Tuesday, November 22, 2016

மோடியின் இன அழிப்பின் முன்னோட்டம் இந்த கருப்பு பண அழிப்பு நடவடிக்கை

அது எப்படி ஒட்டு மொத்த பாசக மக்களும் இந்த ரூவா நோட்டு பிரச்சனையில் மாட்டாமல் போனர்கள்.

பிரச்சனையில் மாட்டியவர்கள் எல்லாம் சொன்ன செய்திகள் இவைகள் தாம்

1) தான் அன்றைகு சம்பாதித்த பணம் மாற்ற வேண்டும் இல்லை தான் சேர்த்து வைத்த பணம் மாற்ற வேண்டும்.

2) தன்னுடைய செலவுக்காக எடுத்து வைத்த பணம் மாற்ற வேண்டும் இல்லை தனக்கு இந்த தேவைக்கு இப்போது பணம் வேண்டும்

3) தனது வியாபாரத்திற்கு அடுத்த நாள் தேவைக்கு இது வேண்டும் இல்லையேல் நாளைய வியாபாரம் போகும் வருமானம் போகும் என்ற வைகைகள் மட்டுமே

இவைகள் தவிர மற்ற அனைத்து வகையனர் ஒருவரும் வங்கியின் வாசலுக்கு வரவில்லை S.V சேகரை போல்.

அப்போ பாசகவில் இருக்கும் அடி மட்ட தொண்டர் முதல் பிரதமர் வரை ஒருவரும் பணம் மாற்றவில்லை என்றதை அதன் விளம்பர தொடர்பாளர் S.V.சேகர் தெரிவித்துள்ளார்.

ஒருவர் சரி அல்லது ஒரு கூட்டம் சரி அது எப்படி ஒட்டு மொத்த கட்சியின் அடிமட்ட தொண்டன் வரையிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடியும்.

அறிவியலிலும் கணிதத்திலும் ஏற்றதாக(Ideal situation) என்று ஒரு சூழ்னிலையை சொல்லி அதில் இவை சாத்தியம் என்று சொல்வார்கள்.

ஆனால் அப்படி பட்ட சூழல் நிகழ்வில் சாத்தியம் இல்லை என்றது 8ஆம் வகுப்பு மாணவனுக்கு கூட தெளிவாக தெரிந்த ஒன்று.

உதாரணமாக சொல்வதென்றால் தன்னைவிட 4மடங்கு எடை கொண்டவனை தனது சுண்டு விரலால் தூக்கி எறிய முடியும் என்று அது வெற்றிடமாக(Vacuum) இருப்பின் என்று அறிவியல் சொல்கின்றது.

ஆனால் நிகழ் வாழ்க்கையில் இந்த சூழழை யாராவது சந்தித்ததுண்டா அல்லது சந்திக்க போவது தான் உண்டா.

ஆனால் இந்த சூழழை பாசக சந்தித்து இருக்கிறது, பிரதமர் வரை அடி மட்ட தொண்டன் வரை அவனது அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எந்த ஒரு மருத்துவ அவசரமும் இந்த 12 நாட்களில் எழவில்லை. பாவம் அவர்களுக்கு உறவுகளே இல்லை என்று வைத்து மன்னிப்போம்.

ஆனால் சிறு மற்றும் பெரு வியாபாரம் கூட பாதிக்கவில்லை என்று அல்லவா கூறுகிறார்கள். அதொடு மட்டுமா எந்த வித தரகும் எங்களுக்கு பங்கமாகவில்லை என்றல்லவா சொல்கிறார்கள்.

அப்போ பாசகவை சேர்ந்த வியாபாரிகளே இல்லை என்கிறார்களா இல்லை அவர்கள் ஒருவரும் பாதிக்கவில்லை என்கிறார்களா. இல்லை தொருக்கோடியில் பீடா விற்கும் நபர் எல்லாம் கடனட்டை மூலம் தான் வியாபாரம் செய்கிறார்கள் என்று நமக்கு காதில் பூ சுற்றுகிறார்களா.

அது எப்படியா இவர்கள் மட்டும் பாதிக்கப்படவே இல்லை........

ஊரில் வருவது சுனாமி என்றால் அதற்கு ஏழை பணக்காரகள் தெரியாது, வெள்ளம் என்றாலும் தெரியாது ஆனால் கலவரம் என்றால் கட்டாயம் தெரியும். குசராத்து கலவரத்தில் பாதித்த பாசகவினர்கள் பட்டியலிட சொல்லுங்கள் பார்க்கலாம்(அவர்களாக தீயிட்டு கொளுத்திய கோத்ராவை கொண்டு வந்து ஒப்பாரி வைப்பார்கள் நம்பாதீர்கள்).

