந்த வகையில் இதுவும் இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டு வைத்தே. ஆனால் செல்வராகவனே அந்த படைப்பை கொளுத்த வேண்டும் என்று சொல்லும் போது எழுதினால் தவறு இல்லை என்று தான் தோன்றுகிறது எழுதுகிறேன்.

பரீட்சையில் பார்த்து எழுத துவங்கிவிட்டால் தனக்கு என்று எதுவும் மனதில் தோன்றாது. கொஞ்சன் நஞ்சம் படித்தவைகள் கூட மறந்து போகும். அந்த நிலைதான் அடுத்தவரின் படைப்பை அப்படியே உருட்டி எடுக்கும் வேலையும். அந்த மூலத்தை தான் அவர்களுக்கு எந்த சிந்தையும் வருவது இல்லை. மணிரத்தினம் அப்படி தான்.

என்ன மணிரத்தினம் படைப்பாளி அறிவாளி அப்படி இப்படி என்று எல்லாம் பெயர் வாங்கிவிட்டார், அவரை பார்த்து அதே முயற்சியில் இறங்கி நன்றாக தன்னை தொலைத்துவிட்டு அலைகிறார் முகத்தை தேடி செல்வராகவன். இந்த வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள் செல்வராகவன், உங்களுக்கு இயக்க தெரியும். நல்ல கதையை தேடி பிடித்து அழகாக எடுங்கள், கதையா இல்லை, இல்லை உங்களுக்கு தான் கற்பனை வற்றிவிட்டதா...........உங்களால் முடியும் மீண்டும் மீண்டு வந்து மக்கள் இரசிக்கும் வண்ணமாக ஒரு நடுத்தர வர்க கதை எடுங்கள்.................மீண்டும் பழைய செல்வராகவனாக வலம் வரலாம்..............மணிரத்தினமே இப்போது அந்த யோசனையில் தான் இருப்பார்.........

Monday, November 25, 2013

இரண்டாம் உலகம் -- திரைவிமர்சனம்

செல்வராகவனின் படம் பார்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை விதைத்து செல்லும் விதமாக இருந்த காலம் எல்லாம் மலை ஏறி போய்விட்டது போலும்.

படத்தின் துவக்கத்தில் இருந்த ஒரு தெளிவும் தொடரும் இடையிலேயே காணாமல் போய் படம் பார்பவர்களின் ஊகங்களுக்கு விட்டு விட்டது எந்த ஒரு இயக்குனருக்கும் அழகில்லை.

பார்க்கும் இடங்களெல்லாம் உன்னை போல் பாவை தெரியுதடி என்று ஒரு விளையாட்டாக சொன்னார்கள் என்று பார்த்தால் அதையே கதையாக்கி சகிக்க முடியவில்லை.

முதல் பாதி படம் முடிந்ததும் இரண்டாம் பாதியில் அவள் என்ன ஆனாள் என்று சொல்வார்கள் என்று பார்த்தால் பாவமாக முடித்து இருக்கிறார்கள் அதுவும் சகிக்க முடியாதவிதமாக இருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் காதலை எப்படி கற்றுக்கொடுத்தான் அவளும் எப்படி கற்றாள் என்ன கற்றாள் என்றால் வெட்கப்படுவதும் அவனை தேடுவதும் தான் காதல் என்று சொல்லி செல்கிறார் இயக்குனர்.

எப்படி இருந்த செல்வராகவன் இவர், ரெயின்போ காலனியில் அது என்ன காதல் எந்த வகை என்ன காதல் என்று எல்லாம் விளக்கம் சொல்லவில்லை என்றாலும் அந்த காதல் பார்க்க அழகாக இருந்தது. இந்த இரண்டாம் உலக காதல்கள் இரண்டுமே சகிக்கவில்லை.

படத்தின் துவக்கதி இருந்து திணரல், நாயகன் அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதன். சரி, அப்பாவால் தனியாக எதையும் செய்துகொள்ள முடியாது. பிறகு எப்படி விட்டு விட்டு சமூச சேவைக்கு அவனுக்கு நேரம் கிடைகிறது பதில் இல்லை......

ஒரு அழகான பெண் தன்னை விரும்புவதாக சொல்லும்பட்சத்தில் குறைந்தது ஒரு ஆச்சரியாமாவது அவனுக்கு வந்து இருக்க வேண்டும் அவனோ தாலின்ன என்னன்னு தெரியாத சின்ன தம்பியாக நடந்துகொள்ளவது இரசிக்கும் படியாக இல்லை.

இரண்டாம் பாதியில் தற்பொழுது வரும் மொழிமாற்று படங்களை பார்த்தது போல் இருக்கிறது. அதுவும் அந்த கொடூரமான அந்த சிங்கம் நாயகனை முதல் தடவையாக அடிக்கவே 10 நிமிடங்கள் எடுத்துகொள்கிறது ஏன் என்று இயக்குனர் தான் சொல்லனும்.

