Monday, April 11, 2011

தமிழகம் மறுபடியும் கசப்பு மருந்து சாப்பிட தயாராகிக்கொண்டு இருக்கிறது

அதிமுக தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் போலும். யாரை கேட்டாலும் பிறகு அந்த குடும்ப அரசியலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

சரி குடும்ப அரசியல் இல்லாமல் போனால் மன்னார்குடி அரசியல். என்ன பெரிதாக மக்களுக்கு மாற்றம் வந்துவிட போகிறது. இன்றைகு குடி ஒரு பெரிய பிரச்சனை என்றும் அதன் பொருட்டாவது குடும்ப அரசியலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றது அவர்களது விருப்பம்.

டாசுமார்க்கை இவ்வளவு பெரிய நிறுவனமாக மன்னார்குடி குடும்பம் அல்லவா ஆக்கியது.

அன்றைக்கு மன்னார்குடி குடும்பம் தொடங்கிய சாராய தொழில் இன்றைக்கும் ஆட்சியில் இல்லை என்றாலும் அமோகமாக அல்லவா நடக்கிறது. அந்த அளவிற்கு கட்சி பேதம் இல்லாமல் தொழில் செய்யும் கசப்பு மருந்து கட்சி தான் திமுகவின் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகிறதா....

மன்னார்குடி குடும்பகும் பெரியகுளம் குடும்பமும் சென்றமுறை அடித்த கொட்டம் இருக்கிறதே அப்பா என்ன கொடுமை. உதாரணத்திற்கு நினைவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றை சொல்வோம்.

படித்த பட்டதாரிகளும் மற்ற அனைத்து படிப்பு நிலைகளிலும் என்றைக்காவது அரசு பணி கிடைக்காதா என்று அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கும் பட்டதாரிகளை அதுவும் பெண் பிள்ளைகளை டாசுமார்க்கு ஊத்திக்கொடுக்கும் வேலைக்கு அனுப்ப அரசு ஆணை அனுப்பினார்களே அதை மக்கள் மறந்துவிட்டார்கள் போலும்............

இந்த செய்கையின் மூலம் அதிமுக என்ன சொல்கிறது, நீங்கள் எல்லாம் படித்து என்ன செய்ய போகிறீர்கள் டாசுமார்க்கில் ஊத்திக்கொடுக்கத்தான் இந்த படிப்பு எல்லாம் உதவும் என்று நடுத்தர வர்கத்தையே அல்லவா கேலி செய்த்தார்கள். என்ன ஒரு அகங்காரமான செயல் அந்த செயல். இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலில் இருந்து விடிவு கொடுக்கப்போகிறதாம்.

மன்னார்குடி குடும்பம் இந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள தொழில்களை வாங்கிப்போடுவதில் மும்முரமாக இருந்தது. தங்கும் விடுதிகள் முதல் அந்த அந்த இடங்களில் என்ன என்ன தொழில் நல்ல நிலைக்கு நிலைத்து இருக்குமோ அந்த மாதிரியான தொழில்களை வாங்கிப்போட்டுள்ளது. இத்த செயலுக்காக நடராசனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய அணியே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அதுவும் எப்படி தமிழகத்தில் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அந்த பணத்தை அமெரிக்காவில் கொண்டு கொட்டும் இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகின்றதாமாம்.

திமுக குடும்பம் தான் குடும்பமாம் மன்னார்குடி குடும்பம் பெரியகுளம் குடும்பம் எல்லாம் குடும்பம் இல்லையாம் செயலலிதா சொல்கிறார், மன்னார்குடி குடும்பம், குடும்பம் குடும்பமாக அந்த கூட்டத்தில் உட்கார்ந்துக்கொண்டு அதையும் கைகொட்டி இரசித்து கை தட்டுகிறது. என்ன நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு.

சென்றமுறை அதிமுக வந்ததும் திமுக கசானாவை காலி செய்துவிட்டு தான் சென்றது. ஆகவே எல்லோரும் கசப்பு மருந்து சாப்பிடுங்கள் என்று நடுத்தர மக்களின் பணிக்கொடையிலே கைவத்து அதிலே எலிகாப்டர் ஏறி கை அசைத்து நன்றி என்று சொல்லி ஐதிராபாத்திற்கும் கொடா நாட்டிற்கும் மாறி மாறி ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார் இந்த கும்பகர்ணியம்மா.