S.V. சேகர் சொல்வதை போல் கணக்கில் இருக்கும் சொத்தே 30கோடி என்றாலும் நாம் எல்லாம் 2 , 500 ரூ தாளில் கடலையை கட்டி அடுத்தவருக்கு படம் காட்டி சாப்பிடுவோமா. இல்லை அவர்கள் தாம் செய்வார்களா, சாதாரண காகிதம் காலில் பட்டாலும் கண்களில் ஒற்றி கொள்ளும் கட்சியினை சேர்ந்தவர் அடவுகட்டி 1000 ரூவாய் தாளில் கடலை வைத்து உங்களை பகிடி செய்கிறார் என்றால் அடவுக்கு எவ்வளவு பணம் கொடுத்து இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

பாசகவின் குறி சிறு தொழிலை முற்றிலும் அழிப்பது என்றாகிவிட்ட நிலையில் ஒன்றும் இல்லாதவர்களை ஏன் பாடாய் படுத்துகிறாய் என்றால் எல்லையில் இராணுவ வீரன் சாகவில்லையா பட்டினி கிடக்கவில்லையா அப்படி இப்படி என்று எடுபிடிகளை வைத்து விளக்கபடம் வேறு.

அட முட்டாளே அந்த இராணு வீரர்களுக்கு எல்லாம் அதற்கு சம்பளம் கொடுக்கிறார்கள் வெறுமெனே தான் சம்பாத்தித்த பணத்தை மாற்ற வெட்டியாக ஒன்றும் அவன் வரிசையில் நிற்கவில்லை. தவிர நாட்டை காக்கவும் அதற்கான தொழிலில் உயிர் போகும் என்றது தெரிந்தே அந்த விளைவுக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும் என்று தான் அந்த வேலைக்கு செல்கிறார்கள். விரும்பி செல்வோர் சொற்ப எண்ணிக்கையே....

அவர்களது வேலையை நாட்டுமக்களின் சுமைகளோடு சம்பந்த படுத்தி பேச உங்களின் அறிஞர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

தவிர பாசகவினர்கள் சொல்கிறார்கள், நாட்டுக்காக உங்கள் தாய் இறந்தால் என்ன, தந்தை இறந்தால் என்ன, இல்லை மகன், மகள் இறந்தால் என்ன என்று, நாட்டுகாக இந்த இறப்பை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அழகாக புத்திமதி சொல்கிறார்கள். நானும் தெரியாமல் தான் கேட்கிறேன் அன்றைக்கு கோத்ராவில் இறந்தவர்களை பாசக இப்படியா பாவித்தது அதையே காரணம் காட்டி நாடு முழுவது கலவரம் வெடிக்கவில்லை.

அப்போ பாசக மக்கள் இறந்தால் அது சாவு மற்றவர்கள் இறந்தால் நாட்டுகாக பொறுத்துக்கொள்ள வேண்டும் அப்படி தானே S.V.சேகர்

வீட்டு மனை விற்பவனும் சிறு வியாபாரம் செய்வனுடன் தான் தகறாறு என்றால் அவனிடம் வாங்குபவனும் அவனுக்கு விற்பவனும் ஏனையா அல்லல் படவேண்டும்.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் தான் சம்பாதித்த பணத்தில் தனக்கு உரிமை இல்லை என்று சொல்லும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் தமிழர்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதும் அவர்களுக்கு உரிமையில்லை எப்போது வேண்டும் என்றாலும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். அப்படி செய்ததினால் தான் ஆயுத போராட்டத்திற்கு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.கிட்டதட்ட அதே நிலையை இன்றைக்கு பாரதம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

 நீங்கள் சம்பாதிக்கும் பணம் நேராக வங்கிக்கு தான் செல்ல வேண்டும், அதோடு சரி. ஆனால் அவைகளை நீ எடுக்கலாமா கூடாத என்று நாங்கள் சொன்னால் தான் எடுக்க வேண்டும். அப்படியானால் நான் எதற்கு வங்கியில் செல்லுத்த வேண்டும், ஏன் என்றால் நீ சம்பளமாக வாங்கிய பணம் இனிமேல் செல்லாது, அப்படி வேண்டும் என்றால் வங்கியில் போடு...இது இன அழைப்பின் துவக்கம் போல் தெரிகின்றது.

