Friday, May 6, 2011

அமெரிக்காவை போல் இலங்கையும் வல்லரசு மற்றும் நல்லரசு ஆனது - பின் லேடன் வேட்டையும் இலங்கை தன்நிலை விளக்கமும்.

அமெரிக்கா ஒசாமாவை வேட்டையாடியதும், இலங்கை அமெரிக்கா இலங்கையை விமர்சிக்கும் தகுதியை இழந்துவிட்டது என்று சான்றிதழ்கள் வழங்கியுள்ளது.

விபு தலைவரை பிடிப்பதாக சொல்லி தனது சொந்த மண்ணில், 140000 மக்களை ஓரிரு நாட்களில் கொன்று குவித்த இலங்கை அமெரிக்காவை விமர்சனம் செய்கிறது.

அடுத்த நாட்டு மண்ணில் தங்கி அமெரிக்காவுக்கு எதிராகவும் அமெரிக்க மக்களை குறிவத்தும் தொடர்ந்து தாக்குதல்களை திட்டமிட்டும் தனது ஏவல் ஆட்களை வைத்து அவ்வப்போது அசம்பாவிதங்களையும் கட்டவிழ்த்தும் வந்த ஒசாமாவை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க செய்த செலவுகளுக்கு அளவு இருக்காது.

இந்த செயலுக்குகாக ஈனப்பயல்கள் மட்டுமே அரசாளும் பாக்கிட்த்தானத்திற்கு எல்லாம் கொட்டிக்கொட்டு கொடுத்து உதவிய நாடி நின்றது.

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதும் முதுகில் குத்துவதும் தான் பாக்கிட்த்தானத்திற்கு என்றைக்கும் வழக்கம். வழக்கம் போல் அள்ளிவீசிய காசுகளை பொறுக்கிக்கொண்டு அலட்சியமாகவே பதிலை சொல்லி வந்தது.

ஒரே இரவில் 3 இலட்சம் ஆப்கான் தீவிரவாதிகள் காணாமல் போனது நமக்கு நினைவில் இருக்கலாம். அந்த மக்களை பாக்கிட்த்தானின் ஆக்கிரமிப்பு காசுமீரத்திற்கு சாமார்த்தியமாக இடம் மாற்றிவிட்டு அமெரிக்காவிடம் அவர்களை எல்லாம் அழித்துவிட்டதாக சொல்லி அமோகமாக பொருளையும் உதவிகளையும் அள்ளினார்கள் அன்று.

அந்த பொருளை எல்லாம் சுருட்டிக்கொண்டு முசாரப்பு இன்று இலண்டனில் தங்கிக்கொண்டு அவர் மட்டும்மே உருப்பினராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியை துவங்க்கி ஆட்சியை பிடிக்கப்போவதாக சபதம்விட்டுக்கொண்டும் இருக்கிறார்.

அவருக்கு அடுத்து அவரது பாதையில் அடுத்தவர் அதே போல் ஒரு பெரும் பொருளை திரட்டிகொள்ள வேண்டு காத்திருக்கும் வேளையில் அமெரிக்காவின் ஆட்சி பீடத்தில் மாற்றம் நிகழ்ந்தது.

மாற்றத்தின் முதல் பதிலே பிடித்து கொடு இல்லை அடிவிழும் என்ற எச்சரிக்கை. முடியாது என்று அடம்பிடிக்கும் வேளையில் எத்தனுக்கு எல்லாம் நான் எத்தன் எனக்கேவா என்று என்ன என்ன எல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் செய்து. மிகவும் இரகசியமாக பொதுமக்களோ அடுத்த வீட்டில் வசிப்பவருக்கு கூட எந்த பாதிப்பும் இல்லாம் கச்சிதமாக கொல்லப்பட்டான் ஒசாமா.

அடுத்தவர் நாடு தானே எவன் செத்தால் எனக்கு என்ன என்று விடாமல் மிகவும் பொறுப்புடனும், மனிதாபி மானத்துடனும் நடந்து கொண்ட இந்த செயலும், சொந்த மண்ணில் தனது சொந்த மக்கள் 140000 மக்களை கொன்ற செயலும் ஒன்று என்று சொல்கிறது இலங்கை.

முன்னர் இலங்கையின் இராணுவ தளபதி மட்டும் தான் இப்படி மண்டையில் அடிப்பட்ட பைத்தியகாரர் போல் அவ்வப்போது பிதற்றி உளரி கொட்டுவார். இப்போது ஒட்டு மொத்த இலங்கையும் இப்படி உளரி கொட்டுகிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது போலும்

இப்படி எல்லம் பேசினால் இலங்கை புனித பூமியாக மாற்றிவிடும் என்று எந்த அடிமுட்டாளோ இலங்கைக்கு அறிவுரை வழங்கிருப்பார் போலும்.

இன்று பாக்கிட்த்தானத்தின் தோல் வெளுத்துள்ளது, கூடிய விரைவில் உங்களது நிறமும் இதோ போல் வெளுக்கும் அன்றைக்கு இப்போது எப்படி சீனாவின் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சுகிறதோ அதே போல் நீங்கள் பிடித்து கெஞ்ச ஆளே இல்லாமல் தவிக்கும் காலம் வரும், அன்றைகு என்ன உளருகிறீர்கள் என்று பார்ப்போம்.

ஆமாம் இந்தியா கூட ஏதோ வல்லரசு நல்லரசு என்று தன்னை சொல்லிக்கொண்டு இருகிறது. அமெரிக்கா போல் இல்லை என்றாலும், இறாவின் நடவடிக்கையாகவாது இப்படி தாவுதை தண்டிக்கிறதா என்று பார்ப்போம்............ செய்யுமா வல்லரசு நல்லரசு இந்தியா...............

0 comments: