Monday, November 23, 2015

கோவன் கைதுக்கு உண்மையான காரணம் இது தான்

கோவன் கைத்துக்கு இது அது என்று ஏகப்பட்ட அலசல்கள் செய்துவிட்டார்கள். ஒருவராது உண்மையான காரணத்தை சொல்வார்கள் என்று பார்த்தால் ஒருவரும் சொல்லவில்லை. உண்மையான காரணம் இது தான்.

தமிழகத்தின் அதிமுக முதல்வராக இருந்த திரு பன்னீர் செல்வத்தை விட்டு விட்டு செயலலிதாவை சொல்லி கிண்டல் எப்படி என்று தான் இந்த கைது அது இது எல்லாம். மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

அதை சொல்வதை விட்டு விட்டு அதிமுக அது இது என்று அற்ப காரணமாக சொல்லிக்கொண்டு இருக்கிறது.

அதிமுக தைரியமாக சொல்லுங்கள் பன்னீரை சொல்லாமல் செயாவை திரும்ப திரும்ப முதல்வர் அவர் இவர் என்று சொல்வது பன்னீருக்கும் அவரது அடி பொடிகளுக்கும் பிடிக்காமல் தான் அதிகாரிகளை ஏவிவிட்டு இப்படி எல்லாம் செய்ய தூண்டினோம் என்று சொல்லுங்கள்.......

Saturday, November 21, 2015

தமிழகத்தின் மழை பாதிப்புக்கு பிரதமர் ஆறுதலோ விசாரிப்போ இது வரையில் இல்லையே ஏன்

பிரதமரின் முதலாளிகளின் சொத்துகளோ அல்லது வியாபாரமோ தமிழக மழையில்னால் பாதிக்கபடவில்லை. ஒரு வேளை அப்படி அவர்களின் சொத்தோ வியாபாரமோ பாதிக்கப்பட்டு இருந்தால் இன்னேரம் மோடி கையில் ஒரு உண்டியலை எடுத்துக்கொண்டு அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரை கையேந்தி வந்து அவரின் முதலாளிகளின் காலில் கொட்டி ஆசிர்வாதம் வாங்கி செல்பி படம் பிடித்து வெளியிட்டு இருப்பார்.

முன்னாளில் வடக்கே வெள்ளம் பாதித்த போது எல்லாம் தமிழகத்தில் நிதி திரட்டி அந்த மக்களுக்கு தமிழகம் அனுப்பி இருக்கிறது. ஆனால் இத்தனை நாட்கள் கடந்தும் உதவி பெற்ற மாநிலங்கள் கூட இது வரையில் வாய்திறக்காமல் இருப்பது சோகமே....

பிரதமரின் முதலாளிகளின் தற்புழுதைய ஆனையின் படி மலேசியாவில் உண்டியல் குலுக்க சென்ற பிரதமர் நாடு திரும்பிய பிறகாவது வாய்திறகிறாரா என்று பார்ப்போம்.

Tuesday, November 17, 2015

தீவிரவாதம் தீர்க முடியாத ஒன்றா - ஏன் உலக நாடுகள் மௌனிக்கின்றது

முதலில் பிரான்சில் நடந்த தாக்குதலில் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு இரங்கலை பதிவு செய்வோம்.

உலகில் இப்படி அதிக அளவுக்கு சேதம் விளைவிக்கும் தாக்குதலில் இறங்கும் தீவிரவாத இயக்கங்கள் என்ன வானில் இருந்த ஆயுதங்களை பெறுகிறார்கள். இல்லை எல்லா நாட்டிலும் காய்கறிகள் கிடைப்பது போல் கிலோ இவ்வளவு என்று விக்கிறார்கள் போல் ஒரு தோற்றத்தை உலக நாடுகள் ஏற்படுத்துவது தான் சோகம்.

