Thursday, October 23, 2014

அன்னையின் நினைவாக







எங்கு இருந்தாலும் உன்னையும் நான் மறப்பதற்கு இல்லை, நீயும் என்னை மறப்பதற்கும் இல்லை. நீ இன்று என்னோடு இல்லை நானும் உன்னோடு இல்லை. நீ இல்லாத நினைவும் என்னோடு இல்லை. எங்கு இருந்து நீ வாழ்த்துகிறாயோ தெரியாது ஆனால் என்ன என்று வாழ்த்துவாய் என்று எனக்கு நன்றாக தெரியும் என்னை பெற்றவளே. அமைதியாய் நீ வாழும் இடம் தேடி நான் வரும் காலம் வரை உன் நினைவுகளுடன் காத்து இருப்பேன்.