Monday, July 16, 2012

இளையராசாவும் - இரகுமானும்

இவர்கள் இருவரும் இரசிகர்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டு படும் பாடு, அவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் கூட இவ்வளவு கருத்து வேறுபடு இருந்து இருக்க வாய்ப்பே இல்லை.

இராசாவின் இரசிகனாக இருந்தால் இரகுமானை கண்டபடி திட்டி தீர்க்கவேண்டும், இல்லை அவருக்கு இசையறிவு இல்லை, அப்படி இல்லை என்றால் இராசா அளவிற்கு இல்லை என்றாவது மட்டம் தட்டவேண்டும் என்று இவர்களுக்குள் வேண்டுதல் போலும்.

இரகுமானின் இரசிகர்கள் கேட்கவே வேண்டாம், இராசாவின் இரசிகர்களாவது பாவம் என்று பார்ப்பார்கள், ஆனால் இரகுமானின் இரசிகர்கள் உண்டு இல்லை என்று செய்துவிட்டு தாம் மறுவேலை பார்ப்பார்கள்.

என்னை பொருத்தவரை இந்த இரண்டு இசைக்கலைஞர்களும் அவரவர் பாணியில் தன்னை நிறுபிக்க என்றும் தவறியதில்லை.

இன்று இசையின் தடம் மாறுகிறது என்றதற்காக இராசாவின் இசை மாசுபட்டது என்று பேசுவது எந்த வகயிலும் பொருந்தாத ஒரு வாதம், முட்டாள் தனமும் கூட.

இராசாவின் பாடல்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டு இருக்கும் நேரத்தில் "வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை" பாடல் நெஞ்சை அள்ளவில்லை என்று ஒருவரும் மறுக்க முடியாது. அந்த இசையின் பரிணாமம் வேறு, இராசா இசையின் பரிணாமம் வேறு. இரண்டும் மனதை வருடிச்செல்லும் தாலாட்டு என்றதில் இரண்டு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கு இராசாவின் பாடல்கள் உயிர் எந்த புது இசை வந்தாலும் கவர்ந்தாலும், இந்த நிலையில் மாற்றம் வரப்போவது இல்லை.

காரணம் சின்ன வயது முதல் தனிவாழ்க்கையின் துவக்கம் வரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிது புதிதாய் தோன்று இராசாவின் இசை மழையில் நனைந்து உரம் பெற்று வளர்ந்த நெஞ்சம். அவரின் ஒவ்வொரு பாடலும் வாழ்கையில் கடந்து வந்த பாதையின் நல்ல நல்ல நினைவுகளை நினைவு படுத்துவது மட்டும் இல்லை, சின்ன வயதாக அந்த காலத்திற்கே அழைத்து சென்று மனது பார்த்துவரும் ஒரு உணர்வை கொடுப்பது தான் காரணமாக இருக்கும்.

எப்படி அந்த பாடல்கள் மனதில் இப்படி ஒரு இராசயண மாற்றம் செய்கிறது. பாடல் காரணமா அல்லது இனிமையான அந்த நினைவுகள் காரணமா என்றால் அது பாடல் தான் முதல் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியும்.

இரகுமானின் வரவுக்கு பிறகு வந்த மாற்றத்தில் சென்னை ஐஐடியில் 10000 வாட் இசை அமைப்பில் நெஞ்சு எலும்புகள் அதிர, ஊர்வசி ஊர்வசி என்ற பாடல் கேட்டு பிரமிக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த பாடலை மறுபடியும் கேட்கும் போது மனது அவ்வளவு இனிமையாக அந்த காலத்தை சென்று பார்த்து வருவது இல்லை தான். அப்படி ஒரு இராசாயண மாற்றம் கொள்ளுவதும் இல்லை.

