Friday, May 15, 2015

உத்தமவில்லன் - Funny People லும் - கமலுக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை

கமலகாசனின் படங்களை பார்க்கும் போது எல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே என்று இருக்கும். இருக்காது பின்ன அழகா கதை எழுதி, திரைகதை அமைச்சு அத பிறகு படமா எடுத்து வைச்சா அழகா அதை அப்படியே தமிழுக்கு மாற்றி மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு இந்திய/தமிழக மசாலாவை துவினா வருது வித்தியாசமான தமிழ்படம்.

இதோ அந்த வரிசையில் இப்போ உத்தமவில்லன்........

கதையிலும் திரைகதையிலும் ஏன் இவ்வளவு குழப்பம் என்று திகைப்போர்கள் ஆங்கில படத்தை பார்த்தால் தெரியும் ஏன் என்று. ஆங்கிலத்திலும் இந்த படத்தை எப்படி முடிப்பது என்று யோசித்து யோசித்து முடித்தது போல் இருக்கும்.

ஆங்கில படம் இப்படி பயணிக்கிறது, ஒரு பெரிய மேடை விகடன், பார்ப்போர்கள் சிரிக்க சிரிக்க பேசுபவன். அப்படி பட்ட அந்த நிகழ்ச்சிகளுக்கு தனி விமானம் மூலம் சென்று நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டு வீடு திரும்புவன்.

அப்படி ஒரு நாள் தனது மருத்துவரை பார்த்துவரும் பொருட்டு செல்ல அவரோ உங்களுக்கு இரத்த புற்று நோய் இருக்கிறது. சோதனை மருந்துக்கள் வந்து இருக்கிறது நம்பிக்கையுடன் இருங்கள் என்று சொல்லி அனுப்புகிறார்கள்.

அந்த செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் வெளியில் வருபனை பார்த்ததும் அவனுடன் சிரித்துக்கொண்டு படம் எடுக்கும் இரசிகர்களிடம் சிரித்துக்கொண்டு நிற்கும் பரிதாப காட்சிகளை மகனிடம் கமல் சொல்லும் இடமாக மாற்றி அமைத்துக்கொண்டார்.

பிறகு தான் பேசும் மேடைகளில் பேச சிரிப்புகளை எழுதிக்கொடுக்கும் படி இரு இளையவரை பணிப்பார். அவனோ அவனது நண்பனிடம் சொல்லாமல் தான் மட்டுமே நாயகனுடன் செல்வான், பின்னாளில் ஏன் சொல்லவில்லை என்று வாக்குவாதம் வரும். அதை அப்படியே தன் காதலியிடம் கொடுக்காத கடிதமாக மாற்றிக்கொண்டுவிட்டார்.

இவனை தேடி எப்பவும் பெண்கள் அவனுடன் உல்லாசமாக இருக்க வருவார்கள் உங்களு மட்டும் எப்படி இவுங்க எல்லாம் கிடைக்கிறாங்க என்று சொல்லும் காட்சிகளை எல்லாம் ஆண்ரியாவை வைத்து பூர்த்தி செய்துக்கொண்டார்.

ஆங்கிலத்திலோ ஆண்டிரியாவின் பாத்திரம் சிரிப்பு எழுதிக்கொடுப்பவனுக்கு சோடியாக வருவார், அவருக்கோ பெண்களை பார்த்தாலே கூச்சம் அப்படி இருக்க அவனது அறைத்தோழன் அவளின் விரகதாபத்தை பயன்படுத்தி கொள்வான். இதை அப்படியே ஆண்டிரியாவின் கருவிற்கு யார்காரணம் என்று சொல்வார்கள்.

ஒரு கட்டத்தில் நேய் இன்னமும் வேகமாக செல்ல அதை அவனிடம் மருத்துவர்கள் சொல்ல அதை கேட்ட சிரிப்பு எழுத்தாளம் அழுத்து ஏன் இதை எல்லாம் என்கிட்ட மட்டும் சொல்லுகிறாய் எப்போ உன்னை சேர்ந்தவர்களிடம் சொல்ல போகிறாய் என்று கேட்பதை பாலசந்தை விட்டு கேட்கவைத்து விட்டார்.

அப்படி தான் கொஞ்ச நாளில் சாக இருப்பதாக தனக்கு வேண்டியவர்களுக்கு சொல்லும் வரிசையில் முன்னாள் மனைவிக்கும் சொல்ல. அவளும் வீடு தேடி வந்து பார்த்து அழுகிறாள்.