அடுத்தாக மோடி இப்படி சொல்வார் தயாராக இருந்து கொள்ளுங்கள் மக்களே

வங்கியில் கணக்கு துவங்க சொன்னோம் பேசாமல் இருந்தீர்கள் -- எங்களால் நீங்கள் இந்த முகவரியில் தான் இருக்கிறீர்கள் என்று உறுதிபடுத்த முடியவில்லை

ஆதார் அட்டைக்கு விரல் ரேககைகள் பதிய சொன்னோம் -- ஆனால் நீங்கள் பதியவில்லை, ஆகவே இவைகள் இரண்டும் இல்லாத மக்கள் எல்லாம் திவிரவாதிகள் என்று நாளை சுட்டுக்கொள்வார்கள் காசுமீரத்தில் சுடுவதை போல்.

S.V.சேகரின் பேச்சை நன்றாக கவனியுங்கள் அவர்கள் கவனமாக சொல்வது இதுதான் மாவோஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அடுத்து நடக்க இருக்கும் நிகழ்விகளுக்கு கோடிட்டு தன்னையும் அறியாமல் காட்டுகிறார்.....கவனியுங்கள்

சனவரியில் தெரியும் என்று சொன்னதன் அடிப்படை இதுதான், எப்படி கண்ணையா குமார் சிறையில் அடைக்கப்பாடானோ அதே பாணியில் இனி ஊர்கள் தோரும் சிறைகள் நிறப்பபடும், தேவையின் அடிப்படையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படுவர்.

பயம் தெளிந்து வீதியில் வந்து போராட துவங்கும் முன் பாசக தவிர நாட்டில் ஆளே இருக்கமாட்டார்கள்.

இது வெறும் கற்பனையல்ல இந்த பணத்தகராரில் ஒருவராவது நீதிமன்றம் செல்ல முடிந்ததா. இல்ல வீதிக்கு வந்து போராட முடிந்ததா. அந்த அளவிற்கு துல்லிய தாக்குதலாக இருக்கும்.

ஒன்று பாசகவின் உறுப்பினர்கள் ஆகுங்கள் இல்லை உயிரை மாய்த்துகொள்ள தயாராய் இருங்கள்.

நீங்கள் போனாவது பரவாயில்லை உங்களி கண் முன்னே உங்களின் பிள்ளைகளை அழித்து உங்களை பார்த்து நாட்டுகாக என்று சிங்கள அரசு செய்ததை போல் செய்து உங்களுக்கு கொஞ்சம் கூட நாட்டுபற்றே இல்லை என்று சொல்லி ஒரு 2000 ரூ தாளில் கடலை உருட்டி உண்டு காட்டுவார்கள், அனுபவிங்க மக்கா அனுபவிங்க.......

ஐயோ பாவம் இந்தியா........கடவுள் தான் காப்பாற்றனும்......

Tuesday, November 15, 2016

மோடி நடுதர வர்கத்திற்கு அடுத்து கொடுக்கப்போகும் அடி இது தான்

500, 1000 ரூபாய் தாள்களை செல்லவே செல்லாது என்று அறிவித்தால் இந்தியாவில் ஊழல் ஒழிந்து நாடு ஒரே இரவில் மறுபிறப்பு எடுத்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

கருப்பு பணம், பணமாக ஏழைகளின் கையில் இருந்தவைகளை எல்லம் புனிதப்படுத்தியாச்சு. மிச்சம் என்ன இருக்கும் ஏழைகளிடம் என்று கணக்கு பார்த்ததில் மோடியின் ஆலோசகர்கள் சொன்ன ஆலோசனை இது.

சரி கருப்பு பணத்தை எல்லாம் ஏழைகளிடம் இருந்து பிடிங்கியாச்சு, அப்படி அடித்து பிடித்து பிடிங்கியதில் இது வரை வந்தது வெறும் 3 இலட்ச்சம் கோடி ரூபாய்க்கள் மட்டுமே வங்கிகளில் வந்தாக சக்திகாந்து தாசு குறிப்பிடுகிறார். அப்படியானால் மிச்ச பணம் எல்லாம் எங்கே என்று கணக்கு போடுகிறார்கள்.

இந்தியாவின் மொத்த பணம் சுமார் 6,3800,000 கோடிகள். அதில் 30 இலட்சம் கோடிகள் இது வரையில் வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ளதாக அறிவித்து இருக்கிறார்கள் . ஆக இது வரையில் 4.7% கருப்பு பணம் தான் வெளியில் வந்து இருக்கிறது.

மீதம் இருக்கும் 95% சதவிகிதம் பணம் எங்கே யாரிடம் இருக்கிறது என்று அலோசித்தார்கள்.