காரணம் இதுவாக கூட இருக்கலாம், வானொலிகளானாலும் சரி, தொலைகாட்சிகளானாலும் சரி. ஒரு மணி அல்லது இரண்டு மணி வரை புதுவரவுகளை கொடுத்தாலும் மீதம் இருக்கும் நேரத்தை இராசாவும், அவருக்கும் முன்னால் உள்ளவர்களும் தான் ஆகிரமித்து கொள்கிறார்கள்.

இதிலே இப்போது இரவு நேரத்தை ஆக்கிரமிப்பதில் இராசாவும் ஆதிக்கம் செலுத்துகிறார். அடுத்த பாட்டை கேட்டுவிட்டு தூங்கிவிடலாம், அட அடுத்தது இன்னமும் இனிமையாக இருக்கிறதே, அட அடுத்தது இன்னமுன் இனிமையாக இருக்கிறதோ என்று கணக்கில் அடங்கா நேரம் தூக்கத்தை விட்டு விலகி மனது பழைய நினைவுகளில் நைத்து துவைத்து காயப்போடுவிடுவார் இராசா. காலையில் எழுந்து வரும் போது தவத்தில் இருந்து எழுந்தவரை போல் மனதில் அப்படி ஒரு அமைதி நிலவும்.........

இந்த அளவிற்கு எண்ணிகையிலும் சரி, விதங்களிலும் சரி முதல் இடத்தில் இருப்பது இராசா என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு முன் இசையமைத்த இசையமைப்பாளர்களுக்குத் தான் இரவு நேரம் என்று ஒதுக்கிவைத்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. மனதை அள்ளும் மெல்லிசையாகவும், வார்த்தைக்கு வார்த்தை கருத்துகளை அள்ளிவீசும் போர்வாளாகவும் பழைய பாடல்கள் மனதை தாலாட்டும் விதமே தனி சுகம்.

வார்த்தைகளுக்கு மெட்டா மெட்டுக்கு வார்த்தைகளா என்று பிரித்து பார்க்கமுடியாத இரகம் அவைகள். இதையும் தாண்டி, நமக்கு பிடித்த பாடல் என்று அழகாக அதிகம் சிரமம் இல்லாமல் எவரும் பாடி பார்க்கவும் முடியும் படி பாடல்கள் அமைந்து இருப்பதுவும்......

இப்படி எந்த எந்த காரணங்களை கொண்டு வந்து ஞாயப்படுத்தி பார்த்தாலும் அந்த பழைபாடல்கள் பிடித்து போவதற்கு சரியான காரணங்களாக அவைகள் இருக்க போவது இல்லை. உண்மையான காரணம், எளிமையாகவும், இனிமையாகவும் இருபது தான் காரணமாக இருக்கும். அது மட்டும் இல்லாமல், நமது மன உணர்வுகளை அழகாக மிகைபடுத்தி நமக்கே காட்டும் பாடல்களாக அவைகள் இருப்பதும் தான் காரணமாக இருக்கும்.

அதிக புதிய பாடல்கள் வந்துக்கொண்டு இருப்பதாலும், அலுப்பு தட்டும் இடி இசைகள் மனதை இடிப்பதுவுமாக இருப்பதாலும், மனது மெல்லிசையை தேடி அலைகிறது, இராசாவின் ஆர்ப்பாட்டமான இசைக்கூட மெல்லிசையாக மனதிற்கு தோன்ற வைத்த பெருமை இந்த கால இடி இசைகலைஞர்களை தான் சேரும்.

இரகுமானிடம் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் இடத்தில் தான் நாம் இன்றைக்கு இருக்கிறோம். இந்த ஏமாற்றத்தை அவர்தான் நிறப்ப வேண்டும். வருடத்திற்கு 3 படங்கள் வரை ஆலிவுட்டில் வருகிறது. வருமானத்தையும் தாண்டி புகழுக்காக தமிழில் அவர் இனி இசை அமைப்பாரா என்றதே சந்தேகம் தான். அப்படியே தமிழில் இசை அமைத்தாலும் மனதை வருடும் இசையாக அமைந்தாலும் எத்தணை படங்கள் இசையமைத்து விடப்போகிறார்.