இவனை விட்டு பிரிந்ததற்கு காரணம் வேறு பெண்களுடன் இவன் உறவு வைத்துக்கொண்டது தான் காரணம் என்று சொல்லி இப்போ கட்டி இருப்பவனும் அப்படி தான் என்று புலம்ப, மிகவும் நெகிழ்ச்சியாக முடியும் காட்சிகளை தமிழில் நெஞ்சு வலிவரை கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் சாவை பற்றி விரக்தியாக அதிகம் மேடைகளில் பேசும் சந்தர்பத்தில் அவனது உடலில் நேய்க்கான அறிகுறிகள் மறைந்து குணமாதாக சொல்கிறார்கள், அதற்கு பிறகு ஆங்கிலபடத்தில் நடக்கும் கூத்துகளை தமிழில் முன்னாள் காதலி, அவளின் மகள் என்று ஆத்து ஆத்து என்று ஆற்றி இருக்கிறார்கள் தமிழில்.

ஆங்கிலத்தில் ஐரா ஒரு பாத்திரம் அதை தமிழில் செட்டியாராகவும், பாலச்சந்தராகவும் உடைத்து கொடுத்துவிட்டார்.

ஆங்கிலத்தில் மேடையில் விகடம் பேசுபவன் தமிழில் தெய்யம் கலைஞாக கட்டியம் பேசுகிறான். ஆங்கிலத்தில் வரும் சிரிப்பு தமிழில் மொக்கையாக இருக்கிறது.........

கமலுக்கு ஏன் இந்த வேலை விட்டு விட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே, இதற்கு முன்னால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்க செய்யப்பட்ட படங்கள் எல்லாம் சுவடே தெரியாமல் இருக்கும் கண்டுபிடிப்பது அரிது உதாரணமாக Legends of the Fall 1994 படத்தை தேவர் மகன் என்று எழுதி எடுத்து இருந்தார் (நாவலாக இருந்த கதையை படமாக எடுத்து ஆசுகர் விருது வாங்கிய படம்), 1992ல் இதே கதையை தமிழில் அனைத்து அழகாக எடுத்து இருப்பார்.

கௌதமியின் சிகை அலங்காரம் முதல் வடிவேலு பாத்திரங்கள் வரை அவ்வளவும் அந்த படத்தில் இருக்கும். பாத்திரத்திற்கு பாத்திரம், வசனத்திற்கு வசனம் ஒற்றுமை இருந்தாலும் இரண்டும் இரண்டு படம் போல் அவ்வளவு தெளிவாக இருக்கும்.

இந்த படத்தை பாருங்கள் மொக்கையா போச்சு, Malcolm X (1992)  ஒரு படம் அதை தமிழிலே எடுகிறேன்னு கேராம்னு தமிழ எடுத்தார் ஊத்திகிச்சு அது போல ஆயிடுச்சி இந்த படமும்...........

Thursday, May 14, 2015

நீதிமன்றம் என்றால் மக்கள் என்ன நினைகிறார்கள் - பாவம் புரியாதவர்கள்

படங்களில், கதைகளில் காப்பியங்களில், வரலாறு போன்றவைகளில் வருவது போல் தவறு நடந்ததா இல்லையா என்று கண்டுபிடித்தே தீர்பது தான் நீதிமன்றத்தின் வேலை என்று அப்பாவி தனமாக நம்புகிறார்கள் என்று சொத்து குவிப்பு வழக்கு தீர்பை விமர்சிக்கும் விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

நல்லவர்கள் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள், அவர்களுக்கு அந்த தேவையும் இருக்காது. பிறகு யாருக்கு தான் நீதிமன்றம் தேவைபடுகிறது, அடாவடியும் அநியாயம் செய்பவர்கள் தான் நீதிமன்றத்தை நாடுவார்கள்.

அடுத்தவரின் சொத்தை அபகரித்துக்கொண்டு பொய்யான ஆவணங்களை கொண்டு காட்டி இது என்னுடையது அவன் அநியாயமாக கேட்கிறான் என்று சொல்வார்கள்.

இந்த வகை வழக்குகள் தான் 98% வரை, மற்ற 2% மக்கள் பொருக்க முடியாமல் நீதிமன்றம் போவார்கள். அப்படி செல்பவரை கீழ் மன்றத்தில் இருந்து உச்ச மன்றம் வரை அழைகழித்து இனி எதுக்கும் நீதிமன்ற வாசல் ஏற மாட்டேன் என்று திரும்பும் படி செய்வார்கள் அடாவடி காரர்கள்.