இந்த அனைத்து தாக்குதலிலும் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் எந்த நாட்டு தயாரிப்பு என்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் கூட அந்த ஆயுதங்கள் எப்படி இவர்களுக்கு கிடைக்கின்றது என்று கண்டு அந்த வழிகளை வேர் அறுப்பதை விடுத்து விட்டு. சகிப்புத்தண்மை அது இது என்று புலம்புவதும், இயக்கங்களின் முகாம்களின் மோது குண்டு வீசுவது என்று சாதாரண பொதுமக்களை போல் நடந்து கொள்கின்றது.

யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள், யார் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று கண்டு அறிந்து தாக்கி இருந்தால் இன்றைக்கு தீவிரவாதம் இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து இருக்காது.

இவைகளை செய்யவில்லை என்றாலும் செய்ய வேண்டும் என்ற அறைகூவலாவது விட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா முதல் அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தின் வேரை அறுக்காமல் சும்ம இலையையும் கிளையையும் கிள்ளிவிட்டு சாதித்து விட்டதாக கூவுகின்றது.

இந்த அறிவுகெட்ட செயலை இன்னமும் எத்தனை காலத்திற்கு உலக நாடுகள் மேற்கொள்ள போகின்றது. யார் யார் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அவைகளையும் யார் எல்லாம் ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று பார்த்து அவர்களது ஆயுதங்களையும் பிடிக்கட்டும் முடக்கட்டும், பிறகு பாருங்கள் இந்த தீவிரவாதிகள் பழையபடி தெருவில் கலவரம் செய்வதோடு நிறுத்திகொள்வார்கள்.

செய்வார்களா சித்திப்பார்களா பார்க்கலாம்......

Wednesday, November 11, 2015

பிகாரின் தோல்விக்கு பாசக எந்த அப்பாவி மக்களை இரயிலில் வைத்து கொளுத்த போகின்றதோ....

பிகாரின் தோல்வியை அலச பாசகவின் உயர் மட்ட குழு கூடுகின்றது என்ற செய்தியை பார்க்கும் போது மேலே சொன்னது தான் தோன்றுகின்றது.

பாசகவை பொருத்த வரை நாட்டுப்பற்று அவர்களின் கை கால்கள் போல் அவர்களுடன் மட்டும் பிறந்தாக நாடு முழுதும் சொல்லி நம்ப வைத்தார்கள். அந்த தோற்றத்தில் என்று எல்லாம் சந்தேகம் வருகின்றதோ அப்போது எல்லாம் அப்பாவி மக்கள் வாழும் இடங்களிலில் பாசகவே குண்டு வைத்து வெடித்துவிட்டு நாட்டின் அச்சுருரத்தலுக்கு எதிராக போராட மற்ற மக்களை அழைக்கும் புனித கட்சி அல்லவா பாசக.

சென்ற பாசக ஆட்சியின் போது அத்வானி சென்ற அனைத்து இடங்களிலும் அவர் சென்ற பிறகு குண்டுகள் வெடித்ததை மக்கள் நினைவு கொள்ள வேண்டும், தமிழகத்திலும் கூடதான் குண்டுகள் வெடித்தது.

இவைகள் அனைத்திற்கும் உச்சமாக கோத்ராவில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டு இருந்த அப்பாவி மக்களை இவர்களே கொளுத்திவிட்டு பாக்கிட்தானத்தின் கைகூலிகள் செய்தார்கள் என்று சொல்லி குசராத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்தவர்கள் தாம் இந்த பாசக.

இன்றைக்கும் அந்த தேவை மறுபடியும் வந்து இருப்பதாக தான் தெரிகின்றது. பாவம் இந்த முறை எந்த மக்களை எரித்து கொன்று விட்டு, மாட்டுகறி, பாக்கிட்தானம், கிருத்துவம் என்று சொல்லி அடுத்த தேர்தலுக்கு மக்களை தயார்படுத்த போகிறார்களோ பாசகவினர்..................

Tuesday, November 10, 2015

அன்னையின் நினைவாக - ஸ்ரீவித்யா 9ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

அம்மா உன் நினைவாக இன்றும் என்றும், இன்றைகும் எனது பெயரை பெண் குரல் அழைக்கையில் அது நீயோ என்று திரும்பி பார்கின்றேன்.