ஏமாற்றம் அடைந்த இரசிகராக மற்ற இசையமைபாளர்களின் பாடல்களை கேட்டு தலையசத்து காலம் தள்ளுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அந்த காலத்தில் வி குமார் என்ற ஒரு இசையமைப்பாளர் இருந்தார். அவரது பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும் அருமையாகவும் இருக்கும். ஆனால் குறைந்த அளவிலேயே அவரால் பாடல்கள் கொடுக்க முடிந்தது.

தனது இரசிகர்களை ஏமாற்றிவிட போகிறாரா அல்லது தானும் மற்றவர்களை போல் மக்களின் மனதில் என்றைக்கும் தாலாட்டாக இருக்க முயற்சிகள் மேற்கொள்கிறாரா என்று பார்ப்போம்.

இராசா இந்த மாதிரியான கணக்குகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு என்றைக்கும் இருப்பார் இராசாவாக. அவர் ஒரு தனி சாம்ராசியம். புதிதாக வளர்ந்துவரும் இயக்குனர்கள் தயங்காமல் அவரின் இசையை கேட்டு வாங்கி எங்களுக்கு கொடுக்க வேண்டும் செய்வார்களா புதியவர்கள்....................

இரா.நல்லகண்ணு அவர்களுடன் ஒரு சந்திப்பு -2012

2012 பெட்நாவில் கலந்துக்கொண்டு விட்டு நாடு திரும்பும் முன் அமெரிக்க தமிழர்களை சந்திக்கும் பயணமாக சிக்காகோ வந்த ஐயா நல்லகண்ணு அவர்களை சந்தித்தோம் ஒரு கலந்துரையாடலுக்காக.

சிறிய கூட்டமாக இருந்தாலும் தயக்கமே இல்லாமல் எங்களுடன் கலந்துரையாடினார். அரசியல் மேடையாக இல்லாமல் இந்தியர்கள் தமிழர்கள் என்ற முறையில் நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தயக்கம் இல்லாமல் பதிலுரைத்தார்.

பொதுவுடமை கொள்கையில் ஊறிப்போய் இருந்தாலும் அமெரிக்க மக்களையும், அமெரிக்க நாட்டையும் பார்த்து பாராட்ட தயங்கவில்லை. இந்த பெருந்தண்மை அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் வேண்டும்.

கலந்துரையாடலில் முக்கியமாக விவாதிக்க பட்டவைகளில் ஒன்று தமிழகத்தின் அரசியல் போக்கு நல்லவிதமாகவோ ஆரோக்கியமாகவோ இல்லையே என்று கேட்டதற்கு ஆமாம் அப்படித்தான் இருக்கிறது. இன்னமும் மோசமான நிலைமையை நோக்கித்தான் செல்கிறது என்றார்.

இந்த நிலையை மாற்ற வழிதான் என்ன என்ற கேள்வி விவாதிக்கப்படாமலே காலத்தின் கைகளில் விட்டுவிட்டோம்.

கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் ஊர் பெயர்களையும் தெரிந்துக்கொண்ட அவர், அந்த ஊர் பற்றிய இன்றைய நிலைகளையும் குறிப்பிட்டார்.

87 அகவை நிறம்பிய அவர் அமெரிக்காவிற்கு தனியாக பயணத்திற்கு வந்து பல ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது பிரமிப்பாக இருந்தது.

