Saturday, August 28, 2010

வரும் சட்டசபையில் வெல்லப்போவது யார்.............

விசயகாந்து முதல் முன்னனி கட்சிகள் யாவும் வரும் சட்டசபையை பிடிக்க உத்திகளை வகுத்துக்கொண்டு வருகிறது. அதிமுக இந்தனை ஆண்டுகால கும்பகர்ண தூக்கத்திற்கு பிறகு மக்களையும் மக்களது நலங்களையும் காப்பதாகவும். அந்த நலங்களை என்னமோ திமுக மட்டுமே அழித்ததாகவும் அழித்துக்கொண்டு இருப்பதாகவும் கதைகளை கட்டி பாணா காத்தடியை பறக்கவிட்டு பல்டி அடித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறது.

இராமதாசும் வைகோவும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் தெரிவிக்கவும்.

இந்த தமிழக அரசியல் கட்சிக்கள் எல்லோரும் ஒரு மாம்பெரும் பொய்யை வேண்டும் என்றே சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவைகளில் ஒன்று, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் வழங்குவதும் நாங்கள் தான் என்றது.

இந்தியாவில் அயலக சேவை வேலைகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கொண்டுவந்து கொட்டுவதை என்னமோ இவர்கள் தான் உருவாக்கியதாக சொல்வது அப்பட்டமான பொய்.

இப்போது அந்த பொய்யை விசயகாந்து முதல் அதிமுக வரை யாருக்கும் வேலையே இல்லை என்று புலம்புவதும் பார்ப்பதற்கும் கேட்பத்தற்குன் நகைப்பாக இருக்கிறது.

நகர்புரமாக இருந்த இந்த வேலை பெருக்கத்தையும் தாண்டி அயலக நிறுவணங்கள் உழவிலும் கால் பதிக்க தொடங்கியுள்ள இந்த வேளையில் அப்படி ஆகும் நிலைமைகளை தடுப்பதை விட்டு விட்டு அந்த வேலை வாய்ப்புகளையும் வழங்கியது நாங்கள் தான் என்று போட்ட போட்டிக்கொண்டு இவர்கள் விளிப்பதை என்ன என்று சொல்வது......

கொக்கோ கோல நிறுவணங்கள் முதல் பட்டி தொட்டியில் இருக்கும் சின்னஞ்சிறு நிறுவணங்கள் வரை நிலத்தடி நீரை உரிஞ்சி பாலித்தீன் பைகளில் அடைத்து விற்கிறார்கள். காற்றை தவிர மனிதனுக்கு இயற்கையில் கிடைக்கும் அனைத்திற்கும் ஒரு விலையை சொல்லி விற்கு நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டு நாங்கள் தான் சிறந்தவர்கள் என்றும் சொல்லும் இந்த அரசியல் வாதிகளை என்ன என்று சொல்ல.

அயலக வேலைகளுக்காக அருவி போல் கொட்டும் பணத்தை எப்படி நல்ல வழிகளை ஏற்படுத்த பயன் படுத்த வேண்டும் என்றோ, அல்லது பயன் படுத்தாமல் இருப்பதை பற்றியோ மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி எந்த பேச்சும் இல்லை.

எவனோ வருகிறான் என்னமோ செய்கிறான், நமக்கு பணம் வந்தால் சரி தான் என்று இருக்கும் இந்த தூங்கு மூச்சி கட்சிகள் தான் தமிழகத்தை காப்பாற்ற போகிறதா.....

அதிமுகவில் தொடங்கிய கோவில்களில் திண்ணை சோரு திட்டத்தில் இருந்து, (குடி)மக்களுக்கு முட்டையும் தண்ணீரும் இலவசம் என்று நாளுக்கு நாள் இலவசமாக அறிவிப்புகள் வந்துக்கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவணங்களில் அனைத்தும் தனியாருக்கு சொந்தம், போக்குவரத்தில் இரயில்வே நிறுவணம் தவிர மற்ற அனைத்தும் தனியாருக்கு கொடுத்தாகிவிட்டது.

நாட்டில் வரும் அத்துனை வகையான புதுவகை நுட்பங்களை அனைத்து அரசு நிறுவணமாக துவங்கி எல்லா வகையான சோதனைகளை தாண்டி பணம் கொழிக்கும் போது அதை அப்படியே தனியாருக்கு கொடுக்கும் போக்கு இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

அகில இந்திய வானொலி முதல் அலை பேசி வரை அப்படியே தனியாருக்கு விற்றாகி விட்டது. இன்னமும் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனித வளத்தையும் அயலக பணி நாட்டிற்கு விற்றாகி விட்டது. மொட்டை அடிக்க இனி ஒன்றும் இல்லை இந்த நிலையில் நடக்க இருக்கும் இந்த தேர்தலில் நாங்கள் வந்தால் என்று இவர்கள் சொல்லும் வசனங்களில் எந்த உயிரும் இல்லை இருந்தாலும், நான் அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்று இவர்கள் கதை கட்டுவதை பதிவர்கள் கூட கண்டிக்காமல் இருப்பது தான் வியப்பாக இருக்கிறது.............

வாழ்க மக்களாட்சி, வளர்க பாரதம்.....................

2 comments:

')) said...

அவசியமான பதிவு.

http://idlyvadai.blogspot.com

இந்த பதிவுகளை பாருங்கள்.

')) said...

தோழர் மாதவராஜ் அவர்களின் பதிவுகளையும் பாருங்கள்.

http://mathavaraj.blogspot.com/