அப்போ நீதிமன்றத்தின் வேலை தான் என்ன என்று உங்களுக்கு தோன்றும், வாதி பிரதிவாதியின் வாதங்களையும் சாட்சியங்களையும் வைத்து முன்னுதாரணம் இருந்தால் அவைகளையும் கணக்கில் கொண்டு யார் சொல்வது சரி என்று முடிவை அறிவித்து செயல்படுத்தும் படி ஆணையிடுவது மட்டுமே நீதிமன்றத்தின் வேலை.

நல்லவர்கள் சாட்சி இல்லாமல் வந்தால் அவர்களது பாடு அதோகதி தான். கெட்டவர்களுக்கு எப்படி நீதிமன்றதில் வெற்றிகொள்ள வேண்டும் என்று நன்றாக தெரியும்.

ஆகையால் எல்லா வகையான பொய்சாட்சிகளையும் பொய் ஆவணங்களையும் கைவசம் கொண்டு வந்து இருப்பார்கள். அப்படி நல்லவரின் பால் அக்கரை கொண்டு நீதிமன்றம் வந்தார்களேயானால் இந்த கொடியவர்கள் நீதிமன்ற வாசலிலே அவர்களை மடக்கி அப்படியே திரும்பி போக மிரட்டுவார்கள், இது அமெரிக்காவிலேயே நடக்கும் உண்மை நிகழ்வுகள், இந்தியாவில் எம்மாதிரம். அதுவும் அமெரிக்காவில் பொம்பள கேடிகள் தான் இதில் கைதேர்ந்தவர்கள்.

அப்படியே நல்லவர்கள் தரப்பில் எல்லா சாட்சிகளையும் கொண்டு போனாலும் நீதிமன்றத்தில் நீதியரசருக்கு வழங்கபட்டு இருக்கும் வானலாவிய அதிகாரத்தில் Court Ruled என்று சொன்னால் அவ்வளவு தான் எதுவும் பேசுவதற்கு இல்லை.

ஒரு முறை நீதியரசர் Court Ruled என்று சொல்லிவிட்டால் பிறகு அவரால் கூட அதை மாற்ற முடியாது. மேல் மன்றத்துக்கு சென்று முறையிடனும் அப்படியே சென்றாலும் அவரும் இவர் சொல்வதை உறுதி செய்வாரே ஒழிய மாற்ற மாட்டார்கள். ஒரு வேளை உங்களின் பக்கம் வாதாட ஒரு நல்ல வக்கீல் கிடைத்தார் என்றால், எதிர் தரப்பு சாட்சிகளை உடைத்து எடுக்கிறார்கள் என்றால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதையும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. 3 அல்லது 4 மாதங்கள் கழித்து அந்த வழக்கு தொடர்கிறது என்று வைத்துக்கொண்டால் முன்னே அக்கரையா கேட்ட அதே நீதிமான் அன்றைக்கு என்ன கடுப்பில் இருக்கிறாரோ அதே வேகத்தில் போட்டு தாக்குவார்.

மிக சிறந்த நீதிமான் என்று எல்லோராலும் போற்றப்படும் ஒரு நீதிமான் இப்படி தான் நடந்துக்கொண்டார், அதை அவரே சொல்லவும் செய்தார், பொதுவாக இப்படி எல்லாம் செய்பவன் இல்லை நான் இருந்தும் இந்த வழக்கில் இப்படி செய்ய வேண்டி இருக்கிறது என்று  குறிப்பிட்டே எல்லா அநியாயத்தையும் தங்கு தடையில்லாமல் செய்த்தார்.

அது தான் நீதிமன்றம், கிட்டதட்ட மைசூர் போன்டா போல்.....................

Tuesday, May 12, 2015

நீதி என்றால் என்ன என்று உலகுக்கு காட்டிய மூத்த குடியின் தற்பொழுதிய நிலை - கைப்பிள்ளை

வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் கேட்கிறார்கள், நீதிபதிகளுக்கு கூட்டல் கணக்கு கூடவா தெரியாது என்று கடுபேத்துகிறார்கள் யுவர் ஆனர். தீர்பின் நகலில் இருந்து எடுத்து கட்டம் கட்டி காட்டி விமர்சனம் செய்கிறார்கள் யுவர் ஆனர், வெளியில் தலை காட்டமுடியவில்லை யுவர் ஆனர். சரி தமிழகத்தை தான் கிண்டல் செய்வார்கள் என்று பார்த்தால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கேலி பேசுகிறார்கள் யுவர் ஆனர்.

வடக்கில் ஒரு நீதிபதி அப்துல் கலாம் குடியரது தலைவராக இருக்கும் போதே அவருக்கு பிடியாணை வழங்கியதை எல்லாம் ஞாபக படுத்தி சிரிக்கிறார்கள் யுவர் ஆனர்.