ஒரு அரசியல் பிரமுகராக இல்லாமல் சாதாரண மனிதனின் பார்வைகளில் பிரச்சனைகளை விளக்கிய விதமும். தனது ஐரோப்பிய பயணத்தில் அந்த நாட்டு மக்களிடம் கேட்ட சுவையான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். உதாரணமாக, "இந்தியர்கள் எல்லாம் திருமணத்திற்கு முன் தனக்கு வரப்போகும் மனைவியை பார்த்தது இல்லையாமே என்று நக்கலாக கேட்டதிற்கு, இங்கே நீங்கள் எல்லாம் திருமணத்திற்கு பிறகு தங்கள் மனைவிகளை எல்லாம் பார்க்க முடிவதில்லையாமே என்று பதிலடி கொடுத்ததை குறிப்பிட்டார்"

திறந்த மனதுடன், கேள்விகளுக்கு அரசியல் சாயல் இல்லாமல் ஒரு பொது மனிதனாகவும். பொறுபான பதில்களையும் அவர் அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

அமெரிக்க இனவெறியும் இந்தியாவின் சாதி வெறியையும் பற்றிய பேச்சு வரும் பொழுது, கிருத்துவர்களின் இனவெறி மறுப்புக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார்.

அமெரிக்க கிருத்துவ பாதிரிகள் கருப்பர்களை இன்னமும் முழுமையான மனிதனாக பரிணாமம் கொள்ளாத விலங்கு என்று உரைத்த கிருத்துமத போதனைகளை மறுத்து இனவெறி பாவம் என்று சொல்லுகின்ற இன்றைய நிலையை விளக்கி கிருத்துமதம் இன/சாதி வெறிகொள்ளா மதம் என்று விளக்கினார்.

இந்த செய்தி எங்களுக்கு புதிதாக இருந்தது அதுவும் அமெரிக்காவில் நடந்த மாற்றம், ஓபாமாவில் தான் வந்தது என்று எண்ணி வந்தோம் இது வரை.

திரைத்துறையில் இருந்து, ஆற்று நீர் பகிர்வு சண்டை வரை தெளிவாக விளக்கம் கொடுத்தார். அவருடன் பேசிக்கொண்டு இருந்தது தாயகத்தை விட்டு இவ்வளவு தொலைவு வந்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருத்த நிலை போக ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்திக்கொடுத்தார்.

இந்திய அரசியலில் கறைபடியா கைகள் அது அனேகமாக பொதுவுடமை கட்சியினரது கைகளாகத்தான் இருக்கும். அந்த வகையில், 87 ஆண்டுகளில் தான் அரசியலில் இருப்பதையோ ஏன் வேறு வேலைகளுக்கு சென்று இருக்கக்கூடாது என்ற தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் இன்றைக்கும் என்னால் என்ன என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று தேடி பிடித்து களப்பணியாற்றும் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துகொள்கின்றோம். நல்லோர் ஒருவர் உளரேனும் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை குறள் மனதில் வந்து செல்கின்றது.

அழிந்து கிடக்கும் அரசியலிலும் தூய்மையாக வாழ்ந்து நேர்மையாக களபணியாற்றலாம் என்று நிறுபித்து, தடுமாறி நிற்கும் இளைய சமுதாத்திற்கு அரசியலுக்கும் தாராளமாக வரலாம் என்று இடித்து உரைத்த உங்களது கருத்துகளுக்கும் நன்றி. வாழ்க உங்களது பணி, சிறக்கட்டும் மென்மேலும்.

Thursday, July 12, 2012

என்னை ஏன் அவனுக்கு பிடிக்கவில்லை.......

எல்லோரையும் போல தான் நானும் எனது வாழ்வை துவங்கினேன். அவனும் அப்படி தான். பிறகு ஏன் இந்த பிளவு.

சரி இன்றைகு சரியாகும் நாளைக்கு சரியாகும் என்று நாட்கள் தான் தொலைந்தது. நாட்களோடு சேர்ந்து எனது இளமையும், வாழ்க்கையும் தொலைந்தது.

அப்படி என்ன தான் செய்தேன் இன்று வரை யோசித்த்து தான் பார்கிறேன் ஒன்றும் தெரிய இல்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனது கடமைகளை எல்லாம் செய்தேனே. கடமையே என்று இருந்தற்கு காலம் என்னை கேலி பேசுவது சரியா....

