இப்படி ஒரு வாதம் தேவை தானா, இத்த வாதமே அபத்தமாக இல்லை.
எந்த அடிப்படையில் இந்த மனிதனின் மறைவிற்கும், இறந்த பிறகு நடக்கும் கருமகாரியங்களும் நடக்கவில்லை என்று வாதாடுகிறார்கள்.
அகிம்சையே போதித்து அகிம்சையாகவே வாந்த காந்திக்கு உலகம் கொடுத்த பரிசு மரணம். அப்படி கொன்றவர்கள் எல்லாம் இந்தியாவின் இப்போதைய அரசியல் தலைவர்கள் இந்தியாவை 6 ஆண்டுகள் ஆண்டார்கள் இப்போது சில மாநிலங்களில் ஆளுகிறார்கள்.
காந்தியை விட உயர்ந்த கொள்கைகளை கொண்டவர் தான் இந்த ஒசாமாவா
அல்லது உலக நீதிக்காகவும் நலத்திற்காகவும் தன்னை வருத்திக்கொண்டவரா இந்த ஒசாமா.
சென்னை மாநகரில் சுற்றித்திரியும் பொறுக்கிகளுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம். அவர்களிடம் பணம் இல்லை ஒசாமாவிடம் நிறைய பணம் இருக்கிறது அவ்வளவு தான்.
நாளை பின்ன இந்த சென்னை பொறுக்கிகளை கொன்றால் இப்படி தான் வரிந்துகட்டிக்கொண்டு பதிவர்கள் எழுதுவார்களா என்று பார்ப்போம்.
இவர்கள் பார்வை தான் என்ன என்று அன்றைக்கு வெளுக்கும்........இதில் மத அடையாளங்கள் வேறு. என்ன கொடுமை சரவணா..........
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
11 years ago