இரண்டாம் பாதியில் இவ்வளவு திணரல் ஏற்பட்டால் அதற்கு ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது படத்தை எங்கு இருந்தோ எடுத்து தழுவி இருக்க வேண்டும். அப்படி தழுவும் போது மூலக்கதையின் தாக்கத்தில் தொடர்வது கடினமே. அப்படி பல் திணரல்களை கண்கூடாக கண்டு இருக்கிறோம் உதாரணமாக கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம், சமர் 500ரை தழுவி எடுத்தபடம். ஆனால் மூலப்படத்தில் இல்லாத எந்த கதைபகுதி என்று கடைசியில் வரும் காட்சியாகிய நாயகன் நாயகி திருமணம் மாற்றி அமைக்கும் காட்சி. மூலத்தில் நாயகி வேறு ஒருவரை மணப்பார், நாயகனோ அடுத்து ஒரு வேலைக்கு சென்று அங்கே சந்திக்கும் வேறு ஒரு பெண்ணுடன் வெளியில் செல்வதாக முடித்து இருப்பார்கள். இந்த காட்சியை மட்டுமே மாற்றி அமைத்ததில் எந்தனை விதமான திணரல்கள் வந்துள்ளது என்று படம் பார்த்தவர்களுக்கு புரியும்.

அது போல இரண்டாம் பாதி முழுக்க வசனத்திற்கு வசனம், காட்சிக்கு காட்சி தொடர்பே இல்லாமல் இருப்பது நன்றாகவே தெரிகின்றது. பார்போம் இணையத்தில் யாராவது வெளியிடுகிறார்களா என்று........

பின்னணி இசையில் இரண்டாம் பாதியில் நாயகியை ஆர்யா திரும்பவும் பார்க்கும் காட்சியில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் இராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ பாடல் அப்படியே ஒலிக்கப்படுவதும் பின்னர் வரும் காட்சியில் இளையராசாவின் How to Name itம் வருவது ஏனோ என்று இயக்குனர் தான் சொல்ல வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவனில் நடந்த தவறை திருத்தி கொண்டு இருப்பார் என்று தான் எதிர்பார்தேன், பாவம் அதைவிட மிகவும் மோசமான நிலைக்கு வந்துள்ளார் செல்வராகவன்.

ஒரு நல்ல கதையாசிரியரை பிடியுங்கள் பிரச்சனைகள் முடிந்து போகும்..........

Wednesday, November 20, 2013

ஆரம்பம் - Swordfishம் திரைவிமர்சனம் மணிரத்தினம் போல் அல்லாமல் மிசுகின் வழியில்


ஆரம்பம் இந்த ஆங்கிலப்படத்தை அப்படியே தமிழில் எடுக்க நினைத்து பிறகு கதைகளில் சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதிலும் இந்திய அரசியலில் நடந்த பேரங்களையும் அதன் தொடர்பு கொண்ட நிகழ்வுகளையும் நுழைத்துள்ளதால் மக்கள் படத்தையும் இந்திய அரசியலையும் தாண்டி சிந்திக்க முடியாமல் திறமையாக கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பாராட்டுக்கள்.

ஆங்கில கதையை அப்படியே தமிழில் எடுத்து இருக்கவும் முடியாது தான் காரணம் ஆர்யாவின் பாத்திரத்திற்கு ஒரு முன்னாள் மனைவியும் குழந்தையும் உண்டு. அந்த மனைவி நீலப்படம் எடுக்கும் மனிதருடன் வாழ்ந்துக்கொண்டு மகளை தந்தையிடம் இருந்து பிரித்து போதைக்காக வாழும் ஒரு பெண்ணாக படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் தமிழில் எப்படி எடுப்பது.

அப்பாவுக்கு பீர் வாங்கொடுத்து மகிழும் மகளை காட்டியதற்கே வாங்கி கட்டிக்கொண்ட நிலையில் இப்படி எல்லாம் கதை எழுதினால் எப்படி என்று தான் ஆர்யாவை காதலனாக மாற்றிவிட்டார்கள்.

சரி அச்சித்தின் பாத்திரமாவது அப்படியே தேசபக்தி வழிய விட்டு வைத்து இருக்கலாம். எப்படி அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் தாக்கும் எவனுக்கும் 10 மடங்காவது திருப்பி தருவது என்று அரசாங்கத்தால் நடத்தபடும் ஒரு நிழல் அமைப்பின் தலைவன் ஆங்கிலத்தில். தமிழிலும் அப்படியே காட்டி இருக்கலாம், சமீபத்தில் D-Dayல் வந்தது போல்.

ஆனால் என்னவோ சவபெட்டி ஊழல், கைதடி ஊழல் என்று ஊதிவிட்டு விட்டார்கள் தமிழில்.

ஆரம்பமே விருவிருப்பாக இருக்கிறது என்றால் இந்த ஆங்கிலப்படத்தை எப்படி சொல்வார்கள் என்று படம் பார்த்தவர்கள் சொல்லட்டும்.

நயனின் பாத்திரம் தான் ஐயோ பாவம் என்று வந்து நிற்கிறது. ஆங்கிலத்தில் ஒரு வீராங்கனையாக காட்டபட்ட பாத்திரம் தமிழில் துபையில் மாடியில் இருந்து தள்ளிவிடும் பாத்திரமாக படைக்கப்பட்டிருப்பது கொடுமையே.

ஒரு நல்ல படத்தை அப்படியே மொழிபெயர்கவும் நல்ல திறமை வேண்டும், நன்றாக தமிழில் வந்திருக்கிறது வாழ்த்துகள்.