எத்தனை எத்தனை செயல்களை எல்லாம் யோசித்து யோசித்து சரி செய்தாகிவிட்டது. இன்னமும் மீதம் என்ன இருக்கிறது எனது உயிரை தவிர விடுவதற்கு, இருந்தும் எந்த பதிலும் இல்லையே.....

எனக்கு போல் அவனுக்கும் மனது என்று ஒன்று இருக்கும் தானே அதற்கு இது எல்லாம் கிடையதோ அல்லது ஆண்களுக்கு மனது என்ற ஒன்றே கிடையாதோ.....

ஒரு வேளை பேசி சண்டையாவது போட்டிருக்கலாம், இல்லை கோபம் தீரும் வரை என்னை அடித்தாது தீர்த்து இருக்கலாம் இப்படி எதுவுமே இல்லாமல்.........

ஒரு வேளை நான் அதற்கு கூட தகுதி இல்லாதவளோ.......

இலவு காத்த கிள்ளை போல இத்தனை காலம் காத்து கிடந்தது எல்லாம் வீண் தானே.....

வேலை பார்த்து சம்பாத்தித்து கொடுத்து இருந்திருந்தால் திருப்தி பட்டிருப்பானோ. இல்லை நடிகைகளை போல் வேடம்மிட்டு தினமும் நடித்திருந்தால் ஒரு வேளை பிடித்திருந்திருக்குமோ.....இல்லை நானே தொலைந்து விடுகிறேன் என்று ஓடி ஒழிந்து இருந்திருந்தால் மனதளவிலாவது வருந்தி இருப்பானோ.......

எல்லாம் தான் இருந்தது வீட்டில், ஆனால் மனதில் தான் எதுவுமே இல்லை. ஒரு வேளை வீட்டில் உள்ளவைகள் தான் எனக்கு மகிழ்ச்சி என்று நினைத்தானோ, இல்லை அப்படி தான் அவன் மனதில் படும்படி நடந்துக்கொண்டேனோ......கேட்டத்துக்கு எல்லாம் பணம், என்ன கேட்டாலும் மறுப்பே இல்லாமல் கிடைக்கும்......ஆனாலும்......

இவ்வளவு இருந்தும் அவனது முகம் பார்க்க தினமும் நான்படும் தவிப்பு அவனுக்கு புரியாமலேயே போனது ஏனோ....இல்லை எனக்கு தான் எனது தவிப்பை வெளிக்காட்ட தெரியவில்லையோ...... நாடகங்களில்... ஏன் கண்ணால் காணாத கதைகளின் நாயகிகளின் தவிப்பை எல்லாம் தவறாமல் படித்து புரிந்துக்கொள்ளும் இவனுக்கு உயிருள்ள எனது தவிப்பு புரியாமல் போனது ஏனோ......

நித்தமும் இணையம், மீதி நேரங்களில் தொலைக்காட்சி, அடுத்து அடுத்து வரும் படம் என்னை தினமும் வரிசையில் கடைசியில் நிப்பாட்டி எனது நேரம் வரும் போது மட்டும் கடையடைப்பது எப்படி தினமும் வாடிக்கையானது அவனுக்கு.............

குழந்தைகள் அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மதிப்பது இல்லை, கண்டிக்க நேர்ந்தால் தனது புன்னகையால் நம்மை கொள்ளை கொள்ளும். என்னை தினமும் அப்படி தான் இவனும் கொள்ளை கொள்வான்...... அந்த குழந்தை சிரிப்பும், குறும்பு பார்வைக்கும் என்றைக்கும் குறைச்சல் இல்லை........