அப்போது தான் தெரிந்தது மீதம் இருக்கும் பணம் எல்லாம் நிலம், வீடு, வீட்டு மனையாக, தங்கம் மற்றும் தங்க நகைகளாக மக்கள் பதுக்கி வைத்துள்ளார்கள்.

ஆகவே விரைவில் உங்களின் நிலம் பதிந்த பத்திரம் செல்லாது என்று அறிவித்து 2 நாட்களுக்குள் புதிய நில பத்திரங்களை பதிய வேண்டும் என்றும் அப்படி பதியும் போது ஆதார் அட்டை இல்லாதோரின் நிலம், மற்றும் அனைத்து சொத்துகளையும் அரசாங்க சொத்தாக எடுத்துக்கொண்டு கருப்பு பண வரவில் வைக்கலாம் என்று அறிவிறுத்தபட்டுள்ளது.

அதை தொடர்ந்து மக்களிடம் இருக்கும் நகை மற்றும் தங்கங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதற்கு ஈடானா தங்க பத்திரங்களை மக்கள் வாங்கிட வேண்டும் என்றும் அறிப்பார்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு யார் யாரிடன் தங்கம் இருக்கிறர்து என்று பார்த்தால் கருப்பு பணம் என்று பார்ப்பவர்கள் தகவல் கொடுக்க, கைத்து செய்து சிறையில் அடைத்து கருப்பு பணத்தை மீட்டு மீதம் இருக்கும் 95% கருப்பு பணத்தையும் மீட்டு எடுப்போம் என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

நிலப்பதிவு மற்றும் தங்க ஒப்படைப்பு நிலவரங்களை அடுத்து அப்படியும் 95% சதவிகித நீடிப்பு நீடித்தால் வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு சாமான்கள், கிழிந்த பாய்களையும் ஒப்படைத்து விடும்படி அரசு ஆனை அறிவித்து இன்றைக்கு தான் ஏழைமக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று அமெரிக்காவில் சென்று உரையாற்றுவார் மோடி.

இந்த அரசு தான் வந்தாள வேண்டும் என்று தவம் கிடந்த மக்களே வீட்டு மற்றும் சொத்து பத்திரத்திற்கு ஈடான முத்திரை தாள்களை இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் அனைத்தும் பாழாய் போகும், பிறகு பாசக கைக்கூலிகள் நாட்டு நலனுக்கு உங்கள் சொத்தை விட்டு கொடுத்துவிட்டு தெருவில் தூங்கினால் என்ன கேடு வந்துவிட போகிறது என்று செய்தி தாயாரித்து வெளியிடுவார்கள்.

Wednesday, November 9, 2016

துக்ளக் மோடி-அதாணியும் அம்பாணியுமா மூட்டைய தூக்கிக்கிட்டு பணம் மாத்த போறாங்க

அவரசத்துக்கு ஆகும்னு ஒன்னு இரண்டா சேர்த்து வைத்திருப்பவனும், 1 இலட்ச்ச ரூபாய் முதல் 10 இலட்ச ரூபாய் வரையிலும் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளும் தான் இந்த சிக்கலில் மாட்டி தவிக்க போகிறார்கள்.

மாத சம்பளக்காரர்களும் பெரும் பண முதளைகளும் வெறு கணக்கு தாள்களில் அல்லவா பணத்தை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எப்போது பணம் வேண்டுமோ அப்போது எடுக்கும் போது அன்றைக்கு அடித்த தாளாக அல்லவா கொடுப்பார்கள்.

இந்த அடித்தட்டு மக்களுக்கு நன்மை புரியத்தான் துக்ளக் மோடி பிரதமராக வரவேண்டும் என்று பாசகவும் அதன் அடி பொடிகளும் நாங்கள் வந்தான் அனைவருக்கும் வேலை வாங்கித்தருவோம் என்று ஏமாற்றி வாக்கை அள்ளினார்கள் (தமிழ் நாட்டின் நிலை வேறு).

இந்த அடித்தட்டு மக்களை நோகாடிப்பதிலும் சாகடிப்பதிலும் அப்படி ஒரு மகிழ்ச்சி பாசகவிற்கு.

கிராமத்து சுப்பன்,குப்பன் வரையில் வண்டியில் சென்றார்கள், இன்றைக்கு பெட்ரோல் வானத்திற்கு பறந்தது.

அனைத்து விடுகளுக்கும் சமையல் வாயு இணைப்பை வாங்கினார்கள் - இன்றைக்கு வாங்க முடியாத அளவிற்கு விலையை உயர்த்தியாச்சு.