இந்த முறை இமாலய இலவசங்களை கொடுத்து கசானா மட்டும் இல்லை உலக வங்கிக்கு தமிழகத்தையே விற்று விட்டார்கள் அதனால் வெறும் கசப்பு மருந்து மட்டும் போதாது, இனி தமிழகத்தில் அதுவும் நடுத்தர வர்கத்தினர் ஒரு வரும் சாப்பாடு கூட சாப்பிடாமல் 365 நாளும் விரதம் இருக்கவேண்டும் என்று கட்டளை இடுவார். பிறகு மிச்சமாகும் அந்த காசுகளை கொண்டு மன்னார்குடி குடும்பம் டாசுமார்க்கை தொடர்ந்து தமிழகம் எங்கும் நிர்வாண நடன அரங்குகளை தொடங்கி அதற்கு அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை பணியமர்த்தும். கேட்டால் ஏன் அது எல்லாம் வேலை இல்லையா என்று நக்கலாக வேறு கேட்ப்பார்கள் மன்னார்குடி குடும்பமும் பெரியகுளம் குடும்பமும்.

ஆட்சி என்றால் என்ன என்றே தெரியாவர் எல்லாம் அதிமுகவின் பொது செயலர், அவர்களின் அரசில் திட்டங்களை எல்லாம் தீட்ட தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்கள் சி.பொன்னையனை போல. இந்த கூட்டம் வந்து அங்கே அமர்ந்ததும் இந்திர குமாரி வகையராக்களும், கராத்தே தியாகராசன்களும் தான் தினமும் களமாடுவார்கள்.

செயலலிதா ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடப்பார், மன்னார்குடியும் பெரியகுளமும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தமிழகத்தை ஏற்றுமதி செய்துக்கொண்டு இருக்கும். தமிழகத்தில் இப்போது மனை நிலங்கள் எல்லாம் நல்லவிலைக்கு ஏற்றம் கொண்டுள்ளது. அதனால் அந்த மனைகளை மக்களிடம் இருந்து அடித்து பிடுக்கும் வேலையை முதல் முதலே மன்னார்குடி குடும்பம் இறங்கும். கொடு இல்லை என்றால் வீட்டிற்கு வண்டி வரும் என்று மிரட்டி வெறும் 1000 ரூபாய்களுக்கு விற்றதாக சொல்லி எழுதிவாங்குவார்கள்.

ஏன் என்று கேட்டால் வக்கீல் விசயனை 10 போர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலே விரட்டி விரட்டி வெட்டினார்களே அதுபோல வெட்டுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.

தப்பி தவறி மத்திய அரசுக்கு சொல்வோம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று சொல்லிக்கொண்டு வந்தால் மணிசங்கர் ஐயரை வண்டியிலே ஓட ஓட விரட்டி வெட்டினார்களே அது போல அழகாக போட்டு தள்ளுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.

இது எல்லாம் சரியாக வராது என்று ஆளுனரிடம் செல்லலாம் என்று சென்றால், அங்கே என்னை மான பங்கபடுத்தினார்கள் என்று மன்னார்குடி குடும்பம் ஒரு பெரிய கூட்டத்தை அழைத்துவந்து வழக்கு போட்டு அந்த ஆளுனரை வீட்டிற்கு அனுப்பிவிட்டி பாத்திமா பீவிவை மறுபடியும் கொண்டு வந்து வையுங்கள் என்று மத்திய அரசுக்கு ஆணை அனுப்புவார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தண்ணீர் பஞ்சம் வரும், அப்படி இந்த முறையும் வந்தால் எடியூரப்பா ஒரு ஏமாற்றுகாரன் அச்சுதன் ஒரு அசட்டு பேர்வழி என்று ஏகவசனம் பேசி இன்னமும் பஞ்சம் தலைவிரித்தாட வழி வகுப்பார்.