நானும் தான் சிரித்து பார்க்கிறேன் குழந்தையை போல நிமிடத்திற்கு நூறுவரை அவனை கவராமல் போகும் எனது புன்னகையை நானே வெறுக்கிறேன்......அதே புன்னகை போல் தான் எனது புன்னகையும் கண்ணாடியில் எனக்கு தெரிகின்றது ஆனாலும் அவனால் இரசிக்க முடியாமல் போனால் கூட பரவாயில்லை, கவனிக்க கூட முடியாமல் போனது ஏனோ.......

பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று தான் சொன்னார்கள், ஆனால் இவனோ எவ்வளவு முன் நான் எழுந்தாலும் வெளியில் வரும் வேளையில் தலையை துவட்டிக்கொண்டு இருக்க எங்கே பழகிக்கொண்டானோ. ஒரு வேளை எனது மனதில் தோன்றுவது எல்லாம் இவனுக்கு தெரிகின்றதோ.........

ஒரு ஆணாய் என்னை எல்லாவிதத்தில் ஆண்டானே என்னால் அவனை பெண்ணாக ஆள முடியாமல் போனது ஏனோ. இல்லை ஆண்டு தான் இருந்தேனோ எனக்கு தெரியவில்லை.....

இடியே இறங்கினாலும் அசையாத ஒரு புன்னகை எப்பொழுதும் புதிதாய் மலர்ந்த ரோசாவை போல். ஒரு இம்மியே ஆனாலும் எனது முகம் மட்டும் அவன் எப்பொழுதும் சொல்வது போல் அத்தனை கோலம் கோனுவது ஏனோ......எல்லா பெண்களும் அப்படி தானே இருக்கிறார்கள் மற்றவர்களை மட்டும் எப்படி இரசிக்கிறான்......

 நான் கேட்காமலே எல்லாமும் கொடுப்பான். நானோ கொடுக்க காத்துக்கொண்டு இருந்தும் எதுவுமே கேட்காமல் என்னை அவமானம் படுத்தியது ஏனோ கடைசிவரையில்..........................

அவனை ஆசை தீர பழிவாங்க வேண்டும், ஆனால் எப்படி வாங்குவது........... கண்கலங்க விட்டது இல்லை என்னை. அழுத முகத்தை பார்த்ததும் ஆயிரம் விசாரிப்புகளில் மூழ்கிபோய் எதற்கு அழுதோம் என்றே மறந்து போகும்.......வசீகர விசாரிப்பு அவனுக்கும் மட்டும் எப்படி சாத்தியமோ.......

எனக்கு என்ன வாங்கி தரவேண்டும் என்று நினைக்கும் நாளிலே மாலையில் கையில் அவன் அதை பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போது வரும் வெறுப்பை எங்கே கொண்டு கொட்டுவது. வாங்கித் தந்தானே என்றதை விட கேட்க விடாமல் போனானே என்ற எரிச்சல் தான் மிஞ்சும் ஒவ்வொரு முறையும்.....

எதை கேட்டாலும் சலிக்காமல் பேசுவான், திறந்த மனதுடன் விவாதிப்பான், ஆச்சரியப்படும் கருத்துகளை எனது சிந்தைக்குள் சொலுத்துவான்......... இன்னமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலையில் ஒலிக்கும் அலை பேசி ஒரு பெரிய சங்கு ஊதும்.......தொலை பேசி கண்டுபிடித்தவனை கொல்ல வேண்டும் என்று இருக்கும்................

எவ்வளவு தாமதமாக தூங்கினாலும் அடுத்த நாள் அதே சுறுசுறுப்பு எங்கே இருந்து தான் அவனுக்கு மட்டும் வருகிறதோ........ ஒரு அரை மணி நேரம் தூக்கம் கெட்டாலும் அடுத்த நாள் முழுவதும் வரும் கொட்டாவியை அடக்க என்னால் மட்டும் ஏன் முடியவில்லை......