சாலையிலும் இரயிலிலும் அடித்தட்டு மக்கள் பயணித்தார்கள், இன்றைக்கு 10% மட்டும் வாங்கக்கூடிய விலையில் மற்றவை எல்லாம் பணம்படைத்த மக்களுக்கு மட்டுமே.

BSNLல் சேவை பெற்று அனைவரும் செல்லும் இணையமும் பயன்படுத்தினார்கள். இன்றைக்கு அனேக இடங்களில் இந்த சேவையை கிடைக்காத வண்ணம் செய்தாச்சு. மக்கள் அதாணிக்கும் அம்பாணிக்கும் கொட்டிக் கொடுக்கபட்டுவிட்டார்கள்.
.
.
.
.
.

அனேகமாக இன்னும் கொஞ்ச காலத்தில், சுமார் 40 வருடங்களுக்கு முன் வெளியூர் போவதாக இருந்தால் மாட்டு வண்டியை பூட்டி, கட்டு சோற்கட்டி செல்வது போல் அடி தட்டு மக்களை காவடி எடுக்க வைத்துவிடுவார்கள் போலும்.

ஏன்டா இந்த நிலைமை என்று கேட்டீர்கள் என்றால் பல் இருப்பவன் பட்டாணி சாப்பிடுகிறான் என்று எகத்தாளம் பேசுவார்கள்.

பாசகவிற்கு ஓட்டு போடாதே என்று அன்றே சொன்னோம், அன்றைக்கு பாலாறும் தேனாறும் அல்லவா பாயப்போகிறது என்று சொன்னர்கள். எங்களை நம்பாமல் அவர்களை நம்பி இப்படி விட்டில் பூச்சாய் போனீர்களே, உங்களுக்கு இதும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

அடுத்த தேர்தலிலும் இந்த துக்ளகையே தேர்ந்து எடுங்கள் இன்னும் நிறைய உங்களிடம் இருந்து பிடுங்கவேண்டி இருக்கிறது அந்த வகிரம் பிடித்த கட்சியினருக்கும் துக்ளக்கிற்கும்.

ஆனாலும் ஒரு இந்து ஆட்சியரை பார்த்து அவரை போல் நடந்துக்கொண்டு இருக்கலாம், இந்து மதம் என்று சொல்வது எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் போலும்............

Tuesday, November 1, 2016

PINK - இந்திப்பட விமர்சனம்

சட்டங்களும், காவல்துறையும் பணமும் பலமும் உள்ளவரிடம் தஞ்சம் புகும் என்ற வள்ளுவனின் வாக்கை அழகாக எடுத்துகாட்டும் படம்.

அடுத்தவர் வீட்டு பெண்கள் என்றால் அவர்களுக்கு கிள்ளு கீரை என்று அழக்காக காட்டிய படம் இது.

தமிழில் விதி என்று ஒரு படம் பட்டி தொட்டியெல்லாம் பெண்களை பற்றிய கௌரவம் தொகுத்து வழங்கிய படம். அந்த காலத்தில் இந்த படத்தின் வசனம் அனேகமாக எல்லோரும் ஒரு பதிவு வைத்து இருப்பார்கள்.

படம் பதட்டத்தில் துவங்கி அமைதியிலும் நிறைவிலும் நிறைவு பெற்றது அழகு. எங்கே படத்தின் முடிவு அதிகம் பேசப்படவேண்டும் என்று நீதி தலையை தொங்கப்போட்டுக்கொள்ளுமோ என்ற பயம் கடைசி வரையில் இருந்தது.

ஒரு வழக்கு எப்படி நடக்குமோ அப்படி அழக்காக காட்டி இருக்கிறார்கள், வழக்கின் காலம் எவ்வளவு என்று அமிதாப்பின் மனைவி மறைவையும் வில்லனின் வடுக்கள் காயத்தில் இருந்து தழும்பில் முடியும் வரை என்று சின்ன சின்ன நுணுக்கங்களையும் ஆராய்ந்து கையாண்டு இருக்கிறார்கள்.

எந்த ஒரு வழக்கிலும் பிரதிவாதியை உணர்ச்சி வசப்படுத்தி முட்டாளாக்கும் போக்கு என்றைக்கு தான் ஒரு முடிவுக்கு வருமோ தெரியவில்லை. இது அமெரிக்க நீதிமன்றங்களுக்கும் பொருந்தும்.

இடைவேளை வரை படம் பயணிப்பதே தெரியவில்லை. அதற்கு பிறகு படம் முடிவுக்கு வந்து நிற்கும் போது தான் தெரிகின்றது. நல்ல படம். தில்லி மக்களுக்கு இந்த படம் தேவைதான்.