சென்ற முறை பனிக்கர் வெறும் யானைக்கு மட்டும் தான் புணர்வு யாகம் நடத்தவேண்டும் என்று சொன்னார். இந்த முறை ஆடு கோழியில் இருந்து டைனோசரசு வரை எல்லாம் முது மலை காட்டுக்குள் அசுவமேத யாகமே நடக்கும்.

சந்திரலேகா முதத்தில் அமிலத்தை ஊற்றி சிபிக்கு நிறுவனத்தை அமுக்க நினைத்ததை போல் இந்த முறை யார் யாருக்கு எல்லாம் அமில மழையோ கடவுளுக்கோ வெளிச்சம். ச்டெர்லைட் நிறுவனம் ஏற்கனவே வைக்கோவுக்கு அமிலம் ஊற்ற தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னமுன் எந்தனையை தமிழகம் பார்க்க போகின்றதோ.......

இதை எல்லாம் தப்பு என்று யாராவது சொல்லி ஊர்வலம் அது இது என்று நடத்தினால் சென்னையில் திமுக பேரணியில் பத்திரிக்கை நண்பர்கள் கதறிய கதறல் நினைவில் இல்லையா உங்களுக்கு எல்லாம். இந்த மன்னார்குடி குடும்ப அரசியல் தான் திமுக குடும்ப அரசியலுக்கு மாற்றாம் மக்கள் நினைகிறார்களாம். பாவம் இவர்களுக்கு எல்லாம் இவைகள் யாவும் மறந்து விட்டது போலும்.

என்ன கேட்டால் அந்த அந்த ஊரில் நிற்கு சுயேச்சை மக்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எந்த கட்சியும் எங்களுக்கு வேண்டாம் என்று தெளிவாக சொல்ல வேண்டும். அப்படி பெருவாரியாக சுயேட்சைகளே வெற்றிபெறும் கால் இந்த அறிவுகெட்ட அரசியல் வாதிகள் கொஞ்சமாவது மக்களை பார்த்து பயம் கொள்வார்கள். இல்லையேல் கசப்பு மருந்த நமக்கு கொடுத்துவிட்டு நன்றாக பட்டை நாமத்தை சாத்திவிட்டு மன்னார்குடி அமெரிக்காவிலும் குடும்ப அரசியல் சிங்கப்பூரிலும் சென்று மறைவார்கள்..............

Tuesday, April 5, 2011

நாடு என்றால் இப்படி இருக்கனும் - சப்பான்

தனக்கு பழிவாங்க வேண்டும் என்று ஓர் இரவில் 140000 மக்களை கொல்வது எல்லாம் சாதணை ஆகாது, இப்படி நாட்டின் அத்தியா அவசிய காலத்தில் போர்கால நடவடிக்கையாக நடந்து காட்ட வேண்டும். நல்ல வேளை அங்க கல்மாடி இல்லை, இருந்து இருந்தால் ஆவ்...........

சென்னை மற்றும் நகர்புரங்களில் திமுக அதிமுக அதிக வாக்குகளை பெற என்ன செய்ய வேண்டும்.

எத்தனையோ இலவசங்களை போட்டி போட்டுக்கொண்டு திமுகவும் அதிமுகவும் அறிவிக்கின்றது. இவைகள் எல்லாம் கீழ் தட்டு மக்களை மட்டுமே கவரும் விதமாக இருக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றி வாய்ப்பை நிர்னயிக்கும் சக்தியாக அமையும் நடுத்தர வர்கத்தை கவரும் விதத்தில் எந்த ஒரு இலவசமும் இல்லை.

45% முதல் 55% விகிதம் வரை கட்சிக்காரர்களின் ஓட்டு தான் விழிமே, வெற்றிகு வித்திடும் அந்த 10 முத 15% வரை உள்ள வாக்குகளை பெற்றால் தான் வெற்றி. அந்த வாக்குகளை கொடுப்பவர்களாக இருக்கும் நடுதர வர்கத்தினரை கவரும் விதமாக இவர்கள் எதுவும் அறிவிக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இன்றைய நடுதர குடும்பத்தின் தேவை என்ன, எங்க செல்ல வேண்டும் என்றாலும் உடனே ஆட்டோ பிடித்து தான் செல்ல வேண்டும். அப்படி சொல்லும் ஆட்டோக்கு அழும் காசு இவ்வளவு அவ்வளவு என்று இல்லை. சொல்ல முடியாத அளவில் கொட்டுகிறார்கள் அவர்கள். அந்த ஆட்டோ இனிமேல் இலவசம் என்று எந்த கட்சி சொல்கிறதோ அந்த கட்சிக்கு நடுத்தர வர்கத்தின் 15 முதல் அதிகபட்சமாக 25% வரை இதற்கு ஓட்டளிக்ககூடும். ஆலோசிப்பார்களா இருவரும்.................

Friday, April 1, 2011

இலங்கை இப்படி உலக கிண்ணத்தை வெல்ல நினைக்காமல் இருந்தால் சரி தான்

இராசபட்ச்சே மனமோகனை கூப்பிட்டு, இந்தா பாருங்க உங்க பசங்க சரியா விளையாடாம என்ன செய்வாங்கலோ ஏது செய்வாங்களோ அது எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இலங்கை தான் கிண்ணத்தை வெல்லனும். அப்படி மட்டும் நடக்குல, சீனாவையும் பாக்கிட்த்தானத்தையும் கொண்டு வந்து உங்க நாட்டு கால் அடியில வச்சு கல்பாக்கம் அணுமின் உலையை சப்பான்ல உடஞ்சது போல உடைக்க வச்சுடுவேன்னு மிரட்ட. மனமோகனும், இக்கி இக்கி அப்படி எல்லாம் ஒன்னும் செஞ்சு புடாதீங்க, என்ன உங்க பசங்க வெல்லனும் அம்புட்டு தானே என்று சொல்லி இந்திய வீரர்களை நாட்டு பற்றை காட்டி மிரட்டி உருட்டி வைக்காமல் இருக்கனுமே.

இந்தியாவுக்கு தான் சீனா, பாக்கிட்த்தானம் கொல்லையில வரும்ன்னு சொன்னா என்ன வேண்டுமுனாலும் செய்வாங்களே.......

இந்தியா பாக்கிட்த்தான் அரைஇறுதி கிரிகெட்போட்டி - குட்டி பகை தாய் உறவாம்

இந்த போட்டி நடக்கப்போகிறது என்று முடிவானது முதல் போட்டியின் கடைசி பந்துவரை பரபரப்புக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை.

போட்டி நடந்த மைத்தானத்திற்கு போட்டி நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னமே வந்துவிடவேண்டும் என்ற கட்டாயத்தில் அனைவரும் வரவழைத்ததும்.

போட்டியை கானவந்த பிரபலங்கள் முதல் அடி மட்ட இரசிகன் வரை அனைவரும் விரல் நகம் இழந்த படியாக போட்டியை இரசித்ததை பார்க்க முடிந்தது.

மைதானத்தை சுற்றி விமான எதிர்ப்பு பீரங்க படை பாதுகாப்பில் போட்டி நடந்தது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. 8+3 மணி நேரமும் என்னவாது நடந்து விடுமோ என்ற தவிப்பில் இந்திய பாதுகாப்பு துறை அலரியப்படி இயங்கியது தான் யாருக்கும் தெரியுமா.

வீட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் ஒரு கதவு போட்டி மூடி மறைத்துவிட்டு சிரித்துக்கொண்டே வாங்க என்று சொல்வது போல் அல்லவா இந்த போட்டியை இந்தியா நடத்திகொடுத்துள்ளது.

இந்த போட்டியை கான கிலானி எதற்கு வரவேண்டும். இத்தனை கெடுபிடிகளுக்கு இடையே அவரை வர சொல்லி இவ்வளவு செலவுகளை இந்தியா செய்யத்தான் வேண்டுமா என்ன.

இதற்கு பேச்சு நடக்கும் போதே முடியாது என்று சொன்னால் என்ன.

அப்படி என்ன பாக்கிட்த்தானம் என்ன நமது நண்பனா, நம்மை அசந்த சந்தர்ப்பத்தில் கழுத்தை நெரித்துகொல்ல நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும் ஓநாய் அல்லவா அவர்கள். அவர்களுக்கு ஏன் இவ்வளவு மரியாதையும் பாதுக்காப்பும்.

இதே சோனியா, மன்மோகன் சிங்கை அவர்கள் அரசியல் நடத்தும் நாடாளுமன்றத்திலேயே முடித்துவிடும் படி நாடாளுமன்றம் வரை ஆளை ஏவிய பாக்கிட்த்தானத்தின் அதிபருக்கா இந்த மரியாதையும் பாதுகாப்பும்.

ஆடுகளத்திலே இந்திய வீரர்கள் காட்டிய வீராப்பில் 100ல் ஒரு பங்குகூட இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லையே. உலகக்கிண்ணம் கூட வேண்டாம் இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்றால் போதும் என்று வீரர்கள் மட்டும் அல்ல, முழு இந்தியாவும் உணர்வதும் சொல்வதும் உங்களுக்கு மட்டும் உறைக்காமல் போனது ஏன். உண்மையிலே அரசியல்வாதிகள் என்றால் மானம் வெட்கம் ஈவு இரக்கம் எல்லாம் அற்று போனவர்கள் என்று சொல்வது சரிதான் போலும்.

கடைசியாக மும்பையில் நுழைந்து பொதுமக்களை கொன்று குவித்து அட்டகாசம் செய்த செயல்கள் வரை தீர்க்கப்படாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் எப்படி உங்களால் இப்படி நயந்து நடந்துகொள்ளமுடிகிறது. வெட்கம், வேதனை, பரிதாபம்.

2003ல் சச்சினும் சேவாக்கும் விளாசிய விளாசல் இந்த போட்டில் கானும். இல்லை என்றால் 7 முறை வாய்ப்பு கொடுத்து சச்சின் வெளியேறுவாரா......

அன்றைகு சச்சினுக்கு பிறகு இந்தியாவின் வெற்றிக்கு திராவிட்டு பொறுப்பாக அழைத்து சென்றார், ஆனால் இந்த போட்டியில் அணியை கடைசிவரை கொண்டு செல்ல வேண்டிய தலைவனே எனக்கு என்ன என்று ஆடினார் போல் தான் இருந்தது.

சேவாக்கிற்கு என்றைக்குமே கவனம் இருந்தது இல்லை. அப்படி அவர் அடிக்கும் ஓட்டங்கள் தான் அணிக்கு ஊக்கம் அளிக்கும், என்ன இன்னமும் இரு 30 அல்லது 40 ஓட்டங்கள் எடுத்து இருந்தால் இன்னமும் ஒரு வலுவான நிலையில் நமது போராட்டம் இருந்து இருக்கும்.....

முன்னாப் பட்டேலை ஒருவரும் மனிதனாகக்கூட மதித்தது இல்லை இது வரை நடந்த ஆட்டங்களில். ஆனால் இந்த போட்டியில் அவரிடம் அதிகம் திணரியதை பார்க்க முடிந்தது. மனிதன் ஆருதலடைந்திருப்பார்.....

எங்கள் அணியில் ஓரம் என்ற ஒருவர் இருக்கிறார் அவர் பந்துகளை மிகவும் நேராக வீசுவார் என்று பகிடி செய்யப்பட்ட நேரா அனைவரது பாரட்டையும் பெற்றது நல்ல மாற்றம். மனிதன் தனது வீச்சில் இன்னமும் அதிகமான வித்தியாசங்களை காட்டி குழப்ப பழகவேண்டும்......

சிக்கலான நேரங்களில் நிதானமாகவும் பொறுப்பாக விளையாடும் யுவராச்சு ஏமாந்தது நம்மையும் ஏமாற்றியதும் கோபமே.....

2003ல் பெற்ற வெற்றியை போல் இது இமாலய வெற்றி இல்லை என்றாலும் நல்ல வெற்றி என்ன கடைசி பந்து வரையில் விட்டிருக்க வேண்டாம்..........

இது எல்லாம் பரவாயில்லை, இறுதி போட்டிக்கு இலங்கை அதிபர் வந்து பார்க்கப்போகிறாராமே. கருணாநிதியையும் உடன் சென்று பார்க்க சொல்லுவோம் சரியாக இருக்கும்.