முதலில் அவரின் மறைவுக்கு பிரிந்து தவிக்கும் உறவுகளுக்கு நமது இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து தொடருவோம்.
இன்றைக்கு அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இரவின் அமைதியை நிம்மதியான தாலாட்டாய் மாற்றி அமைத்த அவரது இசை ஈடில்ல இசை. அந்த தாலாட்டு அன்னைக்கு பிறகு கிடைக்கின்ற தாலாட்டு.
நேற்றைய போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை என்றதின் நீண்ட வரலாறு தான் அவருடைய தாலாட்டுகள் காட்டுகிற கால கண்ணாடி.
ஒவ்வோரு பாடலும் ஒவ்வொரு நினைவலையை ஆழ் மனதுக்குள் இருந்து கிளரி எடுத்து சில சமயம் சோகமாகவும், இளமை நிகழ்வுகலை நினைவுபடுத்தியும், எதிர்கால கனவுகளையும் என்று என்றைக்கும் பரிணாமித்து வரும் பாடல்கள்.
இன்றைக்கு இருக்கும் புதிய வாத்திய கருவிகளோ பதிவுமுறைகளோ இல்லாத நாட்களில் வெறும் மெட்டையும், வார்த்தையும், குரல்களை மட்டும் வைத்து அசத்து அசத்து என்று அசத்திய அசாத்தியமானவர்.
எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடும் எண்ணிகயில் இருந்தால் இது அது என்று தொகுத்து எழுதலாம். பட்டியலிட ஆரம்புத்தால் எதை எடுப்பது எதைவிடுப்பது என்று யோசிக்கவே ஆண்டுகள் ஆகிவிடும் ஆகவே அந்த வேலையை நிறுத்திவிடுவோம்.
கருப்பு வெள்ளையில் துவங்கி, மன்னர்கள் கதைகளில் இருந்து வண்ணத்தில் 90கள் வரையில் கேட்போருக்கு என்று அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்த மன்னர்.
இவரின் இசையின் தாக்கம் இன்னமும் ஒரு 3 தலைமுறைக்காவது இருக்கும். வானொலியும் தொலைகாட்சிகளும் தனது இரவு சேவையே இவரின் பாடல்களை பெரும்பாலும் நிறப்பித்தான் பொழுதை ஓட்டுகிறது.
இரவு வந்துவிட்டாலே தூக்கத்தை கெடுக்காவண்ணம் பாடல்கள் வேண்டும் என்றால் அது இவரது பாடல்களாகத்தான் இருக்கும். தமிழர்களின் இரவின் அமைதியாகவும் நிம்மதியுமாய் என்றைக்கும் நிறைத்து இருப்பவர். அவரின் புகழ் வாழ்க, இறைவனிடம் சேர்ந்து அவரது ஆத்துமா அமைதியடையட்டும்.......
இன்றைக்கு அல்ல கடந்த 30 ஆண்டுகளாக இரவின் அமைதியை நிம்மதியான தாலாட்டாய் மாற்றி அமைத்த அவரது இசை ஈடில்ல இசை. அந்த தாலாட்டு அன்னைக்கு பிறகு கிடைக்கின்ற தாலாட்டு.
நேற்றைய போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை என்றதின் நீண்ட வரலாறு தான் அவருடைய தாலாட்டுகள் காட்டுகிற கால கண்ணாடி.
ஒவ்வோரு பாடலும் ஒவ்வொரு நினைவலையை ஆழ் மனதுக்குள் இருந்து கிளரி எடுத்து சில சமயம் சோகமாகவும், இளமை நிகழ்வுகலை நினைவுபடுத்தியும், எதிர்கால கனவுகளையும் என்று என்றைக்கும் பரிணாமித்து வரும் பாடல்கள்.
இன்றைக்கு இருக்கும் புதிய வாத்திய கருவிகளோ பதிவுமுறைகளோ இல்லாத நாட்களில் வெறும் மெட்டையும், வார்த்தையும், குரல்களை மட்டும் வைத்து அசத்து அசத்து என்று அசத்திய அசாத்தியமானவர்.
எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடும் எண்ணிகயில் இருந்தால் இது அது என்று தொகுத்து எழுதலாம். பட்டியலிட ஆரம்புத்தால் எதை எடுப்பது எதைவிடுப்பது என்று யோசிக்கவே ஆண்டுகள் ஆகிவிடும் ஆகவே அந்த வேலையை நிறுத்திவிடுவோம்.
கருப்பு வெள்ளையில் துவங்கி, மன்னர்கள் கதைகளில் இருந்து வண்ணத்தில் 90கள் வரையில் கேட்போருக்கு என்று அள்ளிக்கொடுத்துக்கொண்டே இருந்த மன்னர்.
இவரின் இசையின் தாக்கம் இன்னமும் ஒரு 3 தலைமுறைக்காவது இருக்கும். வானொலியும் தொலைகாட்சிகளும் தனது இரவு சேவையே இவரின் பாடல்களை பெரும்பாலும் நிறப்பித்தான் பொழுதை ஓட்டுகிறது.
இரவு வந்துவிட்டாலே தூக்கத்தை கெடுக்காவண்ணம் பாடல்கள் வேண்டும் என்றால் அது இவரது பாடல்களாகத்தான் இருக்கும். தமிழர்களின் இரவின் அமைதியாகவும் நிம்மதியுமாய் என்றைக்கும் நிறைத்து இருப்பவர். அவரின் புகழ் வாழ்க, இறைவனிடம் சேர்ந்து அவரது ஆத்துமா அமைதியடையட்டும்.......