காலை மாலை இரவு என்று எப்போது நேரம் கிடைக்கிறதோ அந்த வேளையில் குழந்தையை போல் படுத்தது தூங்க அவனால் மட்டும் எப்படி முடிகின்றது. மந்திரவாதியோ, இல்லை அந்த அளவிற்கு கொடுத்து வைத்தவனோ......  

ஊருக்கு என்று ஒன்று வந்தால் இரவு பகல் பார்க்காமல் எப்படி இவனால் மட்டும் அலைய முடிகிறது இந்தனை வருடமாக. எப்போது தான் போதும் எனறு சலிப்பு வரும் என்று தவம் கிடந்து தோற்றுத்தான் போனேன்.........

துணிமணிகளாகட்டும், முகச்சவரம் ஆகட்டும் அவ்வளவு நெளிவாக எல்லாம் இல்லை ஏனோ தானோ என்று தான் இருப்பான், இருந்தாலும் திரும்பி பார்க்கும் போது அந்த ஒரு சின்ன புன்னகையால் அவ்வளவையும் மறைக்க எங்கே தான் கற்றுக்கொண்டானோ.......

ஆயிரம் ஆயிரம் விதங்களில் நான் சமைத்தாலும் ஊருக்கே அவன் சமைக்கும் பிரியாணி என்றால் உயிர், எத்தனை முறை முயன்றாலும் ஒரு நாள் கூட கைகூடாத இரகசியம் என்ன? பாத்திரம் கழுவும் நிலையில் ஒருந்து பிரியாணி இறக்கும் வரையில் கூடவே இருந்து பார்த்தாகிவிட்டது எண்ணில் அடங்கா முறை. இருந்தாலும் அந்த பதம் இன்னமும் எனக்கு கற்பனையே.........யாரை நோக........

எங்கே சென்றாலும் தெரிந்தவர்கள் அவனை மட்டும் அப்படி ஒரு விசாரிப்பு விசாரிப்பது ஏன்..... நானும் கூடவே தான் இருக்கிறேன், ஒரு பெண்ணாக  வேண்டாம் ஒரு பொருளாகவாது என்னை மதிக்கலாம் அல்லவா.........அதற்கு கூடவா தகுதி இல்லாமல் போய்விட்டேன்....... பிடித்து காட்டு கத்து கத்தவேண்டும் என்று இருக்கும்........மனதுக்குள் கத்துவதோடு சரி...........

இப்படியே எத்தனை காலம் தான் போவது, என்னால் இருக்க முடியவில்லை நான் போகிறேன் என்று சொன்னதும், போ என்று சிரித்துக்கொண்டே சொல்லி என்னை கடைசியாகவும் தேற்கடித்தானே என்னத்தை சொல்ல. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாமல் நகர்ந்தவளை அப்படியே வழி அனுப்பி மீண்டும் அந்த புன்னகையுடன் மறைந்தானே.........ஒரு வேளை அவனுக்கு என்னை பிடிக்கவே இல்லை போலும்...........அது தான் போ என்று விட்டு விட்டானோ.........

Wednesday, July 11, 2012

விருமாண்டி - பாகம் 2 - தலையங்கம்: "செயற்கரிய' சாதனை!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=617100&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont%20color=%22red%22%3E%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%20%3C/font%3E%20%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF

தலையங்கத்தை படிக்க படிக்க விருமாண்டி படத்தின் 2ஆம் பாகத்தை பார்த்தது போல் இருந்தது.

இந்தியா செல்லும் பாதை மிகவும் கவலைக்குறிய பாதையாக இருக்கிறது. பணம் படைத்தவர்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலை இன்னமும் வலுவாகிக்கொண்டு வருவது நல்லது அல்ல.

ஓட்டுனர் உரிமம் வாங்குவதில் இருந்து தூக்கு தண்டனை வரை கையூட்டு விளையாடலாம் என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்றைக்கும் வாய் பொத்தி நிற்கும் நிலை தானோ.......என்ன அதிகார உலகமடா.....