செயாவைவிடுங்கள் யுவர் ஆனர் அவர் இந்த நீதிமன்றம் இல்லை உலக நீதிமன்றம் சென்றால் கூட எல்லோரையும் விலைக்கு வாங்கும் வலிமையும் வல்லமையும் அவரிடம் இருக்கிறது அது உலகம் அறிந்த உணமை.

மறுபடியும் திரும்ப திரும்ப அண்ணா துறை சொன்னது தான் ஞாபகத்து வருகிறது யுவர் ஆனர், சட்டம் ஒரு இருட்டு அறை, அதில் வக்கிலின் வாதம் ஒரு விளக்கு அது ஏழைக்கு எட்டாத விளக்கு.

ஒரு வேளை அண்ணா இதை எல்லாம் பார்க்க நேர்ந்து இருந்தால் இப்படி சொல்லி இருப்பார், சட்டம் ஒரு இருட்டு அறை அதில் நீதி என்பது ஒரு விளக்கு அது ஏழைகளுக்கு என்றுமே எட்டாத விளக்கு என்று..........

இந்தியா வல்லரசு ஆவது உறுதி, 2020 நாம் தான் உலகை ஆளப்போகின்றோம், மற்ற நாடுகள் எல்லாம் நம்மிடம் பாடம் படிக்க வர போகின்றது............

செயா நாட்டின் நிலைமையையும், நிகழ்கால யதார்த்தையும் அழகாக படம் பிடித்து காட்டி வருகிறார். 2000ல் இருந்து இன்று வரை இவரிடம் சிக்கி சின்னா பின்னமாகாத நீதிமான்கள் இல்லை.

நீதியரசர் தினகரில் இருந்து இன்று நீதியரசர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து வரை பிழைப்பு சிரிப்பாய் சிரிக்கின்றது. இதை எல்லாம் பார்க்கும் போது புள்ளியியல் துறையில் ஒரு சிரிப்பு சொல்வது ஞாபகத்து வருகிறது.

ஒரு மனிதன் கொதிக்கும் நீரில் ஒரு காலும் குளிர்ந்த நீரில் மறு காலையிம் வைத்துகொண்டு நின்றால் அவனது சராசரி நிலைமை சீராக உள்ளது என்று சொல்லி சிரிப்பாகள் அது போல் உள்ளது இந்திய நீதித்துறையின் தீர்புகள், உங்க கடமை உணர்ச்சி எங்களை எல்லாம் உணர்சி பொங்க வைக்கிறது. எங்களுக்கு எல்லாம் இவங்க செட்டாக மாட்டாங்க ஊர்பக்கம் போய் எதாவது கனிமொழி, தேன்மொழின்னு தேட வேண்டியது தான் போல.................

அடுத்ததாக கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்க இருக்கும் வழக்குகள்

1) குசராத்து இன கலவரம் - ஒரு திட்டமிட்ட பரப்புரை
2) தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கு - அருகில் இருந்த மக்களை கணகில் எடுத்ததில் 3 மாணவிகள் 1/4 விழுக்காடுக்கும் குறைவே, ஆகவே குற்றமாகாது.
3) அண்ணல் காந்தி கொலை வழக்கு - கோட்சே துப்பாக்கி சுட பழகும் போது காந்தி குறுக்கே பாய்ந்துவிட்டார்
4) அன்னை இந்திரா படு கொலை - காவலர்கள் காலை நேர பயிற்சியில் இருக்கும் போது முன் அறிவிப்பு இல்லாமல் இந்திரா அந்த பக்கம் வந்தது தவறு
5) தில்லி நிர்பயா கொலை வழக்கு - அந்த நேரத்தில் தனியார் பேருந்தில் நிர்பயா பயணித்தி இருக்க வேண்டியது இல்லை, பாதுகாப்பாக ஆட்டோவில் சென்று இருக்க வெண்டும்.
6) பாபர் மசூதி இடிப்பு வழக்கு - நாட்டில் இருக்கும் இது போல் பழையகால மசூதிகள் எல்லாம் பாழடைந்துள்ளது, இடிக்கவில்லை என்றால் கொஞ்ச நாளில் அது தானாக விழுந்து இருக்கும்.
7) இலங்கை போர் குற்ற வழக்கு - இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிக்காக சுட்டதில் மாண்ட 10 லட்சம் மக்களும் அந்த இடங்களுக்கு சுடும் போதும் குண்டு வீசும் போது வந்திருக்க கூடாது.

இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே போவதால் இதோடு நிறுத்திக்கொள்